இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்

இசை வாணி, வாணி ஜயராம் அவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, ஒரியா, என்று பல மொழிகளில், இனிமை நிறைந்த பல ஆயிரக் கணக்கான பாடல்களை, அருமையாக பாடிய, இசை அரசி.

மூன்று தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தான்சேன் விருது, மேலும் பல கௌரவங்கள் ,கலமாமணி போன்ற பட்டங்கள், என்று இவர் பெயரை அலங்கரிக்கும் பெருமைகள், பிரமிக்க வைக்கும்.

டி.டி.கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கியவர், இசை சாம்ராஜ்யத்தில், பல்லாண்டுகள் கொடி கட்டிப் பறந்த சிறப்புடையவர்.

மெல்லிசைப் பாடகியாய், தன் இசைப் புலமையை வெளிப் படுத்தியவர், பின் திரை இசையில், பாரம்பரிய இசை, மெல்லிசை, கிராமிய இசை, ஜனரஞ்சக இசை, என்று எல்லா வித சங்கீதத்திலும் முத்திரை பதித்து, கணக்கற்ற இசை ரசிகர்கள் இதயத்தில், வைரம் இழைத்த தங்க சிம்மாசனத்தில் , நிரந்தரமாக அமர்ந்துள்ளார்.

இவர் பாடிய முத்தான,மணியான பாடல்கள்

போலே ரே பபிஹரா, ஹம் கோ மன் கி —- குட்டி( Guddi— Hindi)

மல்லிகை என் மன்னன் மயங்கும்(தீர்க்க சுமங்கலி)

பொங்கும் கடலோசை (மீனவ நண்பன்)

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது(அவன்தான் மனிதன்)

மல்லிகை முல்லை பூப்பந்தல்(அன்பே ஆருயிரே)

மேகமே மேகமே(பாலைவனச் சோலை)

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது(நெஞ்சமெல்லாம் நீயே)

அன்பு மேகமே(எங்கம்மா சபதம்)

நீ கேட்டால் நான் மாட்டேன் என்று, ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)

வேறு இடம் தேடிப் போவோளா(சில நேரங்களில் சில மனிதர்கள்)

ஆலமரத்துக் கிளி ( பாலாபிஷேகம்)

நானா பாடுவது நானா ( நூல்வேலி)

நானே நானா யாரோ தானா , என் கல்யாண வைபோகம்( அழகே உன்னை ஆராதிக்கிறேன் )

ஒரு புறம் வேடன் மறு புறம்( மயங்குகிறாள் ஒரு மாது)

வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை ( மூன்று முடிச்சு)

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு ( அபூர்வ ராகங்கள்)

நாதமெனும் கோயிலிலே ( மன்மத லீலை)

என் உள்ளம் அழகான ( சினிமா பைத்தியம்)

நித்தம் நித்தம் நெல்லு சோறு( முள்ளும் மலரும்)

பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்)

முத்தமிழைப் பாட வந்தேன் ( மேல்நாட்டு மருமகள்)

மலர் போல் சிரிப்பது பதினாறு( சொல்லத்தான் நினைக்கிறேன்)

நீராட நேரம் நல்ல நேரம்( வைர நெஞ்சம்)

இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது)

நாலு பக்கம் வேடர் உண்டு( அண்ணன் ஒரு கோயில்)

அந்தமானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து(அந்தமான் காதலி)

எண்ணியிருந்தது ஈடேற( அந்த ஏழு நாட்கள்)

இலங்கையின் இளங்குயில்( பைலட் ப்ரேம்நாத்)

கொள்ளையிட்டவன் நீ தான்( நினைத்ததை முடிப்பவன்)

பொன்மனச் செம்மலை( சிரித்து வாழ வேண்டும்)

இதுதான் முதல் ராத்திரி ( ஊருக்கு உழைப்பவன்)

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே( வண்டிக்காரன் மகன்)

மலை ராணி முந்தானை( ஒரே வானம் ஒரே பூமி)

வருவான் வடிவேலன்( வருவான் வடிவேலன்)

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் ( இமயம்)

தங்கத்தில் நிறம் எடுத்து, நேரம் பௌர்ணமி நேரம் , கண்ணழகு சிங்காரிக்கு ( மீனவ நண்பன்)

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன், அமுதத் தமிழில் எழுதும் கவிதை( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)

இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா( பல்லாண்டு வாழ்க)

திருமாலின் திருமார்பில்( திரிசூலம்)

ஒரே ஜீவன் ஒன்றே ( நீயா)

தலைவி தலைவி(மோகனப் புன்னகை)

அவளே என் காதலி( பேரும் புகழும்)

மணமகளே உன் மணவறைக் கோலம்( காலங்களில் அவள் வசந்தம்)

என் யோக ஜாதகம் நான் ( இன்று போல் என்றும் வாழ்க)

என்னுள்ளே எங்கோ ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)

வா வா என் வீணையே(சட்டம்)

ஏ பி சி நீ வாசி( ஒரு கைதியின் டைரி)

காலம் மாறலாம்( வாழ்க்கை)

அழகிய விழிகளில்( டார்லிங் டார்லிங் டார்லிங்)

தேவி ஸ்ரீதேவி உன் திருவாய், மழைக்கால மேகம் (வாழ்வே மாயம்)

இரவும் பகலும்( பில்லா)

கவிதை கேளுங்கள் ( புன்னகை மன்னன்)

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ( வைதேகி காத்திருந்தாள்)

கங்கை நதியோரம்(வரப்பிரசாதம் )

சுக ராகமே(கன்னி ராசி)

மச்சானைப் பாரடி , பூமாலை, வா வா( தங்க மகன்)

தங்கமணி ரங்கமணி( விடுதலை)

இங்கே நான் கண்டேன்( சாதனை)

சங்கீதம் பாட ( இது நம்ம ஆளு)

ராம நாமம்( ஸ்ரீ ராகவேந்திரர்)

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் ( புனித அந்தோணியார் )

நான் பாடிக்கொண்டே இருப்பேன் ( சிறை )

கண்ணாடி அம்மா உன் ( பாத பூஜை )

வேற்று மொழி அமுதங்கள்

ஸ்வாதி கிரணம், சங்கராபரணம் — தெலுங்கு

திருவோணம் — மலையாளம்

மீரா — ஹிந்தி, போல பல பாடல்கள்

கன்னடத்தில் இனிமையான நிறைய பாடல்கள்

–மாத்ருபூதேஸ்வரன்- தமிழ் கோரா

பின்னூட்டமொன்றை இடுக