* நல்லவர்கள் பிறருடைய நன்மைக்காக வாழ்கின்றனர்.
உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாக என்னுடைய
நன்மையை நான் பெறமுடியும். இதைத்தவிர வேறு வழி இல்லை.
–
* தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்
தான் அனைத்து வழிபாடுகளின் சாரம்.
–
* இறைவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள்.
அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம்.
–
* நாய்க்கு சோறு கொடுக்கும் போது, அந்த நாயையும் கடவுளாகக்
கருதி வழிபடு.
ஏனெனில், அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார்.
அவரே எல்லாமுமாய் இருக்கிறார்,
எல்லாவற்றிலும் இருக்கிறார்.
–
* ஏழைகளிடம் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில்
சிவபெருமானை வழிபடுபவன் ஆகிறான்.
விக்ரகத்தில் சிவனை வழிபடுவது ஆரம்பநிலை தான்.
–
=======================================
– விவேகானந்தர்
பின்னூட்டமொன்றை இடுக