முயற்சியை ஒருபோதும் கைவிடாதே!

அமைதியை விட வேறு உயர்வான சந்தோஷம் இல்லை!

மகிழ்ச்சி அடைவதற்கான வழி -(பொன்மொழிகள்)

மகிழ்ச்சி அடைவதற்கான வழி
மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச்
செய்வதே!

-இங்கஃரசால்


பண்பை வழங்குவதால் புகழ்

சேர்க்கப்படுகிறது!

பேயர்டு டெய்லர்

நன்றி-சிறுவர்மணி

மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்

– Albert Schweitzer

“மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல.
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
நீ செய்வதை நீ நேசித்தாயானால்,
நீ வெற்றியடைவாய்.”


“உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன்,
ஆனால் ஒன்று நானறிவேன்:
உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று
விழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான்
உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள்.”

– Albert Schweitzer


“மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த
ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.”

– Albert Schweitzer


“செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில,
மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில,
இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத்
தேவைகள்.”

– Allan K. Chalmers


“மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம்.
நான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன்,
திருடுவேன்
,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன்
இந்த எல்லையற்ற நன்மைக்காக.”

– Amy Lowell


“நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன்
வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை,

இருப்பினும் ஒன்றே.” – Anne Frank


“மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது.”

– Aristotle


“செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு
வருவதில்லை,
ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை.”

– Benjamin Disraeli


“நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும்
நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்
உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை

அளிக்கின்றன.” – Bertrand Russell


உன்னுடைய உழைப்பும் சொற்களும்
உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில்
மகிழ்ச்சி வருகிறது.

– Buddha


தொகுத்தவர்:
Sakthivel Balasubramanian

கச்சா ஆயில் என்றால் என்ன..?



கச்சா எண்ணெய் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அதென்ன கச்சா எண்ணெய்? கச்சா எண்ணெயினை
பீப்பாய் அளவுகளில்தான் குறிப்பிடுகின்றனர்.

ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 159 லிட்டர்.
அதிலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணென்ணெய்
போன்ற எரிபொருட்களை சுத்திகரித்து பிரித்தெடுக்கின்றனர்.

கிடைக்கிற இதுபோன்ற எரிபொருட்களின் மொத்த அளவு,
பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 20 லிட்டர்தான்.
அதாவது எட்டில் ஒரு பங்குதான். மீதமெல்லாம் “கச்சா’.

கச்சா என்றால் மொத்தமும் வீண் என்பதல்ல.
பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்
பொருட்கள், சாலைகள் போடப் பயன்படுத்தப்படும்.
(அண்ணீடச்டூt) சல்பியூரிக் அமிலம், லூபிரிகண்ட் பாராபின்,
தார் போன்ற பலவும் கச்சா எண்ணெயில் இருந்துதான்
கிடைக்கின்றன.

நமது ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒரு மி.லிட்டரை
கூட விடுவதில்லை. 159 லிட்டரையும் பொருட்களாக்கி
விடுகின்றனர். எல்லாமே காசுதான்.

—————————————-

நன்றி – சிறுவர் மலர்

கௌதம புத்தர்-அன்று சொன்னது-அர்த்தம் உள்ளது

1. தர்மத்தை விரும்புபவர்கள் வெற்றி அடைவர்; 
வெறுப்போர் வீழ்ச்சி அடைவர்.

2. தர்மத்தை வெறுப்பவர்கள் தீயவற்றை ஏற்றுக்
கொள்வர்;எனவே, வீழ்ச்சி அடைவர்.

3. சோம்பலும், கோபமும் வீழ்ச்சிக்கொரு காரணம்.

4. பெற்றோரைப் பேணிக்காப்பாற்றாததும் 
வீழ்ச்சிக்கொரு காரணம்.

5. பொய் சொல்லி நல்லவர்களை ஏமாற்றுவதும்
 வீழ்ச்சிக்கொரு காரணம்.

6. போகப் பொருட்களைத் தனியே அனுபவிப்பதும் 
வீழ்ச்சிக்கொரு காரணம்.

7. பிறப்பாலும், செல்வத்தாலும்,குலத்தாலும் பெருமை 
அடைவதும், தன் சுற்றத்தை வெறுப்பதும் வீழ்ச்சிக்கு
ஒரு காரணம்.

8. விபச்சாரம்,குடிபழக்கம்,சூதாட்டம் போன்ற பழக்க
வழக்கங்கள்கொண்டிருத்தலும், வருமானத்தை வீண் 
செலவு செய்வதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.

9. மனவியிடம் திருப்தியடையாமல் விபச்சாரிகளிடமோ,
மாற்றான் மனைவியிடமோ செல்வதும் வீழ்ச்சிக்கொரு 
காரணம்.

10. முதுமைக்காலத்தில இளம் பெண்ணத் திருமணம் 
செய்துகொள்வதும்,அந்தப்பெணணின் மீதுகொண்ட 
ஆசையால் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் 
விழித்திருப்பதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.

11. குடிப்பழக்கம் மற்றும் வீண் செலவு செய்யும் ஆண் 
அல்லது பெண்ணிடம் வீட்டு நிர்வாகப் பொறுப்பு 
இருப்பதும் வீழ்ச்சிக்கொரு காரணம்.

