‘#MeToo’ வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும்
வந்து விட்டது. இது பற்றி தங்கள் கருத்து?
உலகளவில் #MeToo இயக்கம் தொடங்கி ஓராண்டிற்குப்
பிறகு இந்தியாவில் பாலியல் தொல்லைகள்
பகிரங்கமாகியுள்ளன.
பெண்கள் முன்வந்து தமக்கு நடந்த அநீதியை பேசத்
தொடங்கியுள்ளது நல்ல அறிகுறி.
நடிகை தனு ஸ்ரீதத்தா பேசத்தொடங்கியதும் அவரை
பெண்கள் கமிஷனிலிருந்து அணுக முயற்சித்தும்
முடியவில்லை.
எங்களது தொலைபேசி எண்ணைக் கொடுத்தும் கூட
தனுயின் மேனேஜர் எங்களை இன்றுவரை தொடர்பு
கொள்ளவில்லை.
கேரளாவின் கன்னியாஸ்திரீகள் விவகாரத்தில் பாவ
மன்னிப்பை நிறுத்தக் கோரியுள்ளீர்களே?
பெண்கள் ஆணையத்தின் கோரிக்கைக்குப் பிறகு
கிறிஸ்தவ அமைப்புகள் அதில் நாங்கள் தலையிடக்
கூடாது என போராடின.
பெண்களை மிரட்டுவது கூடாது என்ற நோக்கத்தைப்
புரிந்த சிலர் எங்களது கோரிக்கையை ஆதரித்தனர்.
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் குற்றச்சாட்டுகளை
எழுப்புவதாகக் கூறுகிறார்களே?
பாஜக ஆளும் ம.பி, ஹரியானா, உ.பி, சத்தீஸ்கர்,
உத்தரகாண்ட் மாநிலங்களிலும் அரசியல்வாதிகள்
மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
ஊடகங்கள் எதிர்மறை விஷயங்களையே
வெளிச்சமிட்டுக் காட்டி எங்களின் பணியை குறை
சொல்வது தான் வருத்தமாக உள்ளது.
–
————————-
– ரேகா சர்மா,
தேசிய பெண்கள் ஆணையம்.
நன்றி- முத்தாரம், மினி