குறில் & நெடில் (சிறுவர் பாடல்)

அ…இ. . .குறில்;-

——————————————-

அன்பை என்றும் போற்றி

இனிய தமிழைக் கற்றிடு

உண்மை பேசி உயர்ந்திடு

எண்ணம் உயர்வு கொண்டிரு

ஒன்று சேரந்து வாழ்ந்திடு!

—————————————————–

The story of Tamil poet auvaiyaar, K.B. Sundarambal as auvaiyaar in S.S. Vasan's Tamil film auvaiyaar

ஆ. . .ஈ…நெடில்;-

———————-

ஆடிப்பாடி மகிழ்ந்திடு

ஈகைப் பண்பை வளர்த்திடு

ஊரின் நலத்தை விரும்பிடு

ஏற்றம் பெற்று சிறந்திடு

ஐயம் நீங்க கற்றிடு

ஓதி எதையும் தெளிந்திடு

ஒளவை சொல்லைப் போற்றிடு!

—————————————————–

>வெற்றிச் செல்வன்

நன்றி; இளந்தளிர் (கவிதை தொகுப்பு)

ஐஸ்வர்யா ராய். . .

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக
நீ மட்டும் எப்படி
பத்து மாதத்தில்!
——————————-
கவிதை உபயம் : தபூசங்கர்

யார் அவள்? – க‌விதை

திடீரெனப் பெய்த மழையில்
நான் நனைந்து வீடு திரும்பிய போது …

“குடை எடுத்துக் கொண்டு
போனால் கௌரவக் குறைச்சலோ?” இது அப்பா!

“ஒரு ஓட்டம் எடுத்திருந்தால்
முன்னமே வந்திருக்கலாம்” இது அண்ணன்!

“எங்காவது ஒதுங்கி விட்டு பின்னர்
வந்திட புத்தி இல்லையே” இது அக்கா!

“பாழாய்ப் போன மழை சிறிது நேரம்
கழித்து வந்திருக்கக் கூடாதா?” இது அவள்!

தேர்வில் மதிப்பெண் குறைவாக
வாங்கி வீடு திரும்பிய போது …

“சரியாகப் படித்தால் தானே” இது அப்பா!

“நான் கொடுத்த குறிப்புக்களை
சட்டை செய்தால்தானே” இது அண்ணன்!

“வகுப்பில் கவனம் காட்டாவிட்டால் ..”
இது அக்கா!

“உம்… சற்று சுலபமாய் கேட்டிருக்கலாம்”
இது அவள்!

சாலையில் சைக்கிள் இடித்து சிறு
காயத்துடன் வீடு திரும்பிய போது …

“ பராக்கு பார்த்து நடந்தால்…. “
இது அப்பா!

“பஸ் ஸ்டாப்பில் குமரிகளை நோட்டம் விட்டுக்
கொண்டே நடந்தால் வேறு என்ன நடக்கும்?”
இது அண்ணன்!

“சைக்கிளுக்குப் பதில் காரோ, லாரியால்
இருந்திருந்தால் என்னா யிருக்கும்?”
இது அக்கா!

“சைக்கிள் ஓட்டியவனுக்கு கவனம்
வேண்டாம்! கண் எங்கே போச்சோ?”
இது அவள்!

எந்த இடரிலும், எந்தச் சூழ்நிலையிலும்
மற்றவர் என்னிடமே குறை கண்டிட,
அவள் மட்டுமே மற்றவரை கண்டித்தாள்!

ஏனெனில் அவள்……..
என் தாய்!

============================

- திரு உறையோன்

நன்றி; http://tamilmurasu.com.sg/node/4603

மனிதர்கள் நாளை பிறப்பார்கள்

புனிதர்கள் புன்னகைப்பார்கள்

புத்தகம் போல்,

புதுமலர் போல

நித்தம் ஜொலிப்பார்கள்

மனிதர்கள் நாளை

தேவர்களாய்

காலைக்குள்

கதிர் கொடுப்பார்கள்,

வென்றிடும்

ஒரு சரித்திரம்

தருவதற்காய்

மிளிர்ந்திடும்

பெரும் சான்றாய்

புனிதர்கள் போல்

மனிதர்கள் நாளை

புன்கைப்பார்கள்,

ஒரு வேதம்

நாதமென

ஓதிட நாளை

மனிதர்கள் பிறப்பார்கள்

யாழ்நடராசா கண்ணப்பு

நன்றி; வாழுகின்ற வாலிபர்கள் கவிதை தொகுதி

மணிமேகலைப் பிரசுரம்

 

பெண்ணே நீ ஆலமரமாவாய்!

….இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
…வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறை வைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.
…என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.

அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.

ஒரு சிறுமி கேட்கிறாள்,
‘இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?’
பதில் வருகிறது.

