மனித வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான காலக்கட்டம்..

கெம்புக்கு 30 வயது ஆக இன்னும் இரண்டு நாள் தான் இருந்தன. அவருக்கு கவலை வந்துவிட்டது.தம்முடைய பொன்னான இளமைக் காலம் போய் விட்டது அதன் இன்பமும் அழகும் போய்விட்டன என்று வருந்த தொடங்கிவிட்டார்.

அவர் தினந்தோறும் காலையில் உடற்பயிற்சி எடுக்கப் போகும் பொழுது நிக்கோலஸ் என்ற அவரது நண்பரை சந்திப்பார்.அவருக்கு வயது 75 ஆனால் அவர் உடல் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் எப்போதும் உற்சாகமாக இருப்பார்.

கெம்பின் முகம் வாடி இருப்பதே கண்ட நிகோலஸ் என்ன ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார்.கெம்ப் கவலையை கூறி அவரிடம் கேட்டார் ,”நீங்கள் இந்த வயதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் எந்த பருவத்தை மகிழ்ச்சியான காலமாக நினைக்கிறீர்கள்”.

அதற்கு நிக்கொலஸ் பதில் சொன்னார்.

‘நான் சிறு குழந்தையாக ஆஸ்ட்ரியாவில் இருந்த பொழுது எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் என் பெற்றோர் கவனித்துக் கொண்டார்கள் அதுதான் என் வாழ்க்கையில் சிறந்த காலம்.

‘நான் பள்ளிக்கூடம் சென்று பிற்காலத்தில் என் உயர்வுக்கு காரணமான கல்வியை கற்றேனே… அதுதான் என் வாழ்க்கையில் பொன்னான காலம்

‘எனக்கு முதன் முதலாக வேலை கிடைத்து அதற்கான சம்பளம் வாங்கினேனே…அதுதான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலம்.

‘என் மனைவிய முதல் முதலாக சந்தித்த அவளை காதலித்தேனே.. அதுதான் என் வாழ்க்கையின் பொன்னான காலம்

‘இரண்டாம் உலகப்போர் மூண்டது .எங்கள் உயிரைக் காப்பாற்ற நாங்கள் ஆஸ்ட்ரியாவை விட்டு ஓட வேண்டியிருந்தது. வட அமெரிக்காவிற்கு செல்லும் கப்பலில் நானும் என் மனைவியும் இடம் பிடித்தோம். ஒரு பேராபத்தில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் இருந்தோம். அதுதான் என் வாழ்க்கையில் சந்தோஷமான காலம்.

‘கனடா வந்து வாழ்க்கையை புதிதாக தொடங்கி, எங்களுக்கு குழந்தை பிறந்து, அவன் எங்கள் கண்முன் வளர்வதை பார்த்தபோது ஆனந்தமாக இருந்தது.. இதுவே என் வாழ்க்கையில் பொன்னான காலம்.

இப்போது எனக்கு 75 வயது ஆகிறது. நான் இப்போதும் உடல்நலத்தோடு இருக்கிறேன் .மன நிறைவோடு இருக்கிறேன். முதன் முதலாக சந்தித்த போது என் மனைவி எப்படி நேசித்தேனோ அதேபோல் இப்போதும் நேசிக்கிறேன் இதுதான் என் வாழ்க்கையில் சந்தோஷமான காலம்.

இந்தக் கதையில் உலகப் போர் மூண்டபோது அவர் ஊரை விட்டு ஓடியதோ அல்லது புது நாட்டில் புது வாழ்க்கை ஆரம்பிப்பதோ எளிதான மகிழ்ச்சிக்குரிய விஷயம் இல்லை. ஆனால் நிக்கொலஸ் அதை நினைத்து வருத்தப்படவில்லை.கப்பலில் இடம் கிடைத்தது நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் என்று இல்லாமல் வாழ்க்கை முழுவதும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான ரகசியம் இந்த கதையில் நமக்கு படிப்பினையாக உள்ளது.

Reference : book “ இது சிறகுகளின் நேரம்” – கவிக்கோ அப்துல் ரகுமான்

பதிவிட்டவர்:
ப்ரீதி வெங்கடசுப்ரமணியம் (தமிழ் கோரா)

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

அது ஒரு கிராமம் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாட போகிறான். அப்போது என்னை காப்பாற்று! காப்பாற்று! என்று ஒரு அலறல் ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனை பார்த்து பரிதாபகமாக கத்துகிறது.

