மேரி கோமுடன் குத்துச்சண்டை போட்ட விளையாட்டுத் துறை மந்திரி ரத்தோர்- வீடியோ

புதுடெல்லி:

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சார்பில் டெல்லியில்
வரும் 15-ம்தேதி முதல் 24-ம் தேதி வரை பெண்களுக்கான
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடைபெற
உள்ளது.

இதில் 70 நாடுகளில் இருந்து சுமார் 300 வீராங்கனைகள்
பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற
வீராங்கனைகள், உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன்கள்
என முன்னணி விராங்கனைகள் 10 பிரிவுகளில் மோத
உள்ளனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் மேரிகோம் (48 கிலோ),
சரிதா தேவி (60 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ),
சீமா பூனியா (81+ கிலோ) உள்ளிட்ட 10 வீராங்கனைகள்
பங்கேற்கின்றனர்.

இவர்கள் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் தீவிர
பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இன்று இந்திரா காந்தி
ஸ்டேடியத்திற்கு சென்று பயிற்சி பெறும் குத்துச்சண்டை
வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமுடன்
குத்துச்சண்டை போட்டார்.
நட்புரீதியான இந்த போட்டி சிறிது நேரம் நடந்தது.

ரத்தோரை நோக்கி மேரி கோம் குத்து விடுவதும்,
ஆலோசனை வழங்குவதும் என போட்டி சுவாரஸ்யமாக
சென்றது.

ரத்தோரும், மேரி கோமின் தாக்குதலை தடுத்து,
கைத்தட்டல் பெறுகிறார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல்
பிரிவில் பதக்கம் வென்ற முன்னாள் வீரரான ரத்தோர்,
ஸ்டேடியத்திற்கு வந்து கலந்துரையாடியது,
வீராங்கனைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விளையாட்டுத்துறை மந்திரி தன்னுடன் குத்துச்சண்டை
போடும்போடு எடுத்த வீடியோவை மேரி கோம் டுவிட்டரில்
வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது

—————————-
மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: