– சப்பாத்தி மிருதுவாக இருக்க: ——— சூடான நீரில் சில துளி எண்ணெய் விட்டு அதில் மாவைப்போட்டு பிசையவும்! – —————————————–
தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.
அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.
உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள்.
எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. – வெப்துனியா
செம்பருத்தி இலையை தூள் செய்து காபி பொடிக்குப் பதிலாக பயன்படுத்தி, பால் சர்க்கரை சேர்த்து அருந்திவர உடல் சருமத்தில் தோன்றும் வறட்சி மாறும், நீடித்த மலச்சிக்கல் நீங்கும்! – ————————————– – சக்தி பெற… ————- ஒரு முட்டை, கொஞ்சம் பால், ஸ்ட்ராபெரி கொஞ்சம் ஒரு வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் கலக்கி பழச்சாறு போல அருந்தி வர அருந்தலாம். அதில் அனைத்து வைட்டமின்களும் உள்ளன –
– நம் கைகளைச் சேர்த்து இந்த முத்திரையை வைத்தால், அதன் தோற்றம் ‘சங்கு’ போலவே தெரியும்.
உடலில், சங்கு என்பது தொண்டை பகுதியை குறிக்கும். தொண்டை, தொண்டை சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க வல்லது சங்கு முத்திரை.
எப்படிச் செய்வது?
இடது கை கட்டைவிரலை வலது உள்ளங்கையில் வைத்து, வலது கையின் நான்கு விரல்களால் அழுத்தமாக மூடவும். வலது கை கட்டைவிரலின் நுனியை, இடது கை நடுவிரலால் தொட வேண்டும். மற்ற இடது கை விரல்களும் கட்டை விரலைத் தொட்டிருக்க வேண்டும்.
இந்த முத்திரையை சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து செய்யலாம். அல்லது, நாற்காலியில் அமர்ந்து, பாதங்கள் இரண்டும் தரையில் பதியும்படி செய்ய வேண்டும்.
நெஞ்சுக்கு நேராக இந்த முத்திரையை வைத்துச் செய்ய வேண்டும். தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்; அல்லது, ஒரு நாளைக்கு மூன்று முறை எனப் பிரித்து 15 நிமிடங்கள் வரை செய்யலாம். – பலன்கள் பசியைத் தூண்டும். சுவாச மண்டலத்தைச் சீராக்கும். புகை, தூசி மற்றும் இதர காரணங்களால் சுவாசப் பாதையில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தூசுக்களை அகற்ற உதவும்.
ஆஸ்துமா, தொண்டையில் சதை வளர்தல் (Tonsillitis) , அடிக்கடி தொண்டையில் புண்கள் மற்றும் அழற்சி ஏற்படுவது ஆகிய பிரச்னைகள் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
சங்கு முத்திரை 72,000 நாடி, நரம்புகளைச் சுத்தப் படுத்துவதாகக் கருதப்படுகிறது. பின்னணி பாடுகிறவர்கள், கச்சேரி செய்பவர்களின் குரல் வளம் மேம்பட இம்முத்திரை பலனளிக்கும்.
ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் போன்று குரலை மையப்படுத்திச் செய்யும் பணிகளில் இருப்போருக்குத் தொண்டை அழற்சி ஏற்படாமல் இந்த சங்கு முத்திரை பாதுகாக்கும்.
தைராய்டு தொந்தரவுகள் இருப்பவர் சங்கு முத்திரையைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
பேசுவதில் தடுமாற்றம், கோளாறு உள்ளவர்களும், குரல் தடித்தல், திக்கிப் பேசுதல், பக்கவாதத்துக்குப் பிறகு குரல் வராமல் தவிப்போர்களும் சங்கு முத்திரை செய்திட, நல்ல பலனை விரைவில் எதிர்பார்க்கலாம்.
மனதை அமைதிப்படுத்தி, ஒருநிலைப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் சங்கு முத்திரை பயன்படும். – நன்றி-இணையம்
பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது. பிஞ்சு பீர்க்கங்காயை சமைத்து உண்டால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம், சளி பிரச்சனைகள் போன்றவை தோன்றும்.
100 கிராம் பீர்க்கங்காயில் புரதம் 0.5%, கால்சியம் 40 மி.கி, பாஸ்பரஸ் 40 மி. கி, இரும்புச் சத்து 1.6 மி.கி, வைட்டமின் ‘ஏ’ 56%, ரிஃபோபிளவின் 0.01 மி.கி, தயாமின் 0.07 மி. கி, நிகோடின் அமிலம் 0.2 மி.கி, வைட்டமின் 5 மி.கி உள்ளது.
பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது.
பீர்க்கங்காயை அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவு அதிகமானால் பித்தம், சீதளம் போன்றவை ஏற்படும்.
பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்
1. பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
2. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
3. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
4. பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.
5. சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
6. பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாகத் பயன்படுகிறது.
7. கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
8. தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும்.
9. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.