–
பச்சைக் கிளிகள் மாநாடு
பவள மூக்குடன்
செம்பருத்திச் செடியில் சிவப்பு பூக்கள்
–
——————————–
–
சிமெண்ட் தரையிலும்
சிரிக்கும் பூந்தோட்டம்
பாலர் பள்ளியில் மழலைக் கூட்டம்
–
————————————–
–
அகல் விளக்குகளை ஏற்றுகின்ற
அணையாத விளக்குகள்
அம்மன் ஆலயத்தில் அருள் வேண்டும் மகளிர்
–
————————————-
–
தென்றல் பெண்ணின் தேகம் தழுவி
குளிர்ந்த கூந்தலை குனிந்து சீவுகிறது
தென்னை மர மட்டைகள்
–
———————————-
–
மயானகரை ஓரம் மரணங்களைக் கண்டு
மயிர் சிலிர்த்து நிற்கிறது
ஒற்றைப் பனை மரம்
–
—————————-
டாக்டர் எஸ்.எஸ்.தமிழரசன்