அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி:
மனைவிக்கு அவரது குடும்பத்தினர் கொடுக்கும் நகை, பணம்
உள்ளிட்ட சீதனங்களில் கணவர் எவ்வித உரிமையும் கோர
முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுவாக நமது நாட்டில் திருமணத்தின் போது பெண்களுக்கு
அவர்களின் குடும்பத்தில் இருந்து சீதனம் வழங்குவார்கள்.
பெண்களுக்கு இந்த சீதனம் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான
சூழல்களில் இதை கணவன்மார்களே வைத்திருப்பார்கள்.

உரிமை இல்லை: இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச
நீதிமன்றம் இப்போது முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதாவது மனைவிக்குச் சீதனமாகத் தரப்படும் பொருட்களின் மீது
கணவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்று உச்ச
நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடும்பத்திற்குக் கஷ்டம் ஏற்படும் போது கூட பெண்களுக்குச்
சீதனமாகத் தரப்படும் பொருட்களில் கணவரால் உரிமை கோர
முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனது தங்கத்தைக் கணவர் முறைகேடாக பயன்படுத்தி
விட்டதாகப் பெண் அளித்த புகாரில் சுப்ரீம் கோர்ட் இந்த
உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், அந்த பெண்ணிடம் எடுத்த
தங்கத்திற்கு ஈடாக ₹25 லட்சத்தை அவருக்கு இழப்பீடாக
வழங்கவும் அந்த நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனைவிக்கு வரும் சீதனத்தை அவர்களிடமே தருவது
கணவன்மார்களின் தார்மீகக் கடமை என்றும் நீதிமன்றம்
குறிப்பிட்டது.

என்ன வழக்கு:
திருமணத்தின் போது தனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன்
தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும்
சீதனமாக வழங்கியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக
வைப்பதாகக் கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை எ
ல்லாம் வாங்கியுள்ளார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம்
கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கேட்டதற்கு அப்போது
தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம்
செய்துள்ளார்.

இருப்பினும், தனது கணவரும் மாமியாரும் தனக்குச் சீதனமாக
வந்த நகைகளை விற்று அவர்களின் கடன் உள்ளிட்ட பொருளாதார
சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர் என்பதே அந்த
பெண் தொடர்ந்து வழக்கு.

நீதிமன்றங்கள்: கடந்த 2011ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த
குடும்பநல நீதிமன்றம், பெண்ணின் தங்க நகைகளைக் கணவரும்
அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாகத்
தீர்ப்பளித்தது.

இருப்பினும், கணவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதை அந்த
பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின்
தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்:
இருப்பினும், அந்த பெண் கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்
கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த போது தான்
சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணுக்கு அவரது
குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்த பெண்ணின்
சொத்தாகவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்தவொரு
உரிமையும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி
இருக்கிறது.

மேலும், கேரள ஐகோர்ட் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
திருமணத்தில் நம்பிக்கையும், பரஸ்பர புரிதலும் அவசியம் என்றும்,
ஒரு பெண் தன் கணவனை ஆரம்பத்திலிருந்தே நம்பவில்லை என்று
கருதுவது சாத்தியமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதைப் புரிந்து கொள்ளாமல் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதாகவும்
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

25 லட்சம்: அந்த பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்ற
போது நகைகளை எடுத்துச் சென்றது புகைப்படங்கள் மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும்
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும் இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் 89 சவரன் தங்கத்திற்கு நிகராக
ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

-விக்னேஷ்குமார்- தமிழ் ஒன் இந்தியா & Dailyhunt

மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்

ஒரு நொடி விமர்சனம்


கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி
தயாரிக்கும் படம், ‘வேட்டைக்காரி’. ஹீரோவாக ராகுல்,
ஹீரோயினாக சஞ்சனா சிங் நடிக்க, முக்கிய வேடங்களில்
வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி காளிமுத்து காத்தமுத்து
இயக்குகிறார். கே.ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.ராம்ஜி
இசை அமைக்கிறார்.

ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின்
உச்சியில் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டத்தில் படப்பிடிப்பு
நடந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது அழகாக
காட்சியளிக்கும் வனப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின்
அவலங்களையும், அங்கு ஒரு காதல் ஜோடிக்கு பிறரால் ஏற்படும்
பிரச்னைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கிய
காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர்
வைரமுத்துவிடம் கதையை விவரித்தார்.

உடனே வைரமுத்து, ‘இப்படத்துக்கு ‘வேட்டைக்காரி’ என்று
தலைப்பு சூட்டுங்கள். படம் மக்களிடையே சிறந்த முறையில்
சென்று சேரும்’ என்று ஆலோசனை வழங்கினார்.

