சீனா-ஒலிம்பிக் தொடக்க விழா

கஸ்ட் 8… சீன ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஒன்பதே நாட்கள்.

தொடக்க விழாவின்போது எந்தத் தடங்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது சீனா. இப்போது சீனாவில்

பருவமழைக் காலம். இரண்டு தினங்களுக்கு முன்புகூட கொட்டிய மழையில், அடித்தக் காற்றி்ல் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். சுமார் 1000 கிராமங்களில் கடல் நீர் புகுந்தது.

ஒலிம்பிக்கி்ற்காக பல தியாகங்களை செய்திருக்கிறது சீனா. பீஜிங்கில் மாசு அளவைக் குறைக்க நகரத்தில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான தொழிற்சாலை இழுத்து மூடியிருக்கிறது சீனா.

பல்லாயிரம் கோடிகளை கொட்டி விளையாட்டுத் திடல்களை, வீரர், வீராங்கனைகள் தங்கும் இடங்களை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறது.

உலக அளவில் சீனாவை கொண்டுபோய் சேர்க்கும் சங்கதியாய் ஒலிம்பிக்கைக் கருதுகிறது சீன தேசம். அதனால் ஒலிம்பிக் தொடங்கும் இந்த வருடத்தின் 8ஆம் மாதமான ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று இரவு 8 மணி 8 நிமிடத்தின் 8 நொடியில்  இயற்கை எதுவும் சதி செய்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா.

முதலில் வருண பகவானை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது அது.

தொடக்கவிழா நடக்கவிருக்கும் பறவைக் கூடு தேசிய ஸ்டேடியத்துக்கு மேற்கூரை இல்லாததால் மழை வந்து விழாவை மறிக்கக்கூடும் என அஞ்சுகிறார்கள், எனவே தொடக்க விழா நடக்கும் அந்த மூன்றரை மணி நேரம், இந்த ஸ்டேடியம் இருக்கும் பகுதிக்குள்ளேயே நுழையவிடக்கூடாது என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இதற்காக அமெரிக்கா பயன்படுத்தி வரும்கிளவுட் சீடிங்என்ற நவீன மழைத் தடுப்பு முறையை பயன்படுத்தவுள்ளது சீனா. பெய்ஜிங் நகரத்தை நோக்கி திரண்டு வரும் மழை மேகங்களின் மீது சில்வர் அயோடைடு ரசாயனத் துகள்கள் அடங்கிய ராக்கெட்களை ஏவி முன்கூட்டியே மழை பெய்யவைக்க திட்டமிட்டுள்ளனர்.

சில்வர் அயோடைடு துகள்கள் மழை மேகங்களுக்குள் இருக்கும் நீர்த்துளிகளை பனிக்கட்டியாக மாற்றிவிடும். அவை உடனே பனிக்கட்டி மழையாக கொட்டித் தீர்த்துவிடும். இதுதான் ஐடியா!

இந்தப் பணிக்காக பெய்ஜிங் நகரைச் சுற்றி 26 மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக, தற்காலிகமாக பணியாற்ற 32 ஆயிரம் பேரை நியமித்துள்ளனர்.

இயற்கையை கொஞ்சம் வெல்ல செயற்கையாக எவ்வளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது.

மழைக்கு எதிராக மறியல் செய்ய ஒரு நாடே களத்தில் இறங்கியிருப்பது ஆச்சரியம்தான்!

 

சேலத்துக்காரருக்கு காந்திஜியின் தண்டனை

சேலத்துக்காரருக்கு காந்திஜியின் தண்டனை!
 
 
 
தமிழ்நாட்டின் ஒரு மாவட்டச் செயலாளர் சேலத்துக்காரர். தனது ஒரே மகள் திருமணத்தின் போது செலவுக்குப் பணம் போதாமையால் காங்கிரஸ் கட்சி நிதியிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துச் செலவழித்துவிட்டார். (பின்னால் கொடுத்து விடலாம் என்று). காங்கிரஸ் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டது. உடனே அவர் யாரிடமோ கடன் வாங்கி வார்தாவுக்குச் சென்று காந்திஜியிடம் தன்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சினார்.

“மன்னிக்க முடியாது. மன்னிக்க மாட்டேன்” என்று காந்திஜி உரத்த குரலில் சொல்லி விட்டார்.

ஆசிரமத்தைத் தேடி வந்த அந்த விருந்தாளியை யாரும் சாப்பிடக் கூட அழைக்கவில்லை (காந்தி சொன்னால் தான் அழைப்பார்கள்) காந்தியை சாப்பிட அழைத்தார்க்ள. சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டார் அன்று உபவாச தினமும் அல்ல. காந்திஜியுடன் இருந்த சி.எப். ஆண்ட்ரூûஸ சாப்பிடப் போகச் சொன்னார். ஆனால் அவர் போகவில்லை.

