அம்மா சொற்படி கேளடா
ஆத்திரப்படுவது தப்புடா
இரக்கப் படணும் மனசுடா
ஈகை செய்வதே சிறப்புடா
–
உண்மையை என்றும் பேசுடா
ஊனத்திற்கு உதவ வேணுமடா
எண்ணத்தைத்
தூய்மையாய் ஆக்குடா
ஏணியைப் போல உதவுடா
–
ஐயத்தைப் போக்க முயலடா
ஒற்றுமை நன்மை தருமடா
ஓய்வும் அளவோடு தேவையடா
ஔவை சொன்னதைப் படியடா
அஃதே உயர்த்தும் படியடா…
–
தளவை மாசு.சௌந்தரராஜன்
சிறுவர் பாடல்கள்-தொகுப்பிலிருந்து
அறிவுரை – சிறுவர் பாடல்
ஜூன் 21, 2022 இல் 3:39 பிப (Uncategorized)
Tags: சிறுவர் பாடல்
பின்னூட்டமொன்றை இடுக