பறவைகளின் தடம் –

IMG_1945 (1).jpg

என்ன இது! பறவைகள் மாநாடா?

பறவைகள் மாநாடு க்கான பட முடிவு

என்ன இது!
பறவைகள் மாநாடா?
வேடந்தாங்கல்!

—————————
.
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் பிடிக்கிறது
மதம்!

———————–

பதில் தெரிந்தும்
சொல்லத் தெரியவில்லை
குழந்தைகள் கேள்வி!

———————-
.
கசப்பை மறந்து
வெளிவேசம் போடுகிறது.
வேப்பம்பழம் !

———————–

பறிக்க ஆளில்லை
“கொய்யா”பழம்
முதிர்கன்னி.

———————-

பிள்ளையில்லா வீடுகளை
காட்டிக் கொடுக்கின்றன
வெள்ளையடித்த சுவர்கள்.!

————————

பழைய கிணறு
நிரம்பி வழிகிறது
குப்பைகள்.

————————–

கையெழுத்துப் போடவும்
கையூட்டும் எதிர்பார்க்கும்
பச்சை மை பேனா!

—————————–

உடைந்த பலூனுக்கு
இரங்கல் தீர்மானமோ
குழந்தைகள் கண்ணீர்!

——————–

எரிதழல்!
ஹைக்கூ கவிதைகள்!
நூலாசிரியர்
கவிஞர் நாகை ஆசைத்தம்பி

{படித்ததில் பிடித்தது}
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
படம்- இணையம்

பழுத்தாலும் இனிப்பதில்லை…!

மிளகாய் ! க்கான பட முடிவு

பழுத்தாலும்
இனிப்பதில்லை
மிளகாய் !

————————

இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை.

————————–

இந்தியாவுக்கு முதலிடம்
உலக வங்கியில்
கடன்!

————————-

வெளுப்பது வெள்ளை
உடுத்தியிருப்பது கந்தல்
சலவைத் தொழிலாளி!

————————–

வெடித்தாலும்
சிரிக்கிறதே
பருத்தி!

———————–

நோய் விட்டுப் போக
வாய் விட்டு சிரிக்க முடியல
வாடகை வீடு!

————————–
பணம் பத்தும் செய்யுமென்றார்கள்
ஒன்று கூட செய்யவில்லை!
பழைய ஐநூறு!

————————-
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
எரிதழல்!
ஹைக்கூ கவிதைகள்!-நூலிலிருந்து

படம்- இணையம்

 

படிப்பின் தாகம்

அப்பாவின் மூக்குக் கண்ணாடி
அவர் இல்லாதபோதும் சொல்கிறது
படிப்பின் தாகம்

————————-

சுவற்றில் ஆணிகள்
சொல்லாமல் சொல்கிறது
அடியின் வலி

———————-

விழுந்து கிடக்கிறான்
உழைக்கும் தொழிலாளி
சனிக்கிழமை இரவு

———————

மரம் இருந்த சுவடு
காலில் இடறும்
கல்லறைச் சிலுவை

——————-

சுமை தாங்கிக்கல்லில்
இளைப்பாறும் காகங்கள்
உடலே சுமையாக

———————

அருணாசல சிவா

மே தின நெருப்பு


சருகுகள் அலறும் ஓசை
மரம் நகர்கிறது
வண்டியில்

——————-

தொட்டில் கிழிசலில்
தலை நுழைத்து அழும்
ஏழைநிலை

——————

கட்சிக்கொடி
அரைக்கம்பத்தில்
ரவுடி மரணம்

—————-

வெள்ளை வாசலில்
வீடு திரும்புகிறது
பறவைகள் கூட்டம்

————————

ரத்தம் குடித்த அட்டைப்பூச்சிகள
செத்து விழுந்தன
மே தின நெருப்பில்

—————————-
-அருணாசல சிவா

நல்ல நாளுக்காக…


நல்ல நாளுக்காக
திறக்கப்படாமல்
பெரியார் சிலை

———————–

மரக்கரியால்
எழுதி இருந்தது
மரங்களை வெட்டாதீர்

—————–

குளத்து மீன்களோடு
கொஞ்சி விளையாடும்
வின்மீன்

———————–

பழங்கதைகளைப் பேச
பறவைகள் கூடியது
நாவல் மரத்தில்

———————–

அரசின் பார்வை படாமல்
குருடாகவே
தெருவிளக்கு

——————–
சு.சேகர்

குருடன் வரைந்த ஓவியம்


வீதியில்
வியப்பாக பார்த்தார்கள்
குருடனின் ஓவியம்

——————

ஓடி விளையாடு பாப்பா
பாடமுடியாமல்
ஊனமுற்றர் பள்ளி ஆசிரியர்

————————-

வரட்டியில் தெரிந்தது
குடும்பத்தின்
வறுமை

———————

மூலிகை மரத்தில்
புற்றுநோய்
செதில்கள்

————————–

வீட்டுப்பாட சுமையால்
மறந்து போனது
மனப்பாடம்

———————-

சு.சேகர்

நிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே…

பூத்துக்குலுங்கும் மரங்கள் க்கான பட முடிவு

*மரங்களைச் சற்று
நிர்வாணமாக இருக்க விடுங்கள்
மலர்களே.

——————————


*இறந்துபோன நதி
நினைவுகளைச் சுமக்கும் கூழாங்கற்கள்
தொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி

——————————

*யாரோ ஒருவருடைய மரணம்
யாரோ ஒருவருக்கு மிக அருகில்
நிலத்தின் மீதுள்ள சருகு.

—————————–

*தண்ணீரும் ஒட்டாத தாமரைமலரில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
புத்தர்.

—————————-ச.மணி
நன்றி- குங்குமம்
படம்- தினகரன்

 

வீரனின் கரங்களில் வாள்.

*வீரனின் கரங்களில்
இறந்துபோனது
வாள்.

———————–

யானை நுழையும் அளவிற்கு
சிதிலமடைந்த கட்டிடம்
இருந்ததென்னவோ கொசுக்கள்தான்.

————————-

*மின்மினியின் பிரகாசத்தில்
காணவில்லை
நட்சத்திரங்கள்.

————————–

*பசியின் நறுமணத்துடன்
பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
என்னைத் தெரியும்.

————————–
ச.மணி
நன்றி- குங்குமம்

நெடுநாளைய கனவு..

அழகிய இல்லம்…

நெடுநாளைய கனவு..

விளைச்சல் நிலத்தில்!

———————source

http://jmbatcha.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82

« Older entries