‘அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது‘
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
‘பூமியில் வைத்தால்தானே வளர முடியும்‘
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
‘பெண்ணே நீ ஆலமரமாவாய்!’

————————————————————

>வத்ஸலா

souce: Tamil.sify.com.

உன்னால் முடியும் பெண்ணே!

பெண்ணே!

நீ அலங்காரப் பொருளாய்

இருக்கும் வரை

அடிமையாய்த்தான் இருப்பாய்

உன்னை நீயே

அடிமையாக்கிக் கொள்ள

அடைபட்டுப் போகிறாய்

எத்தனை முறை

எழமுயன்றும்

சரிந்து விழும்

உன் தோல்விக்கு

நீயே!

பொறுப்பேற்றுக் கொள்.

அடங்கிப் போகும்- உன்

அடக்கத்தை முதலில்

அடக்கம் செய்து விட்டு வா

முப்பத்து மூன்று சதவீதம் ஏன்

ஐம்பது சத வீதமே

பெற முடியும் உன்னால்!

————————————————————–

>மன்னை சரஸ்வதி தாயுமானவன்

நன்றி; தீக்கதிர்(வண்ணக்கதிர் 1-11-09

photo: from net

கவிதை – (கவிஞர் சித்து)

கிட்டப் பார்வை

—————————

உணர வேண்டியவை

உலகில்

ஓராயிரங்கள் இருந்தும்

கூம்பாய்ச்

சூம்பிப் போயிருந்தன

மனங்களும் விழிகளும்….

பார்வைகள்

சுருங்கியதால்

பகுத்தறிவும்

சுருங்கிப் போயிருந்தது…

——————————————————————-

கூட்டுக் குடும்பம்

————————-

அழகான நந்தவனம் அது…

மலர்கள்

மண(ன)ங்களை

விருந்து வைத்தன….

பாசங்கள்

பகர்ந்தளிக்கப்பட்டன….

இன்பங்கள்

இருமடங்கியதால்,

துன்பங்களின் தூரங்கள்

அதிகமாயின…

அந்த வெற்றியின்

விலாசம் தேடியபோது

விடையாய் விழிகளில்

‘’கூட்டுக் குடும்பம்’’

———————————————————

கோபுரங்கள்

——————

கோபுரங்களே…!

நினைவிருத்துங்கள்….

ஆயிரமாயிரமாய்

புதைக்கப்பட்ட

அஸ்திவாரங்களின்

மேல் நின்று கொண்டிருக்கிறோம் என்று!

அவற்றின்

அமர சாசனமென்று…

நினைவிலிருத்துங்கள்.

——————————————————-

>கவிஞர் சித்து (T.சித்ரா)

நன்றி; மெய்கள் (கவிதை தொகுப்பு)

’’

கவிதைகள் – முகுந்த் நாகராஜன்

காற்றில் ……

கைக் தொலைபேசியில் அவள் அழைப்பு
மௌனமாக அதிரும்போதெல்லாம்
மின்விசிறியின் காற்றில்
அசைந்து ஒலி எழுப்புகிறது
ஓயாமல் பேசும் அவள்
பரிசளித்த மணிக்கொத்து !!!
==

சலங்கை ஒலி

என் சலங்கையில்
நிரப்பி வைத்திருக்கிறேன்
உனக்கு நான் கொடுக்க இருக்கும்
முத்தங்களின் சத்தத்தை !!!!

முடிவுக்கு வந்தோம்

கோயிலில் எல்லோரும்
கண் மூடி இருக்கையில்
நான் பாதிக் கண்ணைத் திறந்தேன்
நீ பாதிக் கண்ணைத் திறந்தாய்
நாம் ஒரு முடிவுக்கு வந்தோம் !

இணைப்புகள்

இணைப்புகள் எல்லாம்
உபயோகத்தில் உள்ளதாக
அறிவித்துள்ளவளின் குரல்
மிகவும் மெல்லியசாய்க் கேட்டது.
ஒருவேளை
துணி மடித்து வைத்தவாறே
பேசுகிறாளோ என்னவோ ;
நான் அழைத்த எண்ணில்
இருப்பவளைப் போலவே !

==

என்னிடம் பெரிதாக

“”வாழ்க்கை எப்படிப் போகிறது”
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவண பவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம்பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக்கொண்டிருந்த சிறுமியைப் பற்றிச் சொன்னேன்.
“”அப்புறம் பார்க்கலாம்” என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ ?

மழை நிலா

மழையில்
நிலா பார்த்த
இரவில்
நிலவில்
மழை பெய்யும்
கனவொன்று
கண்டேன் !

