அறிவுப் புதிர்கள் 41-50

விடுகதைகள்
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண்
கலங்கும் அது என்ன?

2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?

3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?

4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?

5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

6. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?

8. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

9.நித்தம் கொட்டும், ஆனால் சப்தம் இல்லை, இது என்ன?

10. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான்
-இவன் யார்?

விடைகள்:
10. கொட்டாவி

9.கண் இமை

8. முட்டை

7. மழை மேகம்

6. அகப்பை

5. தண்ணீர்

4. சிலந்தி

3.தேங்காய்

2. தபாற் பெட்டி

1.வெங்காயம்

2 பின்னூட்டங்கள்

  1. mahendran154 said,

    நவம்பர் 8, 2011 இல் 12:07 முப

    koncham nalla vidukathai sollunga

  2. mahendran154 said,

    நவம்பர் 8, 2011 இல் 12:08 முப

    kastam


பின்னூட்டமொன்றை இடுக