ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தும்பி துள்ளல்’ – கோப்ரா பட பாடல் வெளியானது

Cobra Thumbi Thullal song released

சீயான் விக்ரம் தற்போது நடித்து வரும் படம் கோப்ரா.
அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்த படத்தில்
விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி சூப்பர்ஹிட் ஆன கேஜிஎப் படத்தில்
ஹீரோயினாக நடித்தவர்.

இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி உள்ளிட்ட படங்கள்
மூலமாக கவனத்தை ஈர்த்த அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா
படத்தில் விக்ரம் சுமார் 20 விதமான கெட்டப்களில் தோன்றுவார்
என முன்பே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் விதமாக
தற்போது கொரோனா லாக்டவுன் நேரத்திலும் படக்குழு பல்வேறு
விஷயங்களை செய்து வருகிறது. தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில்
கோப்ரா படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

தும்பி துள்ளல் என பெயரிடப்பட்டு உள்ள இந்த பாடல் படத்தில்
வரும் திருமண கொண்டாட்டத்திற்கான பாடலாக உருவாகி
உள்ளது. இந்த பாடலை நகுல் அப்யங்கர் மற்றும் ஸ்ரேயா கோஷல்

ஆகியோர் பாடி உள்ளனர்.

நன்றி-சமயம் செய்திகள்

கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்

கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப்
பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவை எவை?

நிச்சயம் அந்தக் காலப் பாடல்கள், இந்த வகையில் வரும்.

பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா
(தாயைக் காத்த தனயன்)

அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் (தாய் சொல்லைத்
தட்டாதே)

அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
( குடும்பத் தலைவன்)

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
( பாலும் பழமும்)

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில்
(பாகப் பிரிவினை)

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
( படிக்காத மேதை)

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி
( பணத்தோட்டம்)

நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான்
(அன்பே வா)

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
(யார் நீ)

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
( நெஞ்சில் ஓர் ஆலயம்)

ஒருத்தி ஒருவனை நினைந்து விட்டால் (சாரதா)

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
(ஆயிரத்தில் ஒருவன்)

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
(இதயக் கமலம்)

எங்கே நீயோ நானும் அங்கே ( நெஞ்சிருக்கும் வரை)

காதல் காதல் என்று பேச கண்ணன்
( உத்திரவின்றி உள்ளே வா)

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
(தனிப் பிறவி)

நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை
( தெய்வத்தின் தெய்வம் )

காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
( அடிமைப் பெண்)

நீயே தான் எனக்கு மணவாளன் (குடியிருந்த கோயில்)

மறைந்திருந்து பார்க்கும் மர்மம்
( தில்லானா மோகனாம்பாள்)

வெள்ளி மணி ஓசையிலே (இரு மலர்கள்)

தன்னந் தனிமையிலே (ஸ்கூல் மாஸ்டர்)

உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
( நவக்கிரகம்)

நல்லாத்தான் யோசிக்கிறீக ( சொந்தம்)

மல்லிகை என் மன்னன் மயங்கும் ( தீர்க்க சுமங்கலி)

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
(தங்கப் பதக்கம்)

என்னைப் பாடவைத்தவன் ஒருவன் ( அரச கட்டளை)

பொன்மனச் செம்மலை (சிரித்து வாழ வேண்டும்)

பருத்தி எடுக்கையிலே என்னை பல நாளும்
( ஆட்டுக்கார அலமேலு)

தங்கத்தில் முகம் எடுத்து ( மீனவ நண்பன்)

நன்றி சொல்லவோ என் மன்னவா ( உடன் பிறப்பு)

தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா (கோபுர வாசலிலே)

ஆலயமாகும் மங்கை மனது ( சுமதி என் சுந்தரி)

மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)

நின்னுக் கோரி வரணும் ( அக்னி நட்சத்திரம்)

என் கல்யாண வைபோகம்
( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

சின்னச் சின்ன வண்ணக் குயில் ( மௌன ராகம்)

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ( புன்னகை மன்னன்)

ஆடியிலே சேதி சொல்லி ( என் ஆசை மச்சான்)

கண்ணாளனே எனது கண்ணை (பம்பாய்)

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு
(வெற்றிக் கொடி கட்டு)

ராசாவே உன்னை விட மாட்டேன் (அரண்மனைக் கிளி)

தெற்குத் தெரு மச்சானே ( இங்கேயும் ஒரு கங்கை)

அழகு அழகு ( பாட்சா)

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (சூர்ய வம்சம்)

கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்தலை
( நாட்டாமை)

கண்ணாமூச்சீ ஏனடா என் கண்ணா
( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

மேலும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கும்.


ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன்
நன்றி- தமிழ் – கோரா பதில்கள்

ரசித்த நகைச்சுவை ஒன்று…

டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க…

” உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? “

” கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! “

” வெள்ளைக்கு..! “

” புல்லு..! “

” அப்ப கருப்புக்கு..?! “

” அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! “

” இதை எங்கே கட்டி போடறீங்க..? “

” எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! “

” வெள்ளையை..! “

” வெளில இருக்குற ரூம்ல..! “

” அப்ப கருப்பு ஆட்டை..?! “

” அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! “

” எப்படி குளிப்பாட்டுவீங்க..?

” எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! “

” கருப்பு ஆட்டை..! “

” தண்ணில தான்…! “

” அப்ப வெள்ளையை..?! “

” அதையும் தண்ணிலதான்..! “

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..

” லூசாய்யா நீ… ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே

செய்யுறே… அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப

வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?
!! “
” ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! “

” அப்ப கருப்பு ஆடு..?!! “

” அதுவும் என்னுதுதான்..!! “

” டேய்ய்ய்ய்ய்ய்ய்….!!! “

மனமே மனமே அறியா மனமே…

Manamae Manamae songs lyrics from Vanmam tamil movie

படம் – வன்மம்
இசை – எஸ்.தமன்
பாடல் – யுகபாரதி

பாடியவர்- பூஜா வைத்யநாத் & சுஜித் சரேசன்


மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

கனவான வாழ்க்கை நீ கலையாமல் கேட்டாயோ
உறவாடும் நேரத்தில் உடைந்தே தான் போனாயோ
எதனாலே சேதங்கள் புரியாமல் நின்றாயோ
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே…
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

தவறான சொல்லாலே தடுமாறி நின்றோமே
உறவே இல்லை தனியானோமே
வழி சேரும் முன்னாலே இடம் மாறி சென்றோமே
விடையே இல்லை புதிதானோமே
செய்யும் தவறும் சரியாய் ஆக கூடும் அது போல்
செய்கின்ற அன்பில் காயம் ஆறி போகுமே
மழை மேகம் தூறும் போது
தடை போடும் பூமி யேது
மனமெ…
புகை போல தானே சோகம்
பனி போல நீங்கி போகும்

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

எரியாமல் தீ இல்லை உதிராமல் பூ இல்லை
துயரே இல்லா மனம் இங்கில்லை
சில நேரம் மண் மேலே
மலர் கூட முள் போலே
தெரியும் இங்கே அது தான் தொல்லை
உன்மை அதனை அறிந்தால் வன்மம் ஏது
எதுவும் நம் கையில் இல்லை காலம் போடும் கோலமே
கரை சேர ஓடும் நீயோ
திசை மாறி போகின்றாயோ
மனமே…
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு

கனாவான வாழ்வை நீ கலையாமல் கேட்டாயோ
உறவாடும் நேரத்தில் உடைந்தே தான் போனாயோ
எதனாலே சேதங்கள் புரியாமல் நின்றாயோ
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ
திசை மாறி போகின்றாயோ
மனமே…
வருந்தாதே நீயும் வீனே
வலி யாவும் தீரும் தானே

மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு
மனமே மனமே அறியா மனமே என்ன ஆனதோ உனக்கு

சரியோ தவறோ தெரியா மனமே சொல்லு வேதனை எதற்கு


நன்றி- தமிழ் பா

கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப்

 கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் புதிய மைல்கல் எட்டிய மித்ரான் செயலி மித்ரான் ஆப் 202006271458374701_1_mitron-app-1._L_styvpf

அறிமுகமானது முதல் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற
மித்ரான் செயலி கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் பு
திய மைல்கல் எட்டியுள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலியாக
மித்ரான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், அறிமுகமானது
முதல் இந்த செயலி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

தற்சமயம் பிளே ஸ்டோரில் அறிமுகமாகி இரண்டே மாதங்களில் இந்த
செயலி ஒரு கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னதாக
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரான் செயலி,
ஜூன் 5 ஆம் தேதி மீண்டும் சேர்க்கப்பட்டது.

