உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை

டெல்லி:
உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

உலக மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர்
பஜ்ரங் புனியா என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்

 

—————————————
தினகரன்

 

முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அசத்தல் வெற்றி

கோல்கட்டா:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ‘டுவென்டி-20’
போட்டியில் தினேஷ் கார்த்திக் கைகொடுக்க இந்திய அணி
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள்
கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி இன்று கோல்கட்டாவின் ஈடன் கார்டன்
மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி
கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ‘ஆல் ரவுண்டர்’ குர்னால் பாண்ட்யா,
வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது அறிமுக வாய்ப்பு
பெற்றனர்.

குல்தீப் அபாரம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப், ராம்தின் ஜோடி மோசமான
துவக்கம் தந்தது. உமேஷ் பந்தில் ராம்தின் (2) ஆட்டமிழந்தார்.
ஹோப் (14) ரன் அவுட்டானார். பும்ரா ‘வேகத்தில்’ ஹெட்மயர் (10)
அவுட்டானார். போலார்டு 26 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

பின், குல்தீ்ப் ‘சுழல்’ ஜாலம் காட்டினார். இவரது பந்துவீச்சில்
டேரன் பிராவோ (5), ரோவ்மன் பாவெல் (4), கேப்டன் பிராத்வைட் (4)
சிக்கினர். பேபியன் (27) ஆறுதல் தந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி
20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தது. கீமோ பால் (15),
பியாரே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

————

தினேஷ் அசத்தல்:

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித்,
ஷிகர் தவான் ஜோடி அதிர்ச்சி அளித்தது. தாமஸ் ‘வேகத்தில்’
ரோகித் (6) திரும்பினார். தவான் (3) ஏமாற்றினார்.

ரிஷாப் (1) பொறுப்புடன் விளையாடவில்லை. பின், இணைந்த
தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடினர்.

போலார்டு பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து இரண்டு
பவுண்டரி அடித்தார். மணிஷ் பாண்டே 19 ரன்களில்
ஆட்டமிழந்தார்.

குர்னால் பாண்ட்யா நம்பிக்கை அளிக்க, இந்திய அணி 17.5 ஓவரில்
5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் (31), குர்னால் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு அணிகள்மோதும் இரண்டாவது போட்டி வரும் 6ல்
லக்னோவில் நடக்கவுள்ளது.

—————————————–
தினமலர்

60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி – தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்

இந்தியாவின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது
60-வது சதத்தை நிறைவு செய்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள்
போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும்.

இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது.
அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள்
மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை
பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை
பிடித்தார்.

ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து
சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம்
பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

———————————
மாலைமலர்

ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,

ஹாக்கி, இந்தியா, பாகிஸ்தான்

மஸ்கட்:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில்
இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை
வீழ்த்தியது.

ஓமனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்
நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில்
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ், 200வது சர்வதேச
போட்டியில் களமிறங்கினார். முதல் நிமிடத்தில்
‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் பாகிஸ்தான் வீரர்
இர்பான் ஜூனியர் கோல் அடித்தார்.

24வது நிமிடம் கேப்டன் மன்பிரீத் சிங் கோல் அடிக்க
முதல் பாதியில் ஸ்கோர் 1-1 என சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கிய சிறிது நேரத்தில்
மன்தீப் சிங் (33 வது நிமிடம்) ‘ரிவர்ஸ் பிளிக்’ முறையில்
கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில்
முன்னிலை பெற்றது.

தொடர்ந்து தில்பிரீத் சிங் (42வது) தன் பங்கிற்கு ஒரு
கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல்
கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி
ஜப்பானை சந்திக்கிறது.

—————————————–
தினமலர்

தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ

 



வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்கள் மனைவியர்,
தோழிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால்
குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை
ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில
கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அதன்படி வெளிநாட்டு தொடர்களின்போது 2 வாரங்களுக்கு
மேல் வீரர்களின் மனைவியர் அவர்களுடன் தங்கக்கூடாது
என்பது பிசிசிஐ நிலையாக உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர்
அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க
அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்
என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள்
விடுத்திருந்தார்.



அப்போது, மனைவியர் மற்றும் தோழிகள் வீரர்களின்
ஆட்டத்திறன் மேம்பட உதவிகரமாக இருக்கிறார்கள்.
அவர்கள் சப்போர்ட் சிஸ்டம் மாதிரி செயல்படுகிறார்கள்.
அவர்களால் ஒருபோதும் ஆட்டம் பாதிக்காது என்பதை
வலியுறுத்தியிருந்தார்.

உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த
பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின்
வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை
வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள்
தங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.

ஆனால், தொடர் தொடங்கும் முதல் 10 நாட்கள் வீரர்கள்
அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. அதன்பின் தொடர்
முடியும் வரை தங்கிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

—————————–
மாலைமலர்

ஆணழகு தமிழர்!

அண்மையில் மகாராஷ்டிராவில் புனேயில் நடைபெற்ற
52 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் சென்னைத்
தமிழர் தேசிய சாதனை புரிந்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த பாடி
பில்டரான அரசு, ஆசிய ஆணழகன் போட்டியில்
பங்கேற்று கடுமையான போட்டிகளைச் சமாளித்து
வெண்கலப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஆசிய
ஆ ழகர்களுக்கான போட்டியில், எண்பது கிலோ
எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த
உமுர் சாகாவ் முதல் பரிசை வென்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விராஜ் சர்மால்கர்
இரண்டாமிடத்தையும், சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த
அரசு மூன்றா மிடத்தையும் பிடித்தனர்.