பிறகு இயக்குனரும், தயாரிப்பாளரும் இப்பெயரை தங்கள்
படத்துக்குச் சூட்டினர்.

-சினிமா.தினகரன்

டி 20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய பஞ்சாப்…

-வெப்துனியா

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)

கமலும் ‘கிரேசி’ மோகனும் இணைந்த பல படங்களில் ஆள்
மாறாட்டம் செய்வது, அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று
நம்மை சிரிக்க வைக்கும் கதைக்களம் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த கதையமைப்பு 1954 லிலேயே வந்துள்ளது என்று
சொன்னால் நம்புவீர்களா? அதுவும் ‘நடிகர் திலகம்’ நடிப்பில்?
சிவாஜி கணேசன், பத்மினி, டி ஆர் ராமச்சந்திரன், ராகினி என்ற
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த ‘கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி’ என்ற படம்தான் அது.

கணபதியாக டி ஆர் ராமசந்திரனும், அவரது உறவினர் மற்றும்
நண்பன் அம்பலவாணனாக சிவாஜி கணேசனும் போட்டிப்
போட்டு நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய முழு நீள
நகைச்சுவை படம் இது.

டி ஆர் ராமசந்திரன், ராகினி இருவருக்கும் திருமணம்
செய்வதென்று பெற்றோர்கள் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால்
கிராமத்து பெண் என்றும், படித்த தனக்கு இணை இல்லாத பட்டிக்
காட்டுப் பெண் என்றும் கூறி பெண் பார்க்கும் படலத்தில்
ராகினியை அவமானப்படுத்தி விடுவார் டி ஆர் ராமசந்திரன்.

டி ஆர் ராமசந்திரனின் தந்தை தன் மகனின் நண்பன் சிவாஜி
கணேசனை அழைத்து தன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள
சொல்லி உதவும் படி கேட்டுக் கொள்வார். மேல்நாட்டு மோகம்,
நவீன நடவடிக்கை, முற்போக்கு கொள்கைகள் கொண்ட
டி ஆர் ராமசந்திரனுக்கு அழகான, பணக்கார, நவ நாகரிக
நங்கையை திருமணம் செய்துக் கொள்ளதான் ஆசை.

இதை அறிந்து கொண்டு, சிவாஜி கணேசன் மற்றும் ராகினியின்
சிநேகிதியாக வரும் பத்மினி இருவரும் திட்டம் தீட்டி, ராகினி
தேவி என்று உரு மாற்றம் செய்து ராகினியை டி ஆர் ராமசந்திரனின்
எதிர் வீட்டில் குடி வரச்செய்வார்கள்.

அவருக்கு உதவி செய்ய பத்மினியும் உடன் தங்குவார். அந்த புதிய
அழகான, மாடர்ன் யுவதியின் நடை, உடை, பாவனை இவற்றில்
மனம் உருகி, மதி மயங்கி, அவரைதான் கல்யாணம் செய்துக்
கொள்வேன் என்று டி ஆர் ராமச்சந்திரன் ஒற்றை காலில் நிற்க,
அவர் விருப்ப படியே கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.

தான் முதலில் நிராகரித்த கிராமத்து பெண்தான் தான்
மணந்திருக்கும் ராகினி தேவி என்று அறியாமல் டி ஆர் ராமச்சந்திரன்
ராகினியை ஆங்கிலத்தில் பேசவும், கார் ஓட்டவும் வற்புறுத்த அந்த
நிலமையை சமாளிக்க பத்மினி, ராகினி, சிவாஜி ஆகியோர் அடிக்கும்
கூத்துதான் மீதி கதை.

இதற்கு நடுவில் சிவாஜி-பத்மினி காதல் வேறு ஒரு தனி டிராக்.
கடைசியில் உண்மை எப்படி வெளிவருகிறது, ராகினியை ஏற்றுக்
கொள்கிறாரா டி ஆர் ராமசந்திரன் என்பது கிளைமாக்ஸ்.

பி நீலகண்டன் திரைக் கதை, இயக்கம். தயாரிப்பு பி ஆர் பந்துலு.
இசை டி ஜி லிங்கப்பா.

பாடியவர்கள் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி,
ஏம் ராஜா, கண்டசாலா, ஜே பி சந்திர பாபு போன்றவர்கள்.

டி ஆர் ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் சேர்ந்து டான்ஸ் ஆடி
பாடிய ‘ஜாலி லைப் ஜாலி லைப்’ பாடல் பலரால் விரும்பப்பட்டது.

