சிட்டுக்குருவி – கவிதை

பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}

* தொலை தூரத்திலும்
நெருக்கத்திலும்
என்னை கடந்து
செல்கையிலும்…

* எனக்குள் ஆழமாய்
ஊடுருவும்
அந்த பார்வையால்
எடை குறைகிறது
என் இதயத்தின்
இன்னொரு பகுதி…

* எந்த புத்தகத்தை
புரட்டுவது…
உன் விழிகள் பேசும்
மொழிகளுக்கு
அர்த்தம் தேட…

* உன் கண்களுக்குள்
நடக்கும்
என்னைப் பற்றிய
ஆராய்ச்சியால்…
குழம்பி கிடக்கிறது மனசு…
தேர்வு எழுதும்
மாணவன் போல…

* உன்னைப் பார்க்காமலே
என்னால் உணர முடிகிறது…
நீ, என்னை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
என்பதை…

* உடலிலுள்ள நரம்புகளை
உருவி…
ரத்தத்தை உறிஞ்சும்…
அந்த பார்வைக்கு
பெயரென்ன?

— அ.கென்னடி, லால்குடி.
வாரமலர்

கதவுகள் – கவிதை

IMG_1938.jpg

IMG_1938.jpg 1.jpg

IMG_1938.jpg 2.jpg
-கவிஞர் ஷம்ஸ்

 

 

வாசகர் கவிதை – குமுதம்

thamizh kumudham.jpgthamizh kumudham.jpg1.jpg

அடுத்த தலைமுறைக்கு…கவிதை

நமக்குப் பின்
நம் வாரிசுக்கென
எதையெல்லாமோ
சேர்த்து வைக்கிற
நம் வாழ்வில்…

வாரிசுகளுக்கு
எதையெல்லாம் அவர்கள்
எடுத்துச் செல்ல வேண்டுமென
சொல்லிக் கொடுக்கிறோமா…

அதையும் இதையும்
செய்யாதே என
எதிர் மறையாய்
சொல்வதை விட்டு
அன்பாய் இரு
அடுத்தவரிடம்
மனம் விட்டுப் பேசி
மகிழ்ந்து
இதயம் விரி…
என விவரித்து
சொல்லியிருக்கிறோமா…

தாத்தா – பாட்டி
என நம் முன்
தலைமுறையினருக்கு
வணக்கம் சொல்லி
அவர்களை
மரியாதை செய்திட
மனதில் பதித்திருப்போமா…

அங்கே போகாதே
இங்கே போகாதே என
விரட்டும் நாம்
கோவிலுக்கு போ
நல்ல நண்பர்களுடன்
விளையாடு…
அதிகாலை கண் விழித்து
ஆதவனின் ஆதிக்கத்தை
காண் என
அருமையான செய்திகளை
அவர்களிடம் கடத்திச்
சென்றிருப்போமா…

அந்த நற்செயல்களை
அவர்களின் சந்ததிக்கு
எடுத்துச் செல்லும் கடமையை
அவர்களுக்கு புகட்டியிருப்போமா…

இயற்கை செல்வங்களை
இனிய வயல்வெளி
விவசாயத்தை…
இங்கேயுள்ள கனிம வளங்களை
சுகாதரத்தையும்
துாய்மையையும்
மழை நீரையும்
காடுகளையும் அதன்
உயிரினங்களையும்!

நாம் உணர்ந்து
வாழ்ந்தது போக அவர்கள்
தங்கள் தலைமுறைக்கு
கடத்திச் சென்றிட
மனிதப் பிறவியின்
பெருமையை
மாண்பு படுத்தி எடுத்தியம்பி
மகிழ்ந்திடுவோமா!

————————–

ரஜகை நிலவன்,
மும்பை.
நன்றி-வாரமலர்

இன்று பிறந்தது தீபாவளி…!

IMG_2050.jpg

அவனுக்கும்…

IMG_2043.jpgzk.jpg

மணவிழா – கவிதை

சுவர் – கவிதை

IMG_20181108_212434-1.jpg

நிலா கால்பந்து

IMG_20181108_212219-1.jpg

« Older entries