பசிக்கும்போதுதான் வயிற்றிலிருந்து சத்தம் வருகிறது
என்று சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும்
வயிற்றிலிருந்து சத்தம் வரலாம். உணவு உட்கொள்ளும்
பகுதியிலிருந்து கழிவாக வெளியேறும் பகுதி வரை
உள்ள உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல்,
பெருங்குடல் எல்லாமே சுருங்கிச் சுருங்கி விரிகின்றன.
அதன் மூலமாகத்தான் உணவு அரைத்து, கூழாக்கப்பட்டு,
அவற்றிலிருந்து சத்துகள் பிரிக்கப்பட்டு, உயிரணுக்களுக்கு
அனுப்பப்பட்டு, எஞ்சிய கழிவுகள் மலமாக வெளியேற்றப்
படுகிறது.
ஒரு நிமிடத்துக்கு 3 முதல் 12 முறை சுருங்கி விரியும்போது
வயிற்றுக்குள் சத்தம் உண்டாகிறது. வயிறு காலியாக
இருக்கும்போது, இந்தச் சத்தம் சற்று அதிகமாகக் கேட்கிறது,
–
—————————-
நன்றி- மாயா பஜார் – இந்து தமிழ் திசை