என்ன இது! பறவைகள் மாநாடா?
ஒக்ரோபர் 24, 2018 இல் 9:23 முப (ஹைகூ கவிதை)
–
என்ன இது!
பறவைகள் மாநாடா?
வேடந்தாங்கல்!
–
—————————
.
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் பிடிக்கிறது
மதம்!
–
———————–
–
பதில் தெரிந்தும்
சொல்லத் தெரியவில்லை
குழந்தைகள் கேள்வி!
–
———————-
.
கசப்பை மறந்து
வெளிவேசம் போடுகிறது.
வேப்பம்பழம் !
–
———————–
பறிக்க ஆளில்லை
“கொய்யா”பழம்
முதிர்கன்னி.
–
———————-
பிள்ளையில்லா வீடுகளை
காட்டிக் கொடுக்கின்றன
வெள்ளையடித்த சுவர்கள்.!
–
————————
பழைய கிணறு
நிரம்பி வழிகிறது
குப்பைகள்.
–
————————–
–
கையெழுத்துப் போடவும்
கையூட்டும் எதிர்பார்க்கும்
பச்சை மை பேனா!
–
—————————–
உடைந்த பலூனுக்கு
இரங்கல் தீர்மானமோ
குழந்தைகள் கண்ணீர்!
–
——————–
எரிதழல்!
ஹைக்கூ கவிதைகள்!
நூலாசிரியர்
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
–
{படித்ததில் பிடித்தது}
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
படம்- இணையம்
பழுத்தாலும் இனிப்பதில்லை…!
ஒக்ரோபர் 24, 2018 இல் 9:19 முப (ஹைகூ கவிதை)
பழுத்தாலும்
இனிப்பதில்லை
மிளகாய் !
–
————————
–
இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை.
–
————————–
–
இந்தியாவுக்கு முதலிடம்
உலக வங்கியில்
கடன்!
–
————————-
–
வெளுப்பது வெள்ளை
உடுத்தியிருப்பது கந்தல்
சலவைத் தொழிலாளி!
–
————————–
–
வெடித்தாலும்
சிரிக்கிறதே
பருத்தி!
–
———————–
–
நோய் விட்டுப் போக
வாய் விட்டு சிரிக்க முடியல
வாடகை வீடு!
–
————————–
பணம் பத்தும் செய்யுமென்றார்கள்
ஒன்று கூட செய்யவில்லை!
பழைய ஐநூறு!
–
————————-
கவிஞர் நாகை ஆசைத்தம்பி
எரிதழல்!
ஹைக்கூ கவிதைகள்!-நூலிலிருந்து
படம்- இணையம்
படிப்பின் தாகம்
ஒக்ரோபர் 14, 2018 இல் 10:02 முப (ஹைகூ கவிதை)
அப்பாவின் மூக்குக் கண்ணாடி
அவர் இல்லாதபோதும் சொல்கிறது
படிப்பின் தாகம்
–
————————-
–
சுவற்றில் ஆணிகள்
சொல்லாமல் சொல்கிறது
அடியின் வலி
–
———————-
–
விழுந்து கிடக்கிறான்
உழைக்கும் தொழிலாளி
சனிக்கிழமை இரவு
–
———————
–
மரம் இருந்த சுவடு
காலில் இடறும்
கல்லறைச் சிலுவை
–
——————-
–
சுமை தாங்கிக்கல்லில்
இளைப்பாறும் காகங்கள்
உடலே சுமையாக
–
———————
–
அருணாசல சிவா
மே தின நெருப்பு
ஒக்ரோபர் 14, 2018 இல் 10:01 முப (ஹைகூ கவிதை)
–
சருகுகள் அலறும் ஓசை
மரம் நகர்கிறது
வண்டியில்
–
——————-
–
தொட்டில் கிழிசலில்
தலை நுழைத்து அழும்
ஏழைநிலை
