மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? – நகைச்சுவை

அதிகாலை , மனநல மருத்துவ தலைமை அலுவலகத்தில்
ஒரு தொலைபேசி அழைப்பு
“ஐயா தங்களுடய மருத்துவமனையிலிருந்து ஏதாவது
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? ” எனக்
கேட்டார் ஒருவர்.

“இல்லை” என்றார் மருத்துவமனை ஊழியர்

அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவ
மனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ?
என மீண்டும் கேட்டார்.

” இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வர
வில்லை ” என்று பதில் சொன்னார் ஊழியர்.

“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது
மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ என
விடாமல் கேட்டார் தொலைபேசி அழைப்பாளர்

“ யார் சார் நீங்கள்… காலையில் இப்படி போன் செய்து
உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம்
பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக்
கேட்டார் ஊழியர்.

“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.
——————————————————————————————————————————————————

பின்னூட்டமொன்றை இடுக