பொதுவான பொய்கள்…

தலைவர் குஷியா இருக்காரே …என்ன விஷயம்..?!

என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை…!!

LIFE = (L)ove (I)s (F)ueling (E)veryone.

என்னை சந்திப்பவர்கள் தமிழ் பொன்மொழி by தெரியாதவர்   Tamil Ponmozhi by

வேப்பம்பூ சாதப்பொடி

30

முருங்கைக் கீரை குழம்பு

கீரைக்குத் தகுந்த அளவு பருப்பை குக்கரில்
வேக வைத்துக் கொள்ள வேண்டும்
எண்ணெய் காய்ந்ததும், பெல்லாரி வெங்காயம் (பாதி)
பொடியாக நறுக்கியது மற்றும் கடுகு, சீரகம்,
கால் ஸ்பூன் வெந்தயம்  எல்லாவற்றையும் தாளித்துக்
கொள்ளவும்
அதில், கீரைக்குத் தகுந்த காரமாக மிளகாய்த் தூளைப்
போட்டுக் கொள்ள வேண்டும்
இவை எல்லாவற்றையும் பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு
கொதிக்க விடவும்
மூன்று நிமிடம் கொதித்தால் போதுமானது
பின்னர் அதில் முருங்கைக் கீரையை சேர்த்து
ஒரு நிமிடம் வேக வைத்து
பின்னர் கிண்டி விட்டு, மேலும் ஒரு நிமிடம்
கொதிக்க விட வேண்டும்
கீரை வெந்ததும், கீரையை தனியாக வடிகட்டி எடுத்து
ஒரு ஸ்பூன் ரசப்பொடியை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
அரைத்த கீரையை பருப்பு தண்ணீருடன் கலந்து விட்டால்
முருங்கைக் கீரை குழம்பு தயார்
——————————————-

ஆரோக்கிய சமையல்

நுங்கு ஜுஸ்
தேவையானவை:
பனை நுங்கு – 5
பால் – கால் லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை: முதலில் நுங்கிலுள்ள மேல் தோலை நீக்கி மிக்ஸியில் அரைக்க வேண்டும். பாலை தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ரோஸ் எசன்ஸ் கலந்து மிக்ஸியில் அரைத்த நுங்கைக் கலந்து சர்க்கரை கலந்து பிரிஜ்ஜில் குளிர வைத்து எடுத்துச்
சாப்பிடலாம்.

நன்னாரி சர்பத்
தேவையானவை:
நன்னாரி வேர் – 200 கிராம்
தண்ணீர் – கால் லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
செய்முறை: முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்னாரி வேர்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி அதில் ஊற விட வேண்டும். மறுநாள் காலை வேருடன் ஊறிய நீரை அடுப்பில் வைத்து பாதியாக வற்றும்வரை காய்ச்சி வடிகட்டி நீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சர்க்கரையை கம்பிப் பாகாக காய்ச்சி ஆற வைத்து ஆறியவுடன் நன்னாரி தண்ணீரைக் கலந்து எடுத்து வைத்துக்கொண்டு தண்ணீரில் கலந்து சாப்பிட கோடையின் தாகம் தணியும். உடல் சூடு குறையும். கண் எரிச்சல் வராது. நாக்கு வறட்சி உண்டாகாது. கோடைக்கு சுகம் தரும் சர்பத் இது.

தர்பீஸ் சர்பத்
தேவையானவை:
தர்பீஸ் பழம் – 1
சர்க்கரை – 300 கிராம்
எலுமிச்சை – அரை மூடி
இஞ்சி சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை: தர்பீஸ் பழத்தை தோல் சீவி விதை எடுத்து சிறு துண்டுகளாக்க வேண்டும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து பிரிஜ்ஜில் வைத்துக் குடிக்கலாம்.
-ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
=

ஞாயிறு கொண்டாட்டம் – தினமணி

முளைகட்டிய நவதானிய சூப்


http://chittarkottai.com/wp/wp-content/uploads/2012/08/22.jpg

தேவையானவை: முளைகட்டிய பயறுகள் (டிபார்ட்மென்ட் கடைகளில்
எல்லாம் சேர்ந்த பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப்,

வெங்காயம் – ஒன்று,

பூண்டு – 2 பல்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகு – காரத்துக்கேற்ப,

கொத்தமல்லி தழை – தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய்ப் பால் – ஒரு கப்,

புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு,
கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு
நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு
பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக
வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர்
ஊற்றி கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து,
தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்து
விடவும்.

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித்
தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி
பரிமாறவும்.

———————————————
நன்றி அவள்விகடன்

புளிக்குழம்பு (இனிப்பு)

தேவையானவை
—————-

புளி எலுமிச்சங்காய அளவு.

சாம்பார் வெங்காயம் ஒரு கையளவு.(எந்த காயும் போடலாம்)

வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு.

குழம்பு பொடி இரன்டு ஸ்பூன்.

மஞ்சள்தூள், பெருங்காயம் சிறிது.

கறிவேப்பிலை 2 ஆர்க்.

தாளிக்க
———–

நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி.

கடுகு ஓர் ஸ்பூன்.

வெந்தயம் இரண்டு ஸ்பூன்.(மூன்றுஸ்பூனும் போடலாம்).

செய்முறை.
—————–

அடுப்பில் வாணலியை ஏற்றி, நல்லெண்ணையை ஊற்றி, நன்கு காயவேண்டும்.

கடுகு, வெந்தயம் எண்ணெயில் வெடிக்க விடவேண்டும். வெடித்ததும், அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

மஞ்சள்தூள் சிறிது, பெருங்காயம் சிறிது போட்டு நன்கு கிளறி விடவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான உப்பும், குழம்பு மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், கறிவேபிலையையும் கிள்ளி குழம்புடன் சேர்க்கவும்.

நல்லெண்ணெயை ஊற்றி நன்கு கரண்டியால் கலக்கவேண்டும்.

இப்போது வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு சேர்த்தி கொதிக்கவிடவும்.

இப்போது இனிப்பு புளிகுழம்பு தயார்!

வெல்லம் (பிடிக்காதவர்கள்), போடாமலேயும் உபயோகிக்கலாம்

=======================================

–தங்கமணி

http://ennathuligal.blogspot.in/