கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் � சிரிப்பு.

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் � சிரிப்பு.

    * * * * *
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

   * * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

   * * * * *
 

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ�தி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்��றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!

   * * * * *

Thanks:http://members.optushome.com.au/mayuranet/poems/vairamuthu/sirippu.html

51 பின்னூட்டங்கள்

  1. maharaja said,

    நவம்பர் 7, 2008 இல் 5:49 பிப

    nalla kavithai.

  2. நவம்பர் 9, 2008 இல் 5:53 பிப

    //ஒரு
    பள்ளத்தாக்கு முழுக்கப்
    பூப் பூக்கட்டுமே
    ஒரு
    குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?//

    அழகு.
    அதைச் சொல்லுமிடத்து சொல்லும்போது அழகு கூடுகிறது.

  3. guna said,

    ஒக்ரோபர் 14, 2010 இல் 7:26 பிப

    very nice

  4. deepika said,

    ஜனவரி 21, 2011 இல் 7:15 பிப

    kavithai yendru sollum bothu un varthaigal yen ninaivil varum

  5. lotus said,

    பிப்ரவரி 4, 2011 இல் 11:08 பிப

    vairamum muththum un peyarla mattu malla un owwoaru kavi var illum irrukku!!1

  6. rajakumar said,

    பிப்ரவரி 8, 2011 இல் 7:27 பிப

    சிரிப்பு
    இடம்மாறிய முரண்பாடுகளே
    இதிகாசங்கள்

    vooooooooooov

  7. பிப்ரவரி 11, 2011 இல் 10:13 முப

    அருமை பாராட்டுக்கள்

    • rammalar said,

      பிப்ரவரி 11, 2011 இல் 1:08 பிப

      மறுமொழிக்கு நன்றி

      அன்புடன்
      அ.இராமநாதன்

      • panneer said,

        பிப்ரவரி 12, 2011 இல் 9:46 முப

        amazing vairamutu……….

  8. krishna said,

    பிப்ரவரி 17, 2011 இல் 2:54 பிப

    vairam pondre ullana undhan varigal

  9. udhay said,

    பிப்ரவரி 21, 2011 இல் 6:50 பிப

    ஒருத்தி
    சிரிக்கக்கூடாத இடத்தில்
    சிரித்துத் தொலைத்தாள்
    அதுதான் பாரதம்

    ஒருத்தி
    சிரிக்க வேண்டிய இடத்தில்
    சிரிப்பைத் தொலைத்தாள்
    அதுதான் ராமாயணம்

    • P.Sermuga Pandian said,

      செப்ரெம்பர் 5, 2011 இல் 1:31 பிப

      Very nice in explaining our epics in single line poem……..P.Sermuga Pandian

  10. saranraj said,

    மார்ச் 18, 2011 இல் 6:43 பிப

    your kavedai super

  11. Shiva said,

    மார்ச் 29, 2011 இல் 4:31 பிப

    i like vairamuthu all poem. i love vairamuthu, so all poem please sent my e.maile

  12. wazeera banu said,

    ஏப்ரல் 7, 2011 இல் 2:22 பிப

    thanks vairamuthu. i love u alot.kavithi endru sonnale, enaku ungalaitha ninaivu varum, i thank god to give u in this world.

    • KOUSALYA .MS said,

      ஜூன் 11, 2011 இல் 2:06 பிப

      ஒரு
      பள்ளத்தாக்கு முழுக்கப்
      பூப் பூக்கட்டுமே
      ஒரு
      குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
      vairamuthu vukku vairamuthuvae

  13. wazeera banu said,

    ஏப்ரல் 7, 2011 இல் 2:23 பிப

    please send me the new articles to my mail

  14. அன்பாஸ் said,

    மே 6, 2011 இல் 10:22 பிப

    ஒவ்வொரு சிரிப்பிலும்
    ஒருசில மில்லிமீட்டர்
    உயிர்நீளக் கூடும்….

    புன்னகையே வாழ்க்கை

  15. rifaz said,

    மே 30, 2011 இல் 12:26 பிப

    good

  16. Srimithran said,

    ஜூன் 20, 2011 இல் 10:46 முப

    Thamizh thirai ulagil vairamuthu enum kodariyin koormaikku eedu inai illai

  17. revathilaya said,

    ஜூலை 1, 2011 இல் 10:42 முப

    ஒருத்தி
    சிரிக்கக்கூடாத இடத்தில்
    சிரித்துத் தொலைத்தாள்
    அதுதான் பாரதம்

    ஒருத்தி
    சிரிக்க வேண்டிய இடத்தில்
    சிரிப்பைத் தொலைத்தாள்
    அதுதான் ராமாயணம்

    very super udhay…………… eppdi ipdilam………

  18. mathivathana said,

    ஜூலை 15, 2011 இல் 4:51 பிப

    nice kavithai

  19. sweet said,

    ஓகஸ்ட் 20, 2011 இல் 12:06 பிப

    “”VIKKAL KUDA SUGAMTHAN
    UN NINAIVUGALAI ENAKU NINAIVUPADUTHUVATHAL……..
    KATRUKUDA IDAIVELITHAN
    UNAKUM ENAKUM IDAYIL VARUVATHAL…,…!”

  20. sweet said,

    ஓகஸ்ட் 20, 2011 இல் 12:08 பிப

    “”MOUNAMKUDA SUGAMTHAN….
    UN VIZHIGAL PESUGAYIL….!””

  21. sweet said,

    ஓகஸ்ட் 20, 2011 இல் 12:10 பிப

    “”KANADIYAI PONDRATHU EN IDAYAM…..
    KANATHU PONATHU UN MOUNATHAL….
    NORUNGIPONATHU UN VARTHAIGALAL….!”

  22. mani said,

    செப்ரெம்பர் 6, 2011 இல் 12:09 பிப

    hai ethil ulla ealla kavithaiyum super i wish to u all

  23. lalitha said,

    ஒக்ரோபர் 29, 2011 இல் 9:45 முப

    unadhu varigal enakagave eludhapattavai ena thondrugiradhu.

    Nandri vairamuthu avargale!!!!!!!!!!!

  24. Rebecca said,

    நவம்பர் 29, 2011 இல் 11:54 முப

    சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை…

  25. mohankumar said,

    ஜனவரி 6, 2012 இல் 10:36 முப

    kaviri thai mudiyil urangiathu polum

  26. vignesh said,

    ஜனவரி 9, 2012 இல் 12:44 பிப

    GOOD SIR

  27. vignesh said,

    ஜனவரி 9, 2012 இல் 12:48 பிப

    SIR UNGA KAVITHAI ROMBA SUPER SIR AND YOUR SONGS YANAKU ROMBA PIDIKUM SIR

  28. hema said,

    ஏப்ரல் 22, 2012 இல் 1:14 பிப

    very nice sir.I really feel when read your kavithai.you are great vairamuthu sir…..!

  29. ismail said,

    மே 6, 2012 இல் 1:36 பிப

    yepdi yapdi sir ipdilam mudithu. . . unkalala matum

  30. Prithiviraj said,

    ஜூலை 13, 2012 இல் 10:02 முப

    the great……………………… sir i like you

  31. VIVEK said,

    செப்ரெம்பர் 1, 2012 இல் 11:02 பிப

    NEE
    NGA THALA SIR

  32. surya said,

    நவம்பர் 9, 2012 இல் 8:27 பிப

    andru makkal aanghileyargaluku adimai pattu thumbam kondargal!!!!!!!!!!!!!!
    indro unn varigaluku adimaiyaghi inbam kolgirargal!!!!!!!!!!!!adhil nanum oruval!!!!!!!!! aanal indha adimai thanathil sugam irukiraghu!!!!!!!!!!!

  33. hari said,

    நவம்பர் 13, 2012 இல் 10:53 முப

    siruppu kavithai pattri kavingar sirithukonda sonnara ?

  34. nisha said,

    நவம்பர் 15, 2012 இல் 10:57 முப

    இக் கவிதை சிந்திக்க வைக்கிறது. என் வ◌ாழ்வின் உண்மை இது.நிஷா

  35. பிரியா said,

    நவம்பர் 20, 2012 இல் 2:46 பிப

    Reblogged this on பிரியத் தோழி and commented:
    கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள்

  36. narayanasamy said,

    நவம்பர் 30, 2012 இல் 11:54 முப

    very nice poem i like them

  37. karthik said,

    திசெம்பர் 11, 2012 இல் 2:18 பிப

    good

  38. chendu.s said,

    ஜனவரி 12, 2013 இல் 5:21 பிப

    I feel very sad my frds says to me don’t more laugh when i was laugh loudly. but now i’ m feel very happy .

  39. chendu.s said,

    ஜனவரி 12, 2013 இல் 5:24 பிப

    smile is the best medicine for pain. best expression for happiness. best solution for all problems.

  40. kiruba said,

    பிப்ரவரி 26, 2013 இல் 6:08 பிப

    very nice kavithai .i like u very much for vairamuthu kavithai&speech.

  41. KRenuka said,

    ஜனவரி 6, 2017 இல் 11:48 பிப

    super


பின்னூட்டமொன்றை இடுக