முடியாது…

ஓவியத்தில்
வரைய முடியாது
உன் அழகை!

கவிதையில்
எழுத முடியாது
உன் பேரழகை!

சிலையில்
செதுக்க முடியாது
உன் சிணுங்கல்களை!

வானவில்லால்
வெல்ல முடியாது
உன் வண்ணத்தை!

நட்சத்திரங்களால்
பிரதிபலிக்க முடியாது
உன் புன்னகையை!

நிலவால் கூட
பிரகாசிக்க முடியாது
உன் ஒளி முகத்தை…

————————
posted by நிரூபன்.
Thanks: inemai.blogspot.com

பின்னூட்டமொன்றை இடுக