அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் Puthiyathalaimurai%2F2024-05%2F422171a5-d4e1-43f6-b9d3-ca9aa4c982d4%2FGMijyfpW8AA30pY


1977 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீகிருஷ்ணா லீலா படத்தின் மூலம் 
தமிழ் திரைப்பட இசை உலகில் அறிமுகமான உமா ரமணன், 
1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற 
பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தார். 
இவர் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட 
இசையமைப்பாளர்கள் இசையில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள 
உமா ரமணன், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி 
காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், ஒரு கைதியின் டைரி, 
திருப்பாச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி 
பாடல்களை பாடியுள்ளார்.

வயது முதிர்வு காரணமாக திரைத்துறையை விட்டு விலகி இருந்த 
உமா ரமணன் சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்
பட்டிருந்தார். சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது 
இல்லத்தில் நேற்று இரவு உமா ரமணன் உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என 
உமா ரமணனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உமா ரமணின் 
மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து 
வருகின்றனர்.

நன்றி- புதியதலைமுறை செய்திகள்

த ஃபேமிலி ஸ்டார் – தெலுங்கு படம்

நன்றி- குங்குமம்

ஹவ் டூ டேட் பில்லி வால்ஷ் – ஆங்கில காமெடி படம்

நன்றி- குங்குமம்

தில்லு ஸ்கொயர் – தெலுங்கு படம்

நன்றி- குங்குமம்

லாபதா லேடீஸ் – இந்திப்படம்

நன்றி- குங்குமம்

எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது… பாடகர் விஜய் யேசுதாஸ்!

எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்! 5600a0a3a13bb734633e929b3afb2cb4768321db4e05466106307c3670a220f6

“விவாகரத்து ஆன சமயத்தில் பெரிதாக வருத்தமில்லை.
ஆனால், இன்னும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்பது
மட்டும் புரிந்தது” என பாடகர் விஜய் யேசுதாஸ் கூறியிருக்கிறார்.


தமிழ் சினிமாவில் தனது காந்தக்குரலால் ரசிகர்களை
வசீகரித்தவர் யேசுதாஸ். இவரது மகன் விஜய் யேசுதாஸூம்
பின்னணிப் பாடகராக வலம் வருகிறார். இவருக்கும் தர்ஷனா
என்பவருக்கும் கடந்த 2007-ல் திருவனந்தபுரத்தில் காதல்
திருமணம் நடந்தது. இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில்
ஒரு மகளும் இருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில்தான், கடந்த சில வருடங்களாகவே
விஜய் யேசுதாஸ்- தர்ஷனா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு
பிரச்சினை என்ற செய்தி வலம் வரத் தொடங்கியது. இருவரும்
தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் விவாகரத்தும்
பெற்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி
இருக்கிறது என்பது குறித்து மலையாள டிவி சேனல் ஒன்றிற்கு
பேட்டியளித்துள்ள விஜய் யேசுதாஸ், “உண்மையில், என்னுடைய
விவாகரத்து குறித்து வருத்தப்பட எனக்கு நேரமில்லை.

வருத்தப்பட்டு உட்காருவதை விட, இன்னும் பொறுப்பாக இருக்க
வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில்
என்னுடைய குடும்பம் அதிகம் காயப்பட்டது” என்று சொல்லி
இருக்கிறார்.

தொடர்ந்து அந்தப் பேட்டியில், “பிரபலமாக இருப்பது விவாகரத்து
விஷயத்தில் இன்னும் சிக்கலானது. ஏனெனில், பொதுவெளியில் வரும்
பேச்சுகளையும் கேள்விகளையும் சமாளிக்க வேண்டும். நான்
முடிந்தவரை யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன்.

நாங்கள் இருவரும் இப்போது எங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக
இருக்கிறோம்” என்றும் சொல்லி இருக்கிறார் விஜய்.

-காமதேனு & Dailyhunt

திரைத்துளிகள்

நன்றி- தமிழ்முரசு sg

சினிமா செய்திகள்

நன்றி- தமிழ்முரசு sg

அக்கரன் -விமர்சனம்

நன்றி- தினபூமி

« Older entries