காதலைத் தவிர

காதலர் தினத்தன்று
காதலைச் சொல்லவில்லை
என்று
குறுஞ்செய்தியில் கோபிக்கிறாய்.
உன்னிடம் காதலைத் தவிர
வேறு எதையுமே சொன்னதில்லையே
இதுவரைக்கும் !
————————————————————————–
நன்றி; ஆனந்த விகடன்
http://www.dinamalar.com/Supplementary/anathavikadan_detail.asp?news_id=280&dt=11-22-09

குழந்தைக் கவிதைகள் பத்து-நிலாரசிகன்.


அ)
அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

ஆ)
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

இ)

கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
“ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?”
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

ஈ)
அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற “வெரிகுட்”ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

உ)
மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
“கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்” என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

ஊ)
இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

எ)
இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

ஏ)

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

ஐ)

எப்போதும் கண்டிராத
ஓவியங்கள் சிலவற்றை
விற்றுக்கொண்டிருந்தாள்
அந்தச் சிறுமி.
சருகு நிறத்தாலான
அவளது பாவாடையை
நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
ஒவ்வொரு ஓவியம்
விற்றவுடன்
தன் பாவாடை முயல்களிடம்
ஏதோ பேசுகிறாளவள்.
இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
சூரியக்கரங்கள்.
நிலவில் உருப்பெறுகிறது
ஓர் முயலோவியம்.

ஒ)
யாருமற்ற அறைக்குள்
தன் பொம்மைகளுடன்
நுழைகிறாள் நட்சத்திரா.
அவளது மழலையை
உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
அவள் கேட்கும்
கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
கதவு திறக்கும் சத்தம்
கேட்டவுடன் ஊமையாகி
அசையாமல் நிற்கின்றன.
வேலை முடித்து
வீட்டிற்குள் வருகின்ற
அம்மா பொம்மையிடம்
பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

***********************************************************************

குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)

-நிலாரசிகன்.

நன்றி > http://www.nilaraseeganonline.com/

புகைவண்டி


கோ ஓஓஒஒஒ என்ற ஓசையுடன் தன் பரிவாரங்களை
பின்னால் இழுத்துக்கொண்டு புறப்பட தயாரானது
புகைவண்டி

 

இருவரிக்கவிதைகளாய் இணைந்திருந்த
தண்டாவளத்தின்மேல் தன்நீண்ட இரும்பு உடலை
இழுத்துக்கொண்டு தனக்கு இணையில்லை
என்பதுபோல் தன்னை ஆட்டி ஆட்டி செல்கிறது

அதன் ஓசைகள் ஏழு ஸ்வரங்களையும்
ஒன்றாய் இணைத்ததுபோல் ஒவ்வொரு சமயத்திலும்
ஒவ்வொரு ஓசை எழுப்பியபடி ஒய்யாரமாய் ஓடும்

அதன் உள்ளுக்குள் அமர்ந்திருக்கும்
அத்தனை பேருக்கும் ஆனந்தத்தில்
ஆழ்த்துவதுபோல் மனம் ஆர்ப்பரிக்கும்

கூட்டமாய் போகும்போது கும்மாளம் அடிக்க,
காத[லி]லன் கூடபோகும்போது பார்வைகளை பறிமாறிக்கொள்ள,
கணவருடன் போகும்போது தோள்களே தூளியாக்க,
தனியாய் போகும்போது மனதின் நினைவுகளை அசைபோட்டுக்கொள்ள,
தன்னை சன்னலோரம் சாய்த்தபடி
சந்தித்தவைகளையும் சிந்தித்தவைகளையும்
நினைவுகளுக்குள் நிலைநிறுத்திக்கொள்ள,
புதியவர்களாக இருந்தால் நட்புகளை பகிர்ந்துகொள்ள ”என”

அதனுள் பலவித பரிமாணங்களை பார்க்கலாம்
ரயில் ஸ்நேகம் சிலநேரம் நம் ரணங்களுக்கு மருந்தாகும்
அதுவே சில நேரம் நம் உணர்வுகளை ரணமாக்கும்

பாலங்களை கடக்கும்போது தடக் தடக் டடக் டடக்
ஒரு அச்சம் கலந்த இம்சை
அதுவும் ஒருவகையில் ஆனந்த அவஸ்தை

எதிரே அசையும் பச்சை புடவையை பார்த்ததும்
ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஊஊஉம் என்ற உருமலோடு
இந்த இரும்பு மனிதனும் தன் உடலனைத்தைம்
தன் கட்டுக்குள் கொண்டுவந்து சன்றென்று நிறுத்திடுவான்

எதையோ விட்டு விட்டுபோவதுபோல் இதுவரைகூட வந்த
அத்தனை நிஜங்களையும் நிழல்களையும்
நினைத்தவாறு நின்ற இடத்திலிருந்து
திரும்பித்திரும்பி பார்த்தபடி போவோம் ”கனத்த மனதுடன்”

>அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

—————————————————
(படித்ததில் பிடித்தது_

நன்றி; http://niroodai.blogspot.com

« பழைய வரவுகள்