இதன் பின் பிரபலமான மித்ரான் செயலி பிளே ஸ்டோரில் தற்சமயம்
4.5 நட்ச்சத்திர குறியீடுகளை பயனர்களிடம் பெற்று இருக்கிறது.

இந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை தொடர்ந்து நீடித்து
வரும் நிலையில், மக்கள் சீன பொருட்கள் மற்றும் சேவைகளை
பயன்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளதே
மித்ரான் செயலி அதிக பிரபலமாக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மித்ரான் செயலியை உருவாக்கிய குழு பெங்களூருவை சேர்ந்தது
என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த செயலிக்கான
சோர்ஸ் கோட் பாகிஸ்தான் நாட்டு டெவலப்பரிடம் இருந்து
வாங்கப்பட்டது என கூறப்பட்டது. பின் இந்த செயலியினை
ஐஐடி ரூர்கி மாணவர் உருவாக்கினார் என தெரியவந்தது.

மேலும் இது டிக்டிக் செயலியின் ரீபிராண்டு செய்யப்பட்ட
வடிவம் என கூறப்பட்டது.

மாலைமலர்

ஆன்மிக நிகழ்வுகள் -30.6.2020 முதல் 6.7.2020 வரை

ஆன்மிக நிகழ்வுகள் -30.6.2020 முதல் 6.7.2020 வரை 202006301133064625_Tamil_News_this-week-special-30th-june-2020-to-july-6th-2020_SECVPF


30-ம் தேதி செவ்வாய் கிழமை :

* தசமி
* சந்திராஷ்டமம் – ரேவதி

1-ம் தேதி புதன் கிழமை :

* சர்வ ஏகாதசி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – அசுபதி

2-ம் தேதி வியாழக்கிழமை :

* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* தேவமாதா காட்சியருளிய நாள்
* சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை

3-ம் தேதி வெள்ளிக்கிழமை :

* அமிர்த்தயோகம்
* சந்திராஷ்டமம் – கார்த்திகை, ரோகிணி

4-ம் தேதி சனிக்கிழமை :

* பெளர்ணமி
* சதுர்த்தசி
* சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருஷம்

5-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* அமிர்த்தயோகம்
* சந்திராஷ்டமம் – மிருகசீருஷம், திருவாதிரை

6-ம் தேதி திங்கள் கிழமை :

* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்

நன்றி- மாலைமலர்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

புதுடெல்லி:

இந்தியாவின் புனேயை தலைமையிடமாக
கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு
COVAXIN என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன்
இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட
சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு
இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல்
அளித்துள்ளது.

COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு
செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல்
அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு

மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.


மாலைமலர்

மகளுக்கு ஒரு மடல் – கவிதை

மடல் வரைந்தேன் இன்றுனக்கு
மகள் நீயும் வளர்வதற்கு
கடல் சூழ்ந்த உலகினிலே
புகழ் உடனே வாழ்வதற்கு

பூமகளே நீ வரமே
பூமியிலே நீ தவமே
வையகமே பெருமை கொள்ள
பிறப்பெடுத்த மரகதமே!

ஆன்றோர்கள் அருள் உரைத்த
நன்னெறிகள் மனதில் வைத்து
சான்றோர்கள் எழுதி வைத்த
நன்நூல்கள் நாளும் கற்பாய்

கல்வியொன்றே குலத்தைக் காக்கும்
கல்வயொன்றே நலத்தைப் பேணும்
கல்வியொன்றே தீதை வெல்லும்
கல்வியொன்றே வாகை சூட்டும்

உரத்த சிந்தனை உள்ளம் வைத்து
ஊக்கம் என்றும் கையில் கொள்க
உறுதியுடன் நன்மை செய்து

ஊரார் மெச்ச என்றும் வாழ்க!


-கு.இராமகிருஷ்ணன்
நன்றி-கவிதைமணி

ரசித்த கவிதைகள்

போய் வருகிறேன் – ஒரு பக்க கதை

« Older entries