“வார்தா வருவதற்கு மட்டும் கடன் வாங்கி வந்தேன்” என்றார் அந்த சேலத்துக்காரர்.

“நடந்தே போ, அதான் உனக்கு தண்டனை” என்றார் காந்திஜி கண்டிப்பாக!

ஆண்ட்ரூஸ் அந்த சேலத்துக்காரரை ஜாடை காட்டி தன்னுடன் வரும்படி அழைத்து தனக்கு எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை அவருக்கு கொடுத்து உண்ணச் சொன்னார். அவரை ரயில் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் சேலத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பினார்.

ஒரு குற்றவாளியைப் போல ஆண்ட்ரூஸ் காந்திஜி முன் நின்றார்.

“பாபுஜி” என்று அழைத்தார். மெல்லிதாக நூல் நூற்பிலிருந்து முகத்தைத் திருப்பாமலேயே “சொல்லு” என்றார்.

“அந்த ஆளுக்கு நான் சாப்பாடு பண்ணி வைத்து சேலத்துக்கும் ரயில் டிக்கெட் என் செலவில் வாங்கித் தந்தேன் பாபு” என்றார் தயங்கித் தயங்கி.

“நமது குழந்தைகள் என்றுமே குழந்தைகளாக இருப்பதில்லை. ஆனால் பெற்றோர்தான் என்றுமே பெற்றோராக இருக்கிறார்கள்!”

“தெரியும் நீ அப்படிச் செய்வாய் என்று” எனச் சொல்ல புன்னகையுடன் பார்த்தார் மகாத்மா.

அன்று இருவரும் சாப்பிடவில்லை!

யாரோ ஒரு சேலத்துக்காரன் செய்த பிழைக்காக இரண்டு மகாத்மாக்கள் தங்களை ஏன் வருத்திக் கொள்ள வேணும்?

 

source:tamil.sify.com

 

மேலாடை இல்லாத செக்ஸி பந்தாட்டம்

யூரோ கோப்பை 2008 கால்பந்துப் போட்டியைத் தொடர்ந்து, ஆஸ்திரியா – ஜெர்மனி அணிகளுக்கு இடையே இந்த செக்ஸி பந்தாட்டம் நடந்தது. மேலாடைக்குப் பதிலாக இரு அணி வீராங்கனைகளும் தங்கள் நாட்டுத் தேசியக் கொடி வண்ணத்தைத் தங்கள் வெற்று உடலில் தீட்டிக்கொண்டார்கள். அதுவே உடை; கீழாடையிலும் அவர்கள் படு சிக்கனம்! மெல்லிய நூலாடையைத் தவிர கீழேயும் வண்ணம்தான்.
source:http://tamil.sify.com/fullstory.php?

செக்ஸ் கிளுகிளுப்பு

செக்ஸ் கிளுகிளுப்புக்கு காதல் ரோபோக்கள்

ஆம்ஸ்டர்டாம், ஜூன் 6- ரோபோவுடன் மனிதர்களால் காதல் கொள்ள முடியுமா? செக்ஸ் வைத்துக் கொள்ள முடியுமா? ஏன் முடியாது? எதிர்காலத்தில் இப்படிப்பட்டகிளுகிளுப்பு ரோபோக்கள்உருவாகப் போகின்றன. ஹாலந்து நாட்டில் விஞ்ஞானிகள் கூடி ஆலோசித்து இப்படிப்பட்ட முடிவுக்கு வந்துள்ளனர். ரோபோ என்பது மனித இயந்திரம். ஜப்பான் உட்பட பல நாடுகளில் இப்போது ரோபோக்கள் தயாரிக்கபப்ட்டு வருகின்றன.

சாதாரண வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள் தற்போது பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறையிலும் அவைகளின் பங்கு அதிகமானதாக விளங்குகிறது. அந்த வகையில் எதிர்காலத்தில் எந்த அலவிற்கு ரோபோக்கள் முன்னேற்றம் காணும் என்ற ஆய்வில் ஹாலந்து விஞ்ஞானிகள் மாநாடு நடத்தினர். எதிர்காலத்தில் மனிதர்கள் காதல் கொள்ளவும், செக்ஸ் வைக்கவும்கூட ரோபோக்கள் தயாரிக்கப்படும். அதை
பொதுமக்களும் விரும்புவர். இப்போது செக்ஸ் பொம்மைகள் போல, பிற்காலத்தில் செக்ஸ் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்று அந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு ரோபோ வந்தால் நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறை குறையும் வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்ப்போம்.

Courtesy   ;

 http://www.vanakkammalaysia.com