“நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் “என்ன ஒரு துரதிர்ஷட நிலை?” என்று பரிதாபமாக விசாரித்தனர்.

“இருக்கலாம்” என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம்பக்கத்தினர், “நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி , இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு” என்றனர்.

தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் “இருக்கலாம்” என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். “என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை” என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் “இருக்கலாம்” என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை.

இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர்.

இப்போதும் அந்த விவசாயி ” இருக்கலாம்” என்று கூறினார். அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார் ?
காரணம் உண்டு.

அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்துகொண்டவர். நாள்களில் நல்ல நாள் , கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்று ஒன்று இருப்பதை மறக்கவேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலையில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம். சுகம் – துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !!

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத் துக்குப் போ.

அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.

ஆனால் ஒரு நிபந்தனை.
“நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ” என்று கேட்டார்.
சீடன் சொன்னான்,
“குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன்.
இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.
அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.
அதன் பிறகு தென்பட்ட தெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.
வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.”

புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்…!”.

பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா.
ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.
ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.”

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.
ஞானி கேட்டார்,
“இது தான் அந்தத் தோட்டத் திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? “

சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !!

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும்
திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக்
கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில்
நீ ரோஜாத் தோட்டத் துக்குப் போ.

அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று
தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.

ஆனால் ஒரு நிபந்தனை.
“நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி
வரக் கூடாது.” என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன்
வந்தான்.

ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? “
என்று கேட்டார்.

சீடன் சொன்னான்,
“குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில்
உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று
தொடர்ந்து நடந்தேன்.
இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.

அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென
மேலும் நடந்தேன்.
அதன் பிறகு தென்பட்ட தெல்லாம் குட்டையான ரோஜாச்
செடிகளே.
வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர்
பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல்
போய் விட்டது.”

புன்முறுவலோடு ஞானி சொன்னார், “இது தான் காதல்…!”.

பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில்
சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய
காந்திச் செடியைப் பிடுங்கி வா.
ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.
ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக்
கூடாது.”

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.
ஞானி கேட்டார்,
“இது தான் அந்தத் தோட்டத் திலேயே அழகான சூரிய காந்திச்
செடியா..? “

சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான
செடிகள் இருக்கின்றன.

ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த
முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில்
முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த
செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.

நிபந்தனை ப்படி, ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு
செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு
இதை விட அழகான செடிகளை நான் பார்த்த போதும்
பறிக்க வில்லை”.

இப்போது ஞானி சொன்னார், “இது தான் திருமணம்…!”.

-படித்ததில் பிடித்தது

பெண் இன்று…

-இந்து தமிழ் திசை

கோபத்தை கொட்டுவதா, அடக்குவதா…

-நன்றி: இந்து தமிழ் திசை

சின்னதாய் ஒரு ஹலோ சொல்லப் பழகலாம்!

நன்றி: நம் தோழி

கடவுளாக இருங்கள்!

நன்றி: நம் தோழி

கை கழுவும்போது கவனம்

-நம் தோழி

உலக தண்ணீர் தினம்!

👉சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு 1992ஆம் ஆண்டு ரியோ ஜெனிரோவில் நடைபெற்றது.

👉தண்ணீருக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22ஆம் நாளை ‘உலக தண்ணீர் தினம்’ என்று கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

👉அதனால் ஐக்கிய நாடுகளி்ன் பொது சபை 1993ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் உலக தண்ணீர் தினத்தை கொண்டாட வடிவமைத்துக் கொடுத்தது.

👉நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.

👉பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன்.

👉ஆனா‌ல், இ‌ன்று அந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது.

👉உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

👉ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.

👉நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு!

கோஸ்டி: சினிமா விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால்.
இவரை அமானுஷ்ய சக்திகள் பிடித்து ஆட்டுகின்றன.
பிரபல ரவுடி கே.எஸ்.ரவிக்குமாரை கைது செய்ய வேண்டிய
பொறுப்பும் அவருக்கு வருகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் சிலரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கிய காஜல் அகர்வால்
சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அதில் இருந்து அவரால் மீள
முடிந்ததா என்பது மீதி கதை.

காஜல் அகர்வால் காக்கி உடையின் கம்பீரத்தையும் மீறி
அழகாக இருக்கிறார். ரவுடிகளிடம் முரட்டுத்தனமாக
விசாரிப்பது, மேல் அதிகாரிகளிடம் அசடு வழிவது என
நடிப்பில் வித்தியாசம் காட்டி உள்ளார்.

