* கடவுளுக்குப் பிடித்தமானது சிரிப்பு! கடவுள் மகிழ்ச்சியாக இருப்பவர்களை நேசிக்கிறார்!
* நீங்கள் உறங்கி எழுந்த பின்னால் தான் தூங்கியதையே உணர்வீர்கள்
* நாக்கில் சொற்களின் சுவையை உணருங்கள்
* நீந்தப் பழகாதீர்கள்! மிதக்கப் பழகுங்கள்!
* துளி கடலில் இருக்கிறது! கடல் துளியில் இருக்கிறது!
* இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூடப் பிடிக்கமுடியாது!
* கொந்தளிப்பு இல்லாத கடல் திறமையான மாலுமியை உருவாக்குவது இல்லை!
* எப்போதும் வயிற்றைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்கள் தலையைப் பட்டினி போடுகிறார்கள்!
* திறமையான தச்சன் மரச்சாமான்கள் செய்யும் போது குறைந்த வெட்டுகளையே வெட்டுவான்
* இருவருக்கும் விருப்பம் இல்லாமல் சண்டை நடக்காது!
* சொல்லாதவற்றின் பாடலே கண்ணீர்!
* கணவனாக இரு; எப்போதும் கணவனாகவே இருக்காதே! தாயாக இரு; ஆனால் எப்போதும் தாயாகவே இருந்துவிடாதே!
* சிரித்த முகம் இல்லாதவன் சொந்தமாகக் கடை வைக்கக்கூடாது
* ஒரு மலை உச்சியில் ஏறி நின்றால்தான் இன்னொரு மலை உச்சியைப் பார்க்க முடியும்
* வாள் உறையை வெட்டாது
* நீ என்ன பூவாக வேண்டுமானாலும் இரு; ஆனால் பூக்க மறக்காதே!
கோவில் என்பது உண்மையில் ஒன்றே ஒன்றுதான். அது நீதான். நீ உனக்குள் செல்ல வேண்டும்.
* ஆசைப்பட்டால் இழப்பீர்கள்; ஆசைப்படாவிட்டால், அது உங்களுடையதே!
* எல்லாவற்றையும் ஓய்வாக எடுத்துக்கொள்ளுங்கள்.
* எல்லா நம்பிக்கைகளும் விஷம்போன்றது.
* உங்கள் சக்தி அனைத்துமே பாலுணர்வு சக்தியே. வெளிப்பாடுதான் வெவ்வேறு விதமாக இருக்கிறது.
* என்றாவது ஒருநாள் உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்.
தொகுப்பு : சிபி