‘மதுமலர் எல்லாம் புது மணம் வீச,’ ‘வெண்ணிலாவும் வானும் போலே’
போன்ற பாடல்கள் சிறப்பாக இருக்கும்.

சந்திராபாபு ஒரு சிறிய வேடத்தில் வருவார். டி. ஆர். ராமசந்திரன்,
மிஸ் ராகினி தேவியை கவர பாட்டு பாட வாய் அசைக்க, அவருக்காக
சிவாஜி பாடப் போய் இருவரும் மாட்டிக் கொண்டு விழிக்கும்,
தவிக்கும் காட்சி வெகு ஜோர்!

தரமான நகைச்சுவை மேலோங்கி இருந்த இந்த படம் 1954 ல் வெளி
வந்து வெற்றி வாகை சூடியது. அது ஒரு பொற்காலம்!

தொகுப்பு: பிரியா பார்த்தசாரதி
நன்றி- கல்கி

உலகின் அதி சக்தி வாய்ந்த இராணுவ பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்:

2024 ஆம் ஆண்டுக்கான மிகவும் சக்திவாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை சுமார் 145 நாடுகளின் இராணுவங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து குளோபல் ஃபையர்பவர்(Global Firepower)என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சுமார் பத்து வருடங்களாக மிகவும் வலிமை வாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்க இராணுவம்

அத்தோடு, ஒரு வருடத்திற்கு மாத்திரம் அமெரிக்கா தனது இராணுவத்திற்கு 761.7 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக கூறப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்காவிற்கு அடுத்தப் படியாக உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ரஷ்யாவும் சீனாவும் பெற்றுள்ளன.

இந்திய இராணுவம்

அதையடுத்து, வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதுடன் அதற்கு வருடத்திற்கு சுமார் ரூ.5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

தென் கொரியாவை விட முன்னணியில் இருந்த பிரித்தானியா தற்போது பின் தங்கியுள்ள நிலையில் ஐந்தாவது இடத்தில் தென்கொரியாவும் ஆறாவது இடத்தில் பிரித்தானியாவும் இருக்கிறது.

10 ஆவது இடம்

மேலும், வெளிவந்துள்ள இராணுவ பட்டியலின் படி ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகள் 7 மற்றும் 8 ஆம் இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில், இந்த பட்டியலில் 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை எப்போதும் போலவே பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஐபிசி தமிழ் & Dailyhunt

மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் மீல்மேக்கர் என்பது
வெஜிடேரியன் சிக்கன் என்று அழைக்கப்படுகிறது.

பார்ப்பதற்கும் சாப்பிடுவதற்கும் அதே போல இருப்பதால்
சிக்கனுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அது நேரடி உணவு இல்லை. தொழிற்சாலையில்
தயாரிக்கப்பட்ட ப்ராஸஸட் உணவு. அதனால் அதை சாப்பிடுவது
நல்லதா கெட்டதா? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற குழப்பங்கள்
எல்லாம் இருக்கும் அதற்கான பதில் இதோ!

மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்

சோயாபீன் என்று கூறக்கூடிய மீல் மேக்கர் உங்களுக்கு நிறைய
நன்மைகளை வழங்கும். சோயாபீனில் உள்ள வைட்டமின்கள் மற்றும்
தாதுக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் டி, துத்தநாகம், கால்சியம், ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும்
வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் சோயாபீனில்
காணப்படுகின்றன.

கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள்
மீல் மேக்கரில் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்த
உதவும். இதை சாப்பிட்டால் எலும்புப்புரை பிரச்சனை நீங்கும்.

மீல் மேக்கரில் இதயத்திற்கு நன்மை பயக்கும் ஒமேகா-3 கொழுப்பு
அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்
காணப்படுகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க
உதவுகிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மீல் மேக்கர் சாப்பிடுங்கள்.
இதில் நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க
உதவும்.

மீல் மேக்கர் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதில் உள்ள சத்துக்கள் கொழுப்பை வேகமாக குறைக்க உதவுகிறது.

மீல் மேக்கர் நமது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.
இதில் நார்ச்சத்து உள்ளது, இது வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை
போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

எவ்வளவு சாப்பிடவேண்டும்:

மீல் மேக்கர் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை பயக்கும்.
இருப்பினும் எதையும் அளவாக சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.
இதை அடிக்கடி உணவில் சேர்க்காமல் மதம் 2 முறை போல சேர்ப்பது
நன்று.

-டைம்ஸ் நவ் செய்தி & Dailyhunt

உலகத்திலேயே நாலாவது அறிவாளி.

-செந்தில்நாதன்- தமிழ் கோரா

பலம் உள்ள ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்..?

« Older entries