அவருடைய நண்பர்களாக வரும் ஊர்வசி, சத்யன் இருவரும்
கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.
சிரிப்பு வில்லனாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் மாறுப்பட்ட
நடிப்பை வழங்கியிருக்கிறார்.

யோகிபாபு, கிங்ஸ்லி, ஜெகன், நான் கடவுள் ராஜேந்திரன்,
தங்கதுரை, மனோபாலா, சுவாமிநாதன் என படத்தில் வரும்
காமெடி நடிகர்கள் அனைவரும் சிரிப்புக்கு உத்தரவாதம்
அளிக்கிறார்கள்.

குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுக்க வரும்
கலைராணியும் தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். ஜெய், ராதிகா
ஆகிய இருவரும் சில காட்சிகளில் வந்தாலும் அனுபவ நடிப்பு மூலம்
கவனம் ஈர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் கண்களுக்கு விருந்து
படைத்துள்ளார். சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் கேட்கும்படி
உள்ளது. பின்னணி இசை காமெடி கதைக்கு பொருத்தமாக இருக்கிறது.
வழக்கமாக காமெடி படங்களுக்கு இருக்க வேண்டிய வேகம் இதில்
கொஞ்சம் குறைவு. லாஜிக் மீறல்களும் நிறைய இருக்கிறது.

தியேட்டருக்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும்
என்ற முயற்சியில் வென்று இருக்கிறார் இயக்குனர் கல்யாண்.

-தினத்தந்தி

வாசனை திரவியங்கள்’- சில சுவாரசியமான தகவல்கள்

வாசனை திரவியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. எகிப்து, சர்வதேச வாசனை திரவிய வர்த்தகத்தில் முதலாவதாக விளங்கியது. அந்த நாட்டு மக்கள் வாசனை திரவியங்களை ‘கடவுளின் வியர்வை’ என்று நம்பினார்கள்.

அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்களில் ‘லவங்கப்பட்டை’ முக்கியப் பொருளாக சேர்க்கப்பட்டது. கிரேக்கர்களும் வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்தினர். சில வாசனைகள் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் மேம்படுத்துவதாக அவர்கள் நம்பினர்.

உலகம் முழுவதும் அந்தக் காலத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வணிகர்கள் போன்ற உயர்தட்டு மக்களிடையே வாசனை திரவியங்கள் அதிகம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. தற்போது வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யும் பிரபல நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பது பிரான்சு.

நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு ‘ஒல்பாக்ஷன்’ எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.

வெயில் காலத்தில் லேசான நறுமணம் கொண்ட திரவியங்களையும், குளிர்காலத்தில் அடர்ந்த வாசம் கொண்ட திரவியங்களையும் பயன்படுத்தலாம். வாசனை திரவியம் வாங்கும்போது, மணிக்கட்டின் மீது பூசி அந்தப் பகுதியில் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் மட்டுமே வாங்குவது நல்லது.

வாசனை திரவியங்களை வாங்கும்போது, மணிகட்டின் பின்பகுதி அல்லது கழுத்துப் பகுதியின் கீழ் பூசி பரிசோதிப்பது ஏன் தெரியுமா? அந்தப் பகுதிதான் நம் உடலின் ‘பல்ஸ் பாயிண்ட்’. அங்கு இருக்கும் ரத்த நாளங்கள் உடல் வெப்பத்தை சீக்கிரம் வெளிப்படுத்தும்.

இதனால், வாசனை திரவியத்தின் நறுமணம் மற்றும் அதன் விளைவு எளிதாகத் தெரியும். நீங்கள் வாசனை திரவியம் பயன்படுத்த ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே, அந்த நறுமணத்துக்கு உங்கள் மூளை பழக்கமாகி விடும். அதன் பிறகு உங்கள் வாசனையையும், வாசனை திரவியத்தையும் உங்களால் தனித்தனியே பிரித்து நுகர முடியாது.

ஒரே வகையான வாசனை திரவியம், இரண்டு நபர்களின் உடலில் வெவ்வேறு விதமான வாசனைகளைக் கொடுக்கும். இதற்கு உடலின் இயற்கையான வாசம், வியர்வை, வெளிப்புற தூசு, மாசுபாடு போன்றவையும் காரணமாகும்.

நன்றி: தினத்தந்தி (தேவதை)

« Older entries