நாங்க டீ லவ்வர்…

நன்றி- செந்தில்நாதன் – தமிழ் கோரா

முதலில் உன் மீது நம்பிக்கை வை

ஒரு ஊரில் வில்வித்தையில் சிறந்து விளங்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய வில்லின் மீது அபார நம்பிக்கை அவனுக்கு. குறி தவறாமல் எய்துவதில் அவன் முதன்மையானவனாக இருந்ததால் அவனுக்கு கர்வமும் அதிகமிருந்தது.

ஒரு முறை அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் சீடர்கள் படைசூழ வந்திருந்தார். இவனுடைய திறமையைக் கேள்விபட்டு இவனைக் காணவிரும்பினார். இவன் வந்ததும் அவனை பாராட்டினார். இளம்வீரனுக்கு கர்வம் தாங்கவில்லை. நீங்கள் தான் பலகலைகள் கற்றுத்தருகிறீர்களே என்னோடு போட்டியிட உங்கள் சீடர்கள் யாரேனும் தயாராக இருக்கிறார்களா என்று சவால் விட்டான்.

முனிவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். சீடர்களும் முனிவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு உன் அளவுக்கு அவர்கள் சிறந்துஇருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்ய சொல்கிறேன் என்றார்.

போட்டிக்கு நாள் குறித்தார்கள். போட்டிநாள் வந்தது. இளம் வீரனும், சீடனும் சரிசமமாக தங்கள் திறமையை நிரூபித்தார் கள். இறுதியாக தூரத்தில் ஒரு பொம்மையை நிற்கவைத்து அதன் கண்களை குறிவைத்து தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்

இளம் வீரன் பொம்மையை குறிபார்த்து வில் அம்பு எய்தான். அதைத் தொடர்ந்துஅந்த அம்பையும் இரண்டாக பிளக்க செய்தான். அதைப் பார்த்த அனைவரும் அவனை ஆஹா ஓஹோவென்று பாராட்டினார்கள். வீரனுக்கு பெருமை தாங்கவில்லை.

அவனை பாராட்டிய முனிவர் இன்னுமொரு போட்டியை வைக்கிறேன் என்றார். அனைவரும் அந்த ஊரின் மலை அடி வாரத்தில் கூடினார்கள். ஒரத்தில் ஆறு ஒன்று இருந்தது. மலையையும், ஆற்றையும் இணைக்கும் வகையில் ஒரு சிறிய கயிற்றுப்பாலம் கட்டப்பட்டிருந்தது. முனிவர் தன் சீடனை அதில் நின்று தூரத்தில் இருக்கும் மரத்தின் கனியை குறி பார்த்து அடிக்க சொன்னார்.

சீடனும் தன்னுடைய குரு சொன்னதைக் கேட்டு அதன்படி செய்தான். அடுத்து உன் முறை என்றார் முனிவர் இளம் வீரனிடம், வேகமாக வந்த இளம்வீரன் அந்த கயிற்றுப்பாலத்தில் நின்றான். கீழிருந்த ஆற்று நீரும், எப்போது கயிறு அறுந்து விழுமோ என்னும் பயமும் அவனை அச்சுறுத்தியது.

அவ்வளவு தூரத்தில் இருக்கும் கனியை குறிவைக்கும் போது கீழே விழுந்துவிட்டால் என்னும் பயமே அவனுக்கு உதறலைக் கொடுத்தது. என்னால் முடியாது என்று வந்துவிட்டான்.

முனிவர் அவனை தட்டி கொடுத்தார். உன்னால் முடியாது என்று யார் சொன்னது. உனக்கு உன் மீதிருந்த நம்பிக்கையை விட வில்லின் மீதிருந்த நம்பிக்கைதான் அதிகம். அதனால் தான் உன்னால் குறியை சரியாக அடிக்க முடியவில்லை.

முதலில் உன் மீது நம்பிக்கை வை. அதுதான் உன்னை ஜெயிக்க வைக்கும் என்றார். இளம் வீரன் உண்மையை உணர்ந்தது போல் அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.

முனிவரின் அறிவுரை அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் நம்பிக்கை நல் லதையே கொடுக்கும்.

-படித்ததில் பிடித்தது

நன்றி-தமிழ் கோரா

’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!

நன்றி- தினமணி கதிர்

பாராட்டு – மைக்ரோ கதை

-நன்றி- தினமணி கதிர்

ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!

பேல்பூரி – கண்டது

நன்றி- தினமணி கதிர்

பேல்பூரி – கேட்டது

நன்றி- தினமணி கதிர்

என்னது, கிழங்கு தோசையா?

நன்றி- தினமணி கதிர்

காதலன் –
டார்லிங்! உனக்காக நான் தீ ! குளிப்பேன்! முள் மேல் நடப்பேன்!
புயலிலும் உன்னை கரை சேர்ப்பேன்!

காதலி –
ஐயோ! நான் ரொம்ப லக்கி! உங்களை இப்பவே! உடனே
பார்க்கணும்!

காதலன் –
இப்பவே வா! உச்சி வெயில் மண்டையை பிளக்குது!

சாயந்திரம் 7 மணிக்கு மேல் பார்ப்போம்! சரியா-

-உமர்ஷெரீப் ஹபிபுல்லா

“தாம்பத்யம்” என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

"தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..? Image_700x350xt



பொதுவாகவே இரவு நேரத்தில் தான் தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்..ஆனால் ஒரு சிலர் பகல் வேளையில் கூட தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்…

அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது  சாஸ்திர விதி….

தாம்பத்தியம் என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

பத்தியம் போல முறையாகவும், அளவாகவும் பார்க்க வேண்டிய விஷயம்

பத்தியம் இருக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வரைமுறை உள்ளது போல, உடலுறவில் ஈடுபடுவதற்கும் சில வரைமுறை உள்ளது.

அதனால் தான் திருவள்ளுவர் கூட அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பிரிவுகளில், காமத்துப்பாலில் இது குறித்து விரிவாக அலசி இருப்பார்.

இல்லறம் சிறக்க எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பது குறித்து மிக சிறப்பாக  அதில் கூறப்பட்டு உள்ளது. 

எனவே தான் பத்தியமும் தாம்பத்தியமும் சற்று தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது.

இதே போன்று சாஸ்திரம் சொல்வதில் அறிவியல் உண்மை உள்ளே இருக்கும் அல்லவா…

அதாவது பகல் நேரத்தில் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும்…அப்போது நம் உடல் சூடும் அதிகமாக காணப்படும்

இது போன்ற சமயத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் உடல் பலவீனம் ஆகி  விடும்…

அதுமட்டும் இல்லை…உயிர் அணுக்களில் வேகமும் இருக்காதாம்…

மேலும் தாம்பத்யம் வைத்துக் கொண்ட பின், எப்படியும் உடலுக்கு ஓய்வு தேவைப்படும்  அல்லவா..? இவை அனைத்தும் பகல் பொழுதில் என்பது சரியாக வராது என்பதே  உண்மை…

-தமிழ்-ஏசியா நெட்

« Older entries