உன்னை வலையில் இருந்துவிடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய் நான் மாட்டேன் என்று மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னை சத்யமாக சாபிடமாட்டேன் என்னை காப்பாற்று என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான், முதலை சிறுவனின் காலை பிடித்துக்கொண்டது. பாவி முதலையே இது நியாயமா?? சிறுவன் கண்ணீருடன் கேக்க.. அதற்கென்ன செய்வது? இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றி கூட கவலை இல்லை ஆனால் நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்ததைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

முதலையின் வாய்க்குள் மெல்ல போய்க்கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளை பார்த்து கேட்டான், முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கையா?

அதற்கு பறவைகள் எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம் ஆனால் அதை பாம்புகள் குடித்துவிட்டு சென்று விடுகின்றன. அதனால் சொல்கிறோம் முதலை சொல்வது சரிதான்..

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைய பார்த்து சிறுவன் அதே கேள்வியை கேக்கிறான்..


நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்கு துணிகளை சுமக்க வைத்து சக்கையாக பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி தளர்ந்துபோன போது எனக்கு தீனி போட முடியாது என்று சொல்லி துரத்திவிட்டான். முதலை சொல்வது தப்பே இல்லை. இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலை பார்த்து சிறுவன் இதே கேள்வியை கேட்கின்றான். இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல.. முதலைக்கு கோபம் வந்துவிட்டது.

சிறுவனின் காலைக் கவ்விய படியே வாதாட தொடங்கிறது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே நீ பேசுவதால் நீ சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை என்றது முயல். முதலை சொன்னது நான் முட்டாள் இல்லை சிறுவனை விட்டால் அவன் ஓடிவிடுவான் என்று..

பெரிதாக சிரித்த முயல் புத்தியில்லா முதலையே! உன் வாலின் பலத்தை கூடவா நீ மறந்துவிட்டாய்? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்தி பிடித்துவிட முடியுமே’ என்று நினைவுபடுத்த முதலையும் சிறுவனை விடுவித்து பேச தொடங்கிது.

அப்போதுதான் முயல் சிறுவனை பார்த்து ‘’நிற்காதே! ஓடிவிடு! என்று கத்த சிறுவன் ஓடிவிடுகிறான். முதலை சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலைலயே சிக்கி இருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது அதன் நினைவுக்கு வந்தது!

சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோட தன்னை பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது’ புரிந்ததா இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்..!

சிறிது நேரத்திதுக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிரமத்தினரை அழைத்துவர.. அவர்கள் முதலையை கொன்றுவிடுகிறார்கள்..

அப்போது சிறுவனோடு வந்த புத்திசாலி நாய் முயலை துரத்தி… சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது.. சிறுவன் பெறுமூச்சு விடுகிறான்..

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்…

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது !

என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

மூலம் — சுவாமி சுகபோதானந்தாவின் “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” லிருந்து

வார்த்தைகளின் வலிமை

வார்த்தைகளின் சக்தி எத்தகையது?

ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் பல நாட்களாக கடும்
வயிற்று வலியால் அவதிப்பட்டு, அதற்கு மருந்து தேடி
வந்தான்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்து இருந்தார்.
சில நாட்களில் அவர் அந்த ஊரில் பிரசித்தமாகிவிட்டார்.
அவர் கூறும் வார்த்தைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

ஊர் மக்கள் அவரை மிகவும் புகழ்ந்தார்கள். உடல் நலம்
பெறுவதற்கு நாடியும் சென்றார்கள்.

இது அந்த இளைஞனுக்கும் தெரிய வந்தது. மறுநாள் அவன்
குளித்து பயபக்தியுடன் அந்த சாமியாரை தேடிச் சென்று
பக்தர்கள் கூட்டத்தில் முன்னாள் அமர்ந்து கொண்டான்.

அவனுடைய பிரச்சினையை கேட்டு அறிந்த பிறகு அந்த
சாமியார், அவனுக்கு இறைவனை பிரார்த்திக்க ஒரு
ரகசியத்தை உபதேசம் செய்து தினமும் அதை உச்சரிக்க
சொன்னார்.

அந்தக் கூட்டத்தில் ஒரு நாத்திகனும் இருந்தான். அவன்
உடனே வெறும் வார்த்தைகளை திரும்பத் திரும்ப
சொல்வதால் வயிற்று வலி எப்படி நீங்கும் என்று கேட்டான்.

உடனே அந்த சாமியார் அவனை ’நீ முட்டாள்…. மூடன்…
மடையன் