அறிவுரை – சிறுவர் பாடல்


அம்மா சொற்படி கேளடா
ஆத்திரப்படுவது தப்புடா
இரக்கப் படணும் மனசுடா
ஈகை செய்வதே சிறப்புடா

உண்மையை என்றும் பேசுடா
ஊனத்திற்கு உதவ வேணுமடா
எண்ணத்தைத்
தூய்மையாய் ஆக்குடா
ஏணியைப் போல உதவுடா

ஐயத்தைப் போக்க முயலடா
ஒற்றுமை நன்மை தருமடா
ஓய்வும் அளவோடு தேவையடா
ஔவை சொன்னதைப் படியடா
அஃதே உயர்த்தும் படியடா…

தளவை மாசு.சௌந்தரராஜன்
சிறுவர் பாடல்கள்-தொகுப்பிலிருந்து

பின்னூட்டமொன்றை இடுக