கங்கையின் மடுவைப்போல் கலக்கமடையாமல் இரு…!!

* உபகாரம் செய்யாதவர்களுக்கும் உதவியே செய்வது,
பிரியமாக இருப்பது, செய்நன்றி மறக்காமல் இருப்பது,
விழுந்தவர்களைத் தூக்கி விடுவது ஆகியவையே நற்குலத்தில்
பிறந்தவர்களுக்கு அடையாளங்கள்.

– பஞ்சதந்திரம்

—————————————-
* திரேதாயுகத்தில் யாகங்களைச் செய்வதால் அடையும்
பயனையும், துவாபரயுகத்தில் எம்பெருமானை
அர்ச்சிப்பதால் கிடைக்கும் பயனையும்,

கலியுகத்தில் கேசவனுடைய திருநாம சங்கீர்த்தனம்
ஒன்றைச் செய்தே பெறலாம்.

– வேதவியாசர்

——————————————

* தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக சந்தோஷப்
படுவதில்லை. அவமதித்தாலும் தாபம் அடைவதில்லை.
கங்கையின் மடுவைப்போல் எவன் கலக்கமடையாமல்
இருக்கிறானோ, அவனே அறிவாளி என்று
சொல்லப்படுவான்.

– விதுர நீதி

——————————————

* ஹே சூரிய பகவானே! நாங்கள் செய்யும் பாவங்களை
மன்னித்து எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்வாய்.
நாங்கள் உன்னை எப்போதும் வழிபட்டுக்
கொண்டிருக்கிறோம்.

– ரிக் வேதம்

———————————————–

* ஹே சூரிய பகவானே! ஒளிக்கெல்லாம் ஒளி தருபவனே,
உலகங்களில் வியாபித்திருப்பவனே! எனக்கு சிறப்பையும்
பொருளையும் அருள்வாய்.

என் பாவங்களைப் போக்கி எனக்கு மங்களங்களை
அருள்வாய்.

– மகாகவி பவபூதி எழுதிய “மாலதீ மாதவம்’

————————————————-
By தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
நன்றி-வெள்ளிமணி

பின்னூட்டமொன்றை இடுக