ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்லக்கூடாது!!


வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக
விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும்
அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம்
காண்பதில்லை.


நாம் வீழ்ச்சி அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல
நண்பர்கள் வருவார்கள்.நாம் உயர்வு அடைந்து விட்டாலோ,
தங்களுடைய உதவியால்தான் என்று பறை அடிப்பார்கள்.


எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும்.கெட்டவர்களுக்கு
அது கிரீடம். நல்லவருக்கு அது நஞ்சு.


வயிற்றெரிச்சல் தனது வன்ம விஷத்தையே உறிஞ்சிக்
குடித்துத் தனக்குத்தானே நஞ்சிட்டு நாசப் படுத்திக்
கொள்ளும்.


வழக்கம் என்பது வன்மையான,வஞ்சகமான ஒரு வாத்தியார்.
அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தின்
காலடியை நம் மீது ஊன்றி விடுவார்.


நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம்,
பயன்,நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித
குலத்தின் இயல்பு.


தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,
பொய் சொல்ல முயற்சி செய்யக் கூடாது.


பேராசைக்குக் கூட நிறைய சொத்து உண்டு.ஆனால்
பொறாமைக்கோ, வேதனை விரக்தியைத் தவிர வேறு எந்த
லாபமும் இல்லை.


புகழை நோக்கி ஓடாதீர்கள்;புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.


என்னிடம் உள்ள மிக சிறந்த நற்பண்பில் கூட ஏதோ
கொஞ்சம் பாவத்தின் சாயம் ஒட்டிக் கொண்டிருப்பதைக்
காண்கிறேன்.


சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும்.பெருந்துன்பங்கள்
ஊமையாக்கும்.


தேவை என்பது ஒரு மூர்க்கமான வாத்தியாரம்மா.


தலைக் கனம் என்பது இரண்டு வகை.தன்னைப் பெரிதாக
நினைப்பது.முதல் வகை.தலைக்கனமுள்ள பிறரைத்
தாழ்வாக நினைப்பது இரண்டாம் வகை.


செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.
நிர்வாகத்தைப் பொறுத்தது.


சட்டங்கள் இல்லாவிடில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கி
ஏப்பம் விட்டு விடுவோம்.


சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம்,கர்வம்,
பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக
விளங்குகிறார்கள்.


படைக்கலங்களின் முழக்கம்,சட்டத்தின் குரலை
மூழ்கடித்து விடுகிறது.


-ஐன்ஸ்டின் பொன்மொழிகள்

பின்னூட்டமொன்றை இடுக