–
——————
–
கட்சிக்கொடி
அரைக்கம்பத்தில்
ரவுடி மரணம்
–
—————-
–
வெள்ளை வாசலில்
வீடு திரும்புகிறது
பறவைகள் கூட்டம்
–
————————
–
ரத்தம் குடித்த அட்டைப்பூச்சிகள
செத்து விழுந்தன
மே தின நெருப்பில்
–
—————————-
-அருணாசல சிவா
நல்ல நாளுக்காக…
ஒக்ரோபர் 14, 2018 இல் 10:00 முப (ஹைகூ கவிதை)
–
நல்ல நாளுக்காக
திறக்கப்படாமல்
பெரியார் சிலை
–
———————–
–
மரக்கரியால்
எழுதி இருந்தது
மரங்களை வெட்டாதீர்
–
—————–
–
குளத்து மீன்களோடு
கொஞ்சி விளையாடும்
வின்மீன்
–
———————–
–
பழங்கதைகளைப் பேச
பறவைகள் கூடியது
நாவல் மரத்தில்
–
———————–
–
அரசின் பார்வை படாமல்
குருடாகவே
தெருவிளக்கு
–
——————–
சு.சேகர்
குருடன் வரைந்த ஓவியம்
ஒக்ரோபர் 14, 2018 இல் 9:57 முப (ஹைகூ கவிதை)
–
வீதியில்
வியப்பாக பார்த்தார்கள்
குருடனின் ஓவியம்
–
——————
–
ஓடி விளையாடு பாப்பா
பாடமுடியாமல்
ஊனமுற்றர் பள்ளி ஆசிரியர்
–
————————-
–
வரட்டியில் தெரிந்தது
குடும்பத்தின்
வறுமை
–
———————
–
மூலிகை மரத்தில்
புற்றுநோய்
செதில்கள்
–
————————–
–
வீட்டுப்பாட சுமையால்
மறந்து போனது
மனப்பாடம்
–
———————-
–
சு.சேகர்
நிர்வாணமாக இருக்க விடுங்கள் மலர்களே…
செப்ரெம்பர் 22, 2018 இல் 3:55 பிப (ஹைகூ கவிதை)
*மரங்களைச் சற்று
நிர்வாணமாக இருக்க விடுங்கள்
மலர்களே.
–
——————————
–
*இறந்துபோன நதி
நினைவுகளைச் சுமக்கும் கூழாங்கற்கள்
தொட்டியில் நீர் நிறைக்கும் சிறுமி
–
——————————
*யாரோ ஒருவருடைய மரணம்
யாரோ ஒருவருக்கு மிக அருகில்
நிலத்தின் மீதுள்ள சருகு.
–
—————————–
*தண்ணீரும் ஒட்டாத தாமரைமலரில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
புத்தர்.
–
—————————-ச.மணி
நன்றி- குங்குமம்
படம்- தினகரன்
வீரனின் கரங்களில் வாள்.
செப்ரெம்பர் 22, 2018 இல் 3:53 பிப (ஹைகூ கவிதை)
*வீரனின் கரங்களில்
இறந்துபோனது
வாள்.
–
———————–
யானை நுழையும் அளவிற்கு
சிதிலமடைந்த கட்டிடம்
இருந்ததென்னவோ கொசுக்கள்தான்.
–
————————-
*மின்மினியின் பிரகாசத்தில்
காணவில்லை
நட்சத்திரங்கள்.
–
————————–
*பசியின் நறுமணத்துடன்
பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
என்னைத் தெரியும்.
–
————————–
ச.மணி
நன்றி- குங்குமம்
நெடுநாளைய கனவு..
ஓகஸ்ட் 18, 2018 இல் 7:46 பிப (ஹைகூ கவிதை)
அழகிய இல்லம்…
நெடுநாளைய கனவு..
விளைச்சல் நிலத்தில்!
–
———————source
http://jmbatcha.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82