இந்த மூன்றெழுத்து
மந்திரத்தால்
யாரும் எதையும்
சாதிக்கலாம்
–
இது இல்லையென்றாலும்
குறைந்தாலும்
பிரச்சினைகள்
தலைதூக்கும்
தலைவிரித்தாடும்
–
இதன் நீள அகல ஆழங்கள்
எங்கும் எப்போதும்
எல்லையற்றது..!
–
இதற்கு ஈடாக
இவ்வுலகில் இனி
எது தோன்ற முடியும்?
–
வன்முறை வென்றதாக
வரலாறே இல்லை!
அன்பு தோற்றதாக
அடையாளமும் இல்லை..!
–
————————-
>கவிஞர் கவியழகன்
நன்றி: (கவிதைப்பூக்கள்)