சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு

தேவையான பொருட்கள்:

உரித்த பூண்டு – 1 கப்
குழம்பு மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் – ¾ கப்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

கடுகு – ¼ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
மிளகு – ¼ டீஸ்பூன்
சீரகம் – ¼ டீஸ்பூன்

அரைக்க:

பூண்டு – 4 பற்கள்
மிளகு ½ டீஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்

செய்முறை:

புளி தண்ணீரில் குழம்பு மிளகாய்த்தூளைப் போட்டு கட்டி
இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிக்சியில் போட்டு
சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும்
கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின்பு
ஒன்றாகப் போட்டு தாளிக்கவும்.

பிறகு உரித்த பூண்டுகளைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி,
அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு
சேர்த்து கலக்கவும்.

கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்.
மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து
இறக்கவும். இப்போது ‘சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு’ தயார்.

இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி, தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.
__
நன்றி: தேவதை- தினத்தந்தி

பின்னூட்டமொன்றை இடுக