படம் – பார் மகளே பார்
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்கள் – டி.எம். சௌந்தரராஜன் – பி.பி. ஸ்ரீநிவாஸ்
–
–
படம்த இணையம்
——————————————
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக்
கவர்ந்து போனாளே
–
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து
போனாளே
–
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
–
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
–
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக்
கவர்ந்து போனாளே
–
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
–
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்
–
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
–
—————————————–
பின்னூட்டமொன்றை இடுக