நன்றி: தினத்தந்தி
10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்
ஜனவரி 26, 2023 இல் 11:54 முப (Uncategorized)
Tags: செய்திகள்
குரங்குகளை கொலை செய்ய அனுமதி அளித்த நாடு ..
ஜனவரி 21, 2023 இல் 6:47 முப (Uncategorized)
Tags: செய்திகள்
சிவில் நீதிபதியாக 25 வயது இளம்பெண் தேர்வு
ஜனவரி 18, 2023 இல் 8:04 முப (Uncategorized)
Tags: செய்திகள்
இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:
ஜனவரி 16, 2023 இல் 4:26 பிப (Uncategorized)
Tags: செய்திகள்
71ஆவது பிரபஞ்ச அழகிப்போட்டி அமெரிக்காவின்
நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்தது. இந்த போட்டியில் 80க்கும்
மேற்பட்ட இளம்பெண்கள் பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக
போட்டியிட்டனர்.
இறுதி சுற்றுக்கு அமெரிக்கா, வெனிசுலா, டொமினிக்
குடியரசு நாடுகளை சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த
இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 28வயதான
ஆர்’போனி கேப்ரியல் வெற்றி பெற்று 2022 பிரபஞ்ச அழகி
பட்டத்தை தட்டிச் சென்றார்.
கடந்த முறை பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற இந்தியாவை
சேர்ந்த ஹர்னாஸ் சந்து ரூ.45 கோடி மதிப்பிலான
கிரீடத்தை புதிய பிரபஞ்ச அழகிக்கு சூட்டி வாழ்த்தினார்.
இறுதி சுற்றில் வெற்றிக்கான கேள்வியும் அதற்கு வெற்றி
பெற்ற ஆர்’போனி கேப்ரியல் அளித்த பதிலும் தற்போது
டிரெண்டாகி வருகிறது. நீங்கள் பிரபஞ்ச அழகி பட்டத்தை
வென்றால் அதன் மூலம் மேம்பாட்டிற்கும்,
முன்னேற்றத்திற்கும் எப்படி செயலாற்றுவீர்கள் என
ஆர்’போனி கேப்ரியலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நான் மாற்றத்திற்கான தலைவராக
செயல்படுவேன். டிசைனிங் மற்றும் தையல் தொழில் நான்
13 ஆண்டுகளாக ஈடுபடுகிறேன். நன்மைக்கான ஆற்றலாக
நான் பேஷன் தொழிலை பார்க்கிறேன். சுற்றுசூழலுக்கு மாசு
வராத வண்ணம் மறுசுழற்சி முறையிலான பொருள்களையே
நான் தையல் தொழிலில் பயன்படுத்துகிறேன்.
மேலும், குடும்ப வன்முறை, கடத்தல் போன்ற
சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை நான் மீட்டு
பணிக்கு ஈடுபடுத்துகிறேன். பிறர் வாழ்வில்
மாற்றத்திற்கான விதையை விதைத்து அவர்களை மாற்றிக்
காட்டுவதன் மூலம் நாம் மாற்றத்தின் கருவியாக இருக்கிறோம்.”
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
இதுவே அவர் பட்டத்தை வெல்வதற்கான பதிலாகவும்
அமைந்தது.
நியூஸ் 18
குமரி கண்ணாடி பாலம்.. ஆய்வுப் பணிகள் தீவிரம்..
ஜனவரி 13, 2023 இல் 4:57 பிப (Uncategorized)
Tags: செய்திகள்
கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகளுக்கான
படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடல் நீர் மட்டம் குறைவாக இருக்கும் நாட்களில்
திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து தடைப்படுகிறது.
இதையடுத்து, திருவள்ளுவர் சிலை பாறைக்கும்,
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற்
பரப்பை கண்ணாடி இழைப்பாலம் கொண்டு இணைக்க
ரூ.30 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள்
கூறுகையில், “இரண்டு பாறைகள் இடையே அமைக்கப்பட உள்ள
நீல கடல் பரப்பின் மேல் அமைக்கும் கண்ணாடி இழை பாலத்தில்
நடந்து செல்லும் போது.அவர்களது பாதங்களின் கிழே உள்ள
நீல வண்ண கடல்-ஐ ரசிக்க முடியும்.
இந்தக் காட்சி வித்தியாசமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியையும்
கொடுப்பதாக அமையும். மேலும், பாலம் அமைப்பது தொடர்பாக
முதல் கட்டமாக ஆய்வு பணியை தொடங்கி உள்ளோம்.
–
கன்னியாகுமரி கடலில் அருகருகே உள்ள பாறைகளில்
சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலை
உள்ளது. இந்த இடங்களுக்கு கடல் கரையில் இருந்து, பூம்புகார்
இரண்டு பாறைகளின் கடின தன்மையை அறிய துளை இட்டு பாறை
பொடிகளை எடுத்து சோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.
இந்த மாதிரிகள் அனைத்தையும்.சென்னை ஐ.ஐ.டி.,க்கு அனுப்பி,
இரண்டு பாறைகளின் திறத்தன்மைமை ஆய்வு செய்ய உள்ளோம்.
இந்த ஆய்வுகளின் முடிவில் இரண்டு பாறைகளுக்கு இடையே
ஆன கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.
ஒரு ஆண்டு கால அவகாசத்தில் பாலப் பணியை முடிக்க
திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
-செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ
17 ஆட்டோக்களில் தமிழகத்தை சுற்றி வரும் வெளிநாட்டினர் – தூத்துக்குடியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
ஜனவரி 5, 2023 இல் 2:23 பிப (Uncategorized)
Tags: செய்திகள்
தூத்துக்குடி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,
நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
37 பேர் கடந்த மாதம் 28-ந்தேதி தமிழகத்திற்கு சுற்றுலா
வந்தனர்.
இவர்கள் சென்னையில் இருந்து தஞ்சாவூர், மதுரை
வழியாக 17 ஆட்டோக்களில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில்
உள்ள தனியார் தோட்டத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு
சுற்றுலா பயணிகள், பொங்கல் பண்டிகையை
வரவேற்கும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி
வேட்டி, சேலை அணிந்து, விறகு அடுப்புகளில் பொங்கல்
வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் சுவையான பொங்கல் வைத்த வெளிநாட்டினருக்கு
பரிசுகளும் வழங்கப்பட்டன.
-தினத்தந்தி
இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் ஆதாரில் முகவரி மாற்றம்…
ஜனவரி 4, 2023 இல் 2:04 பிப (Uncategorized)
Tags: செய்திகள்
இந்து தமிழ் திசை
அறிமுகமாகும் டாப் 5 ஆயுதங்கள்
ஜனவரி 2, 2023 இல் 11:44 முப (Uncategorized)
Tags: செய்திகள்
அணிவகுப்பில் ஒட்டகப்படை வீராங்கனைகள்
ஜனவரி 2, 2023 இல் 11:40 முப (Uncategorized)
Tags: செய்திகள்