மழை அழகுதான்! – ஹைகூ

தினம் ஒரு மூலிகை- கோபுரம் தாங்கி

53 பார்வை

தினம் ஒரு மூலிகை – நில வாகை (அ) நிலாவரை

சிறு தானியங்களின் மருத்துவ குணங்கள்

நன்றி: அக்ரி-டாக்டர்

செங்களம் -(வெப் சீரீஸ்-தமிழில்) – விமர்சனம்

தமிழில் தயாராகும் வெப் சீரீஸ்கள் என்றாலோ க்ரைம் திரில்லர் அல்லது காமெடி வகையிலேயே அமைந்திருக்கும். முதன் முறையாக அரசியல் கலந்த க்ரைம் த்ரில்லராக வெளியாகி இருக்கிறது செங்களம்.

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளார்.

விருதுநகர் நகராட்சி தலைவராக 40 வருடங்களாக சுயேட்சையாக தேர்வு பெற்று பதவியில் இருக்கிறவர் சரத் லோகித்சவா. விருதுநகர் அரசியலில் அவரன்றி ஒரு அணுவும் அசையாது. வெளி சக்தியால் வீழ்த்த முடியாத அவரை, குடும்பம் எப்படி வீழ்த்துகிறது என்பதுதான் கதை.

லோகித்சவாவின் மகன் பரத் தந்தையின் வாரிசாக நகராட்சி தலைவர் பதவிக்கு வருகிறார். ஒரு சாலை விபத்தில் அவர் இறந்துவிட அவரது இரண்டாவது மனைவி வாணி போஜன் தானே அடுத்த தலைவராக காய் நகர்த்துகிறார்.

அவருக்கு உதவி செய்கிறார் அரசியல் நுணுக்கம் தெரிந்த ஷாலி. அவர் வாணி போஜனுக்கு உடன்பிறவா சகோதரியாகிறார். ஆனால் ஷாலி சரத்லோகித் சவாவின் குடும்பத்தையே அழிக்க நினைத்து போராடும் கலையரசனின் உடன்பிறந்த தங்கை. இந்த முடிச்சுகள் எப்படி அவிழ்கிறது என்பதுதான் தொடரின் கதை.

அரசியல் பின்னணியில் பார்க்கும்படியான காட்சி அமைப்புகளால் கவனம் பெறுகிறது தொடர். என்றாலும் கடைசி 3 எபிசோட்கள் தவிர மற்ற எபிசோட்கள் மெதுவாகவே நகர்கிறது. நாயகி வாணிபோஜனை விட அவரது உடன்பிறவா தோழியாக நடித்திருக்கும் ஷாலி நிவேகாஸ் கவனிக்க வைக்கிறார்.

தரண்குமாரின் பின்னணி இசை தொடருக்கு வலு சேர்க்கிறது. சில எபிசோடுகள் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் பின்பாதி ரசிக்க வைக்கும். ஜி5 தளத்தில் வெளியாகி உள்ளது.

-தினகரன்

பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள்

”தி லிட்டில் மெர்மெய்ட்”- சைலண்டாக பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி அசத்தல்!…

புடவை ஃப்ளவுஸில் ஏழுமலையான்..

மூங்கிலுக்கு நடுவே பிகினி உடையில் போஸ்…

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்கை…

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி….

வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்ப்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது.

ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீருக்கு எங்கு செல்வார் என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள். மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான்.

“இதற்கு பெயர் தான் கணவன் மனைவி உறவு”

தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது. அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.

இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.

இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான். ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

இளநீர் கணவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன..! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.

இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார். கணவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.

நன்றி-முகநூல் & தமிழ் கோரா

« Older entries