12. இராஜ குடும்பத்தில் பிறந்தத ஒருவர் அதிக ஆசையும், 
அற்ப செல்வமும் உடையவனாக இருந்தும், பேராசையும் 
சுயநலமும் கொள்வானாகில், அதுவும் வீழ்ச்சிக்கு
ஒரு காரணம்.

அருந்தலும் பொருந்தலும் அளவோடிருநதால் 
ஆயுட்காலம் நோயின்றி வழலாம்.

_________________

சக்சஸ் மொழிகள்

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு

-வைரமுத்து

============================================

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற
வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக்கொள்ள
வேண்டுமென நினைப்பது இல்லை

-லியோ டால்ஸ்டாய்

===============================================

உற்சாகம் இல்லாமல் பெரிய காரியங்களை யாரும்
சாதிக்க முடியாது

-ஏமர்சன்

=============================================

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனைவிட
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான்
ஜெயிப்பான்

-யாரோ

====================================================

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதைவிட,
தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.
நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
-ஹிட்லர்

==================================================

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பம்
ஆக்குகிறது என்பது கல்லுக்குத் தெரியாது

-யாரோ

====================================================

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை
யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து
கொண்டுதான் இருக்கிறார்

-யாரோ

=============================================

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ
அதை அஞ்சாமல் எதிர்கொள்

-சுவாமி விவேகானந்தர்

——————————————————————————–

வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம்
அதிகம் இல்லை.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்கு செய்தால் தோல்வி!

—————————————————————————————

இருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட
முடிந்தால் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றுங்கள்

————————————————————————————————-

துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும்…!

-* சோம்பேறி தன் சந்ததிகளைக் கொள்ளையடிக்கிறான்.
-யாரோ

* உழைப்பே மெருகூட்டும். சோம்பலோ துருப்பிடிக்கவே செய்யும்.
-டென்னிஸன்.

* சோம்பலினால் உடல் மட்டுமல்ல மனமும் கெட்டுவிடுகிறது.
-சாரதா தேவியார்.

* செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.
-பிராங்கிளின்

* சோம்பேறியால் சந்தோஷமாக இருக்க முடியாது.
-பிஸ்மார்க்

* சோம்பேறியும் திருடனும் ஒன்றே.
-சாணக்கியன்.

* சோம்பல் உடலின் மூடத்தனம்.
-ஸ்யூப்

* சோம்பல் உடலை அரிக்கும் துரு போன்றது.
-ரெனார்

சோம்பலின் மகன் இருட்டு. மகள் பசி.
-உய்கோ

* உழைப்பு சாதிக்கிறது. சோம்பல் கனவு காண்கிறது.
-திஸாரோ

• துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும் உதவாது.
-இங்கர்சால்.

==============================
தொகுத்தவர்:
நெ.இராமன், சென்னை.

தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே

1) ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்

2) மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.

3) பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.

4) மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

5) தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.

6) அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

7 பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

9) நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.

10) எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.

11) வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.

12) நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.

13) நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.

14)உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன

இயேசுநாதர் அருளிய வரிகள்

• அளவுக்கு மீறிய செல்வமும் வறுமையும் ஆபத்து.

• சத்தியம் என்பது மனவலிமை; சாந்தம் என்பது மனஅடக்கம்.

• தர்மம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தர்மம் செய்வோரைத் தடுக்காதே.

• உன் கடமையைச் சரிவரச் செய்யாமல், உரிமைக்குப் போராடக் கூடாது.

• பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.

• எல்லா கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.

• லட்சியத்தை அடைய ஊக்கம், மிகுந்த கவனமான உழைப்பு தேவை.

• வாழ்வைப் புரிந்து கொள்ளுவதற்கு முன், பாதி வாழ்வு முடிந்து விடுகிறது.

• ஒழுக்கத்தைப் பறி கொடுத்துப் பெறும் லாபத்துக்கு, நஷ்டமென்று பெயர்.

• சேமித்து வாழப்பழகிவிட்டால், நீ செல்வந்தனாகி விடுவாய்.

• கோபம் அன்பை அழிக்கும்; செருக்கு அடக்கத்தை அழித்துவிடும்.

• ஒரு நல்ல கருத்தைச் சொல்பவன், நல்ல பரிசு ஒன்றைக் கொடுப்பவன் ஆவான்.

• பணத்தை இழந்தால் சொற்ப நஷ்டம்; நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.

• நாம் தர்மத்தைக் காத்தால், அது நம்மைக் காக்கும்.

• பணத்தை நாடுபவன் முட்டாள்; குணத்தை நாடுபவன் அறிஞன்.

• பேசும் முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கு முன் சம்பாதியுங்கள்.

• பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது; பணமில்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.

• நம்பிக்கை இல்லாத இதயம் மூளையைக் கூட மோசம் செய்யும்.

• கடமையைச் செய்பவனுக்கு துக்கம் தூரம்.

• பேராசை முடிகிற இடத்தில், பேரின்பம் தொடங்குகிறது.

• ஒவ்வொருவரும் தம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால், நம் ஊரே சுத்தமாயிருக்கும்.

• தன்னம்பிக்கையை இழக்கிறவன், தன்னையே இழக்கிறான்.

• நல்லவை அனைத்தும், நன்மையாகவே முடியும்.

-தொகுப்பு:

நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.

« Older entries