இவர் சர்வதேச ஆணழகன் போட்டியிலும் பங்கேற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.

—————————————
முத்தாரம்

இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்

இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு
நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில்
இந்தியாவின் ஆகாஷ் மாலிக் (வயது 15) வெள்ளிப் பதக்கம்
வென்றார்.

இறுதிச்சுற்றில் இவர் அமெரிக்க வீரர் டிரண்டன் கோவல்சிடம்
தோல்வியடைந்தார். இதன்மூலம் இந்தியா மொத்தம்
3 தங்கம், 9 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 13 பதக்கங்கள்
வென்றுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் மாலிக் 11ம் வகுப்பு படித்து
வருகிறார். இவரது தந்தை விவசாயி ஆவார். அவர் தன்னைப்
போல் தன் மகன் விவசாயம் செய்வதை விரும்பவில்லை.

இதுகுறித்து ஆகாஷ் மாலிக் கூறுகையில்,
‘நான் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று
பெற்றோர் விரும்பினார். ஆனால், வில்வித்தையில் பயிற்சி
பெற்று பதக்கங்கள் வாங்கத் தொடங்கியதும், எனது
பயிற்சிக்கு முழு ஆதரவு அளித்தனர்.

இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அடுத்து 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு
தகுதிபெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார்

—————————–
மாலைமலர்

ஆசிய பாரா விளையாட்டு போட்டி மகளிர் பிரிவு கிளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

 

ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் ஆசிய பாரா விளையாட்டு
போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் பிரிவு
கிளப் த்ரோ (தடி வீசுதல்) போட்டியில் இந்தியாவின்
ஏக்தா பியான் 4வது முயற்சியில் 16.02 மீட்டர்
தொலைவுக்கு சிறந்த முறையில் தடி எறிந்து
ங்கம் வென்றார்.

இந்த வருட தொடக்கத்தில் நடந்த இந்தியன் ஓபன்
பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க
பதக்கம் வென்ற நிலையில் ஆசிய பாரா
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்
வாய்ப்பினை அவர் பெற்றார்.

இன்று நடந்த 3 போட்டிகளில் இந்தியாவின் ஜெயந்தி
பெஹேரா, ஆனந்தன் குணசேகரன் மற்றும்
மோனு கங்காஸ் ஆகியோர் இந்தியாவுக்கு
3 வெண்கல பதக்கங்களை பெற்று தந்தனர்.

————————
தினத்தந்தி

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை,

6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும். மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும்.

இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. சென்னையில் நாளை நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் -பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியும், 2-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணியும் மோதுகின்றன.

இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும் வழங்கப்படும் பரிசுக்கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

விழாவில் கேப்டன்கள் அஜய் தாகூர் (தமிழ் தலைவாஸ்), சுர்ஜீத் சிங் (பெங்கால் வாரியர்ஸ்), ஜோஜிந்தர்சிங் நார்வால் (தபாங் டெல்லி), சுனில் குமார் (குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்), அனுப்குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்), பர்தீப் நார்வால் (பாட்னா பைரட்ஸ்), கிரிஷ் எர்னாக் (புனேரி பால்டன்), விஷால் பரத்வாஜ் (தெலுங்கு டைட்டன்ஸ்), ரிஷாங் தேவதிகா (உ.பி.யோத்தா), சேரலாதன் (மும்பை), ரோகித் குமார் (பெங்களூரு புல்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார்கள்.

விமானம் தாமதம் காரணமாக அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் கேப்டன் சுரேந்தர் நாடா மட்டும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

விழாவில் கலந்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் அளித்த பேட்டியில், ‘கடந்த சீசனில் எங்கள் அணியில் இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்து இருந்தனர். ஆடுகளத்தில் நாங்கள் எடுத்த சில முடிவுகள் மோசமானதாக இருந்தது.
அதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது. ஆனால் இந்த ஆண்டு மன்ஜீத் சிலார், ஜஸ்விர்சிங், சுகேஷ் ஹெக்டே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான விகிதத்தில் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பரிசுத்தொகை எவ்வளவு?

இந்த கபடி திருவிழாவுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1.2 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.80 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

-தினத்தந்தி

தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்கள் – கோலி சாதனை

தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்கள் - கோலி சாதனைராஜ்கோட்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 139 ரன்கள்
எடுத்து, தனது 24-வது சதத்தை எட்டிய இந்திய கேப்டன்
விராட் கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தினார்.
அதன் விவரம் வருமாறு:-

* இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்தவர்களின்
பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த ஷேவாக்கை (23 சதம்)
கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

* 72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில்
பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம்
24 சதங்களை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை
அவர் பெற்றார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான்பிராட்மேன் 66 இன்னிங்சில்
இந்த இலக்கை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது.
இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் தனது 24-வது சதத்தை 125-வது
இன்னிங்சில் அடித்திருந்தார்.
அவரை இப்போது கோலி முந்திவிட்டார்.

* விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள்
உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில்
ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான்.

அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
(10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.

* 29 வயதான விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக
ஒவ்வொரு சீசனிலும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்து
பிரமாதப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2016-ம் ஆண்டில்
1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார்.

இதன் மூலம் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை
கடந்த முதல் இந்தியர், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற
மகிமையை பெற்றார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன்
(தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு),
வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா,
இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன்
(தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனையை
செய்திருக்கிறார்கள்.

—————————-
தினத்தந்தி

« Older entries