தோகை மயிலாள் சொகுசுக்காரி…(விடுகதைகள்)

கை உள்ள மரம் எது? -நகைச்சுவை விடுகதைகள்

அழகான பூ அருகில் ஆபத்து! -(விடுகதைகள்)

78 பார்வைகள்

குண்டுமுழி ராஜாவுக்கு குடல் எல்லாம் பற்கள்- விடுகதைகள்

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஒற்றைப்பெண்ணுக்கு ஓராயிரம் சேலை – விடுகதைகள்

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் – விடுகதைகள்

விடுகதைகள்
1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண்
கலங்கும் அது என்ன?

2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?

3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?

4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?

5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

6. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?

8. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

9.நித்தம் கொட்டும், ஆனால் சப்தம் இல்லை, இது என்ன?

10. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான்
-இவன் யார்?

விடைகள்:
10. கொட்டாவி

9.கண் இமை

8. முட்டை

7. மழை மேகம்

6. அகப்பை

5. தண்ணீர்

4. சிலந்தி

3.தேங்காய்

2. தபாற் பெட்டி

1.வெங்காயம்

குறுக்கெழுத்துப் போட்டி (க்ரூப்புக்கு தமிழ்ச் சொல்)

விடுகதைகள்

  1. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை
    பெய்யாது…
  2. பறந்தபடி பாடுவான்…
    உட்கார்ந்தால் உதிரம் குடிப் பான்…
  3. வெய்யிலுக்குக் காய்வான்,
    தண்ணீருக்குப் பொங்கு வான்..
  4. ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை,
    உரிக்க உரிக்க வெறுந்தோல்…
  5. இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல…
  6. திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
  7. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை…
  8. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை,
    வழியும் இல்லை…

9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி…


விடைகள்

  1. பட்டாசு, 2. கொசு, 3. சுண்ணாம்பு,
  2. வெங்காயம், 5. குயில், 6. சூரியன்,
  3. புகைவண்டி, 8. கோழி முட்டை,

9. சாப்பாட்டு வாழை இலை

–ரொசிட்டா- சிறுவர்மணி

பறக்காத பூப்பந்து – விடுகதைகள்

1. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி…
 2. தூங்கும்போது வருவான்… தூக்கமெல்லாம் கலைப் பான்…
 3. தினந்தோறும் கடிக்காமல் கடிக்கும். இதனுடன் பழகப் பழக நமது தலைக்கனம் அடங்கு…
 4. கிளைகள் விட்டு வளர்ந்த மரம், கீழே மண்ணில் முளைக்காத மரம்…
 5. முரட்டுத் தோவில் முள் உடம்பு பெற்ற என்னை வெட்டித் தின்றால் விருந்துதான்….
 6. கீழே விழுந்தால் கருப்பு, வாயில் போட்டால் இனிப்பு…
 7. சின்ன மச்சான் குனிய வச்சான்…
 8. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறு பந்து, வாயிலே போட்டால் தேன் பந்து…
 9. பச்சையாய் விரிச்சிருக்கு, பருவம் கழிந்தால் மணிகள் குவியும்…
 விடைகள்
 1. பிள்ளைக்கனி 2. கனவு 3. சீப்பு
 4. மான் கொம்பு5. பலாப்பழம்
 6. திராட்சை 7. முள்
 8. லட்டு 9. நெல்வயல்

நன்றி-சிறுவர்மணி
 

எலும்பில்லாதவன் தான், வம்பில்லாதன் அல்ல. அது என்ன?

 நலம் பெற ஒரு நுறுக்....(விடுகதைகள்) 300px-Amerigo_vespucci_1976_nyc_aufgetakelt


1) கசப்புக்காரன் கலரில் மட்டும் பசப்புக்காரன் – அது என்ன?

2) எங்கள் ஊர் இரும்பு ஏகப்பட்ட தூரம் மிதக்கும் – அது என்ன?

3) நலம் பெற ஒரு நறுக். – அது என்ன?

4) எலும்பில்லாதவன் தான், வம்பில்லாதன் அல்ல. அது என்ன?

5) காட்டுக்குள்ளே நின்றவனைக் கூட்டுச் சேர்த்தால் சுத்தத்துக்கு 
உதவுவான் – அது என்ன?

================================
விடைகள்:

1) குன்றிமணி
2) கப்பல்
3) டாக்டர் போடும் ஊசி
4) நாக்கு
5) விளக்குமாறு

« Older entries