தினம் ஒரு தகவல் – பால், தயிர்

-தினத்தந்தி

மனக்கவலை நீக்க மாமருந்து என்ன?

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.

விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

“ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு. இது கொத்துனா உடனே மரணந்தான். குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது” என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை,எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு,மரணபயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

“ஐயோ. புத்தி கெட்டுப் போய்நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே”. குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது

.அவர் நெருங்கி வந்து சொன்னார், “எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு” என்றார்.

குரங்கோ, “ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்” என்றது.அவர் மீண்டும் சொன்னார், “பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு”.

அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட. நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது.”இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே” என்றபடி ஞானி கடந்து போனார்.

“நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.கவலைகளை விட்டொழியுங்கள்”.

பதிவிட்டவர்: சதீஷ் குமார் இரா (தமிழ் கோரா)

சிரிப்பது மூளைக்கு புத்துணர்வு தரும்,

BBC - Earth - Chimpanzees can laugh and smile like us

உங்களுக்கு தெரியுமா…

* அடிக்கடி சிரிப்பவர்கள், வாழ்க்கையில்
தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாய் வலம் வருவர்

* எதிராளி சிரிக்கும்போது, தன்னுடைய பேச்சைத் துவக்கி,
தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பர்

* போனில் சிரித்தபடியே பேசிப் பாருங்கள், உரையாடல்
நீண்டபடியே போகும்

* உங்கள் கண்களை பிரகாசிக்க செய்யும், சிரிப்பு.
ஆத்மாவுக்கு புத்துணர்வு தருவதுடன், மூளையையும் துாண்டி
விட்டு செயல்பட வைக்கும்

* ஒருவரின் சிரிப்பை, 300 அடி துாரத்தில் இருந்து உணர முடியும்

* ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், 53 முக்கிய தசைகள்
முகத்தில் இயங்குகிறது

* சிம்பன்சி குரங்குகளுக்கு, மனிதர்கள் போல் சிரிக்கவும்,
புன்னகை செய்யவும் தெரியும்.

நீங்கள் சிரியுங்கள். குறைந்தது, 50 சதவீதத்தினராவது பதிலுக்கு
சிரிப்பர். சிரிப்பில், 19 விதம் உண்டு. இவை சமூக சூழல் மற்றும்
தனி சூழல் என, இரு வகைப்படும். சமூக சூழலில் சிரிக்கும்போது,
சில சதைகள் இயங்குகின்றன.

அதுவே தனியாக சிரிக்கும்போது, நம் முகத்தின் இருபுறமும்
உள்ள சதைகள் அனைத்தும் அசைகின்றன.

மொத்ததில், சிரிப்பது மூளைக்கு புத்துணர்வு தரும்,
ஆன்மாவுக்கு நல்லது. மன மகிழ்ச்சிக்கு, ‘டானிக்!’

புரிஞ்சுக்குங்க, செயல்படுத்துங்க!

————————
—ராஜி ராதா
வாரமலர்

கண்ணே மணியே முத்தம் தா – குழந்தைப் பாடலின் ஆசிரியர் யார்?

வரலாற்று செய்திகள்

கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

மீன்கொத்திப் பறவையைப் பற்றிய சில தகவல்கள்:

  1. ஏறத்தாழ 87 வகைகள் மீன்கொத்திகள் உள்ளன.
  2. மீன்கொத்திகள் மூன்று கூட்டமாகப்
    பிரிக்கப்பட்டிருக்கின்றன:
    ஆற்று மீன்கொத்திகள் (river kingfishers),
    மர மீன்கொத்திகள் (tree kingfishers),
    நீர் மீன்கொத்திகள் (water kingfishers).
  3. மீன்கொத்திகள் சராசரியாக 6 முதல் 10 ஆண்டுகள்
    வாழக்கூடியவை.
  4. மீன்கொத்திகள் 4-18 அங்குல நீளம் இருக்கும்.
  5. உலகின் மிகப்பெரிய மீன்கொத்தி
    ஆஸ்திரேலியாவில் உள்ளது
    (Australia’s laughing kookaburra).
  6. உலகின் மிகச் சிறிய மீன்கொத்தி ஆப்பிரிக்காவில்
    உள்ளது (African pygmy kingfisher)
  7. மீன்கொத்திகளின் முக்கியமான உணவுகள் மீனாக
    இருந்தாலும், நீர்வாழ்ப் பூச்சிகள், தட்டான்பூச்சிகள்
    ஆகியவற்றையும் உண்ணும்.
  8. பெண் மீன்கொத்திகள் 2 முதல் 10 முட்டைகள் வரை
    ஒரே நேரத்தில் இடும்.
  9. மீன்கொத்திக் குஞ்சுகள் தாய்ப்பறவையுடன்
    3-4 மாதங்கள் வரை வாழும்.
  10. மீன்கொத்திகளின் பார்வைத்திறன் மிகவும்
    கூர்மையானது. அவை நீரில் பாயும்போது கண்ணை

மூடிக்கொண்டுதான் பாயும், ஆனாலும் குறி தவறாது!


  • ஆஸிஃபா
    நன்றி- மின்னம்பலம்

ஹெட்போன் ஜாக்கிரதை

வட்ட வடிவிலான ஸ்மார்ட் போன்

கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!

கோழி முட்டையிலிருந்து இன்சுலின்! Tamil_News_large_2459204

சர்க்கரை நோயாளிகளில் சிலர், இடுப்பில் இன்சுலின் பம்பு க
ருவியை அணிய வேண்டியிருக்கும். அந்தக் கருவியில் இருக்கும்
இன்சுலின் திரவம் ஓரிரு நாட்களில் கெட்டி தட்டி, பம்பு
அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

இதை தடுக்க, அறை வெப்பத்தில் இரண்டு நாட்களுக்கு மேல்
தாக்குப் பிடிக்கும் இன்சுலின் திரவத்தை தயாரிக்க கிளம்பினர்,
ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள்.

கூடவே ஒரு போனசாக, அத்தகைய இன்சுலினை கோழி
முட்டையிலிருந்தே தயாரிக்க முடியும் என்பதையும் அவர்கள்
கண்டறிந்து உள்ளனர்.

மெல்போனிலுள்ள புளோரி இன்ஸ்டிடியூட் மற்றும் ஓசாகா
பல்கலைக் கழக விஞ்ஞானிகள், முட்டையிலிருந்து தயாரித்த
இன்சுலின், ஆறு நாட்கள் வரை கெட்டி தட்டாமல் தாக்குப்
பிடிக்கிறது.

‘கிளைகோ இன்சுலின்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த
மருந்தால், பல கோடி ரூபாய் விரயம் தவிர்க்கப்படும். மேலும்,
தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு, பம்பு அடைத்துக்
கொள்ளாமல், அதிக நாட்கள் இன்சுலினை பயன்படுத்தவும்
முடியும்.

தற்போது வெற்றிகரமாக சோதனையை முடித்துள்ள
விஞ்ஞானிகள், விரைவில் பெரிய அளவில் கோழி முட்டை
இன்சுலினை தயாரிக்க, ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அறிவியல் மலர்-தினமலர்

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

« Older entries