வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்ஷயா விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கிராமப்புற கதைகளை மையப்படுத்திய ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மற்றும் ‘கலகலப்பு’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல்.
கொரோனா பெருந்தொற்றின் போது, தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் கிருமிநாசினி தெளித்தார். அந்த வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்போது பேசிய விமல், 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவி அக்ஷயா ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதை நினைவுக் கூர்ந்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் விமலின் மனைவி அக்ஷயா.
விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகர்-தயாரிப்பாளர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனுவை ஒப்படைத்துள்ளனர்.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ள நிலையில், இப்படத்தில் ஐவர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது.
மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.
இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார்.
இந்நிலையில், பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்ததையடுத்து, இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தின் பூஜை இன்று(மார்ச்.03) நடைபெற்றது. இதில் இயக்குனர் ஆர்.கண்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது..!!
அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன..!!
மேலும், ”இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்” என்றொரு குறிப்பும் இருந்தது..!!
தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார்..?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை..!! இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை அவர்களால் எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்..!!
வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி..!!
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன..!!
வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது அதில், “என்னா..?? படம் சூப்பரா..??” என்று எழுதியிருந்தது..!! அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது..!!
“ஐயோ..!! களவாணிப்பயலா அவன்..??” என்று..!!
நீதி: ”இலவசம்” யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..!! உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை..!!
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும். * உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு. * வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். * பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும். * ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும். * எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. * மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும். * கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை. * அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இத்தடையை நீக்கி நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. ரெஜினா கசாண்ட்ரா, நதிதா ஸ்வேதா ஆகியோர் நடித்து உருவான இந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த இந்த படம் எதிர்வரும் மார்ச் 5 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு 1.24 கோடி கடன் பாக்கி தர வேண்டியுள்ளதாகவும், அதை தரும் வரையில் படத்தை வெளியிட கூடாது என்றும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வழக்கு தொடந்துள்ளது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
எனவே இப்படம் நாளை உலகமெங்கிலும் ரிலீஸாகவுள்ளது. இதனால் எஸ்.ஜே,சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
இயக்குநர் சசியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகனாக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக இருந்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இந்தப் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் படம் குறித்து விஜய் ஆண்டனியிடம் பேசினேன்.
” ‘பிச்சைக்காரன்’ படத்தோட கதையை சசி சார் என்கிட்ட சொன்னப்போ கேட்க ஆர்வமா இருந்தது. சார் கதையை சொல்லி முடிச்சவுடனே இதுல நான் நடிக்குறேன்னு சொல்லிட்டேன். நடிக்க மட்டுமல்லாம தயாரிக்கவும் செஞ்சேன்.
ஏன்னா, இந்தக் கதை மேல எனக்கு நம்பிக்கையிருந்தது. படத்தோட ஷூட்டிங் பாண்டிசேரி மற்றும் சென்னை ஏரியாவுல நடந்தது. சொல்லபோனா இந்தப் படத்துகாக பாண்டிசேரியோட ரிமோட் ஏரியாவுல பிச்சைக்காரங்களோட உட்கார்ந்து பிச்சை எடுத்திருக்கேன். முகம் முழுக்க கரியைப் பூசிக்கிட்டு பிச்சை கேட்டியிருக்கேன். நிறையப் பேர் தர்மம் பண்ணுனாங்க.
சிலர், ‘கை காழுல்லாம் நல்லாதானே இருக்கு. எதுக்கு இந்த பொழப்புனு’ திட்டிலாம் இருக்காங்க. இவங்க திட்டுனதுக்காக நான் வருத்தப்படலை. ஏன்னா, நிஜ வாழ்க்கையிலும் நான் பிச்சை எடுத்திருக்கேன். வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்.
தொடர்ந்து ஆறு மாசம் வரைக்கும் சிலருடைய ஆபிஸ் வாசல்ல வாய்ப்பு பிச்சை கேட்டு நின்னுருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் இப்போ இந்த நிலையில இருக்கேன். இதனால, எப்போவுமே பிச்சைகாரர்களை ஏளனாம பார்க்குற எண்ணம் எனக்குள்ள இருந்ததில்ல.
“இந்தப் படத்துக்கு சசி சார் முதல்ல ‘ம்’னு பேர் வெச்சிருந்தார். ஏன்னா, ‘அம்மா’வுடைய பேர்ல ‘ம்’ வரதுனால. ஆனா, நான் அடம் பிடிச்சு ‘பிச்சைக்காரன்’னு பேர் வைக்க சொன்னேன். இந்தப் பேருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. முக்கியமா, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் நிறையப் பேர் தயங்குனாங்க.
காரணம், படத்தோட பெயர். எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண கஷ்டப்பட்டேன். முக்கியமா, தெலுங்குல படத்தை டப்பிங் செஞ்சு விற்றோம். அங்கே, ‘பிச்சைக்காரன்’னு டைட்டில் (Bichagadu) வைக்க மாட்டோம்னுனாங்க.
கண்டிப்பா, ‘பிச்சைக்காரன்’னு பேர் வெச்சுதான் ரிலீஸ் பண்ணணும்னு சண்டை போட்டேன். இந்தளவுக்கு நிறைய சிரமங்கள் இந்தப் பெயருக்கு இருந்தது. எனக்கு சென்ட்டிமென்ட் இருக்கு. ஆனா, மூடநம்பிக்கைகள் இருந்ததில்ல.”
“படத்துல நடிச்சிருந்த அம்மா கேரக்டரின் முகம் எல்லாருக்கும் புதுசாயிருந்தது. படத்தோட கேரக்டர் ஒவ்வொருத்தவங்களையும் சசி சார்தான் செலக்ட் பண்ணினார். படத்தோட எல்லா வேலைகளும் இவர்தான் பண்ணுவார்.
இந்தப் படத்துல வந்திருந்த அம்மா பாட்டும் நல்ல ஹிட்டாச்சு. பாட்டுக்கான கம்போஸிங் பண்ணும்போது இந்தப் பாட்டுக்கு ரீச் இருக்கும்னு நினைக்கவே இல்ல. ஆனா, ஆடியன்ஸ் இதை ஏத்துக்கிட்டாங்க.
படத்தோட புரொமோஷனுக்காக சத்யம் கார் பார்க்கிங்ல ஒரு வீடியோ எடுத்திருந்தோம். இந்த வீடியோஸூக்கும் நிறைய வரவேற்பு கிடைச்சது. இந்த ஐடியாவை கொடுத்தது சசி சார்தான். படத்தோட ரிலீஸூக்கு ஒருநாள் முன்னாடி ஷூட் பண்ணி உடனே ரிலீஸ் பண்ணினோம்.
படத்துக்கு வரவேற்பு இருக்கும்னு நினைச்சோம். ஆனா, நூறு நாளைக்கு மேல படம் தியேட்டர்ல ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. எங்க டீமுக்கு எதிர்பாராத வெற்றியா ‘பிச்சைக்காரன்’ இருந்தது.
இந்தப் படத்தோட வெற்றியைத் தொடர்ந்து இப்போ ‘பிச்சைக்காரன் 2’ ஷூட்டிங் சீக்கிரமே தொடங்க போறேன். இந்தப் படம் ரொம்ப பிரமாண்டமா இருக்கும்” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் விஜய் ஆண்டனி. – ————————- -சனா (விகடன்)
இரத்த அழுத்தம் இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழத்ததை சீராக வைத்துக் கொள்ளும். – சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். – சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். – முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும். – மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும். – சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். – சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். – அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள் வயிற்று கோளாறு குணமாகும். – நன்றி- வெப்துனியா