தக்காளி புராணம்!

– # தக்காளியின் தாயகம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா.

# செடி வகையைச் சேர்ந்த தக்காளிச் செடி 1 முதல் 3 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.

# மணித்தக்காளி, பேத்தக்காளி ஆகிய இனங்கள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்காவில் இருந்து வந்த தக்காளி வகையை நாட்டுத் தக்காளி அல்லது சீமைத் தக்காளி என்று தமிழில் அழைக்கிறார்கள்.

# உலகிலேயே சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக தக்காளி விளைகிறது.

# தக்காளியில் வைட்டமின் ‘சி’யும் வைட்டமின் ‘கே’வும் மிக அதிகமாக உள்ளன.

# தினமும் தக்காளிப் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. வேக வைத்து சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடுவது அதிக பலன் தரும்.

———————————-
தகவல் திரட்டியவர்: மா. அன்பரசி,
7-ம் வகுப்பு,
தமிழ் தி இந்து காம்

 

உலகின் மிகப் பழமையான பறக்கும் இயந்திரம்…

வாகன புகை சூழ்ந்த பெருநகரங்களில் ஒரு மரத்தின்
ஆயுட்காலம் 8 ஆண்டுகள் மட்டுமே.

பட்டம்தான் உலகின் மிகப் பழமையான பறக்கும்
இயந்திரம்

இங்கிலாந்து நூலகங்களிலிருந்து அதிகமாக திருடப்பட்ட
புத்தகம் என்று கின்னஸ் புத்தகத்திற்கு ஒரு சாதனை உண்டு!

உலகின் தூயநீரில் 70 சதவிகிதம் அண்டார்டிகாவில்தான்
உள்ளது

————————————-

முதல் பெண் ரயில் எஞ்சின் டிரைவர்…(பொது அறிவு தகவல்)


நம் நாட்டில் முதல் பெண் ரயில் எஞ்சின் டிரைவர்,
சுரேகா யாதவ்.

நம் நாட்டின் நீண்ட நெடுஞ்சாலை, என்.எச் 7
(வாரணாசியிலிருந்து கன்னியாகுமரி வரை)

நம் நாட்டில் ராணுவ டாங்குகள் உற்பத்தி செய்யுமிடம்
சென்னைக்கு அருகே உள்ள ஆவடியில் அமைந்துள்ளது

நீல நிற அஞ்சல் பெட்டியை விமான நிலையத்தில்
காணலாம்

உலகின் மிகப்பெரிய செங்கல் தயாரிக்கும்
தொழிற்சாலை இங்கிலாந்தில் உள்ளது

————————————-

 

தேங்காய் அதிகமாக விளையும் நாடு -பொது அறிவு தகவல்


தேங்காய் அதிகமாக விளையும்நாடு பிலிப்பைன்ஸ்

தேயிலை அதிகமாக விளையும் நாடுகள் இந்தியா, இலங்கை

சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள்
கியூபா, இந்தியா

இந்தியாவில் பொதுத்துறையின் சார்பாக தொடங்கப்ப
முதல் தொழிற்சாலை, இந்தியன் டெலிபோன்
இண்டஸ்ட்ரீஸஃ ஆகும்.

இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் உள்ள
பழங்குடி மக்கள், நாகர்கள்

————————————

 

விலங்குகளின் தரை வழிப் பயணங்கள்

ஒருவரைப் போல் ஏழு பேர்….(சுஜாதா பதில்கள்)

தகவல் துளி: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது ஹீலியம் வாயு

விழா கொண்டாட்டங்கள் என்றால் பலூன்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் தற்போதைய நிலையில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அத்தகைய ஹீலியம் வாயு பற்றி தெரிந்து கொள்வோம்…

கிரேக்க மொழியில் ஹீலியம் என்பதற்கு சூரியன் என்பது பொருள். சூரியன் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு பூமியில் கண்டறியப்பட்ட முதல் தனிமம் ஹீலியம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தீப்பிடிக்காத தன்மையுடைய இந்த வாயு, பலூனை மிகவும் உயரமான பகுதிக்கு கொண்டுசெல்ல உதவுகிறது. ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. இந்த ஹீலியம் வாயு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல், பலரும் அறியாத ஒன்று.

சூரிய கிரகணத்தை ஆராய்வதற்காக இந்தியா வந்த பிரிட்டன் வானவியலாளர் ஜூலஸ் ஜான்சன், இங்கிலாந்து விஞ்ஞானி நார்மன் லாக்கியர் ஆகியோர் இணைந்து ஹீலியத்தை கண்டறிந்தனர்.

இயற்கை வளங்களில் ஒன்றான ஹீலியம் வாயு எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஹீலியம் வாயு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பயன்படும் பெரிய கருவிகளின் காந்தங்களை குளிர்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய பயனுள்ள ஹீலியம் வாயுவை பலூன்களில் தேவையின்றி அடைத்து வீணாக்குவதை தவிர்க்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

-புதியதலைமுறை.டிவி

பொது அறிவு தகவல்

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு

உலக சிறப்பு தினங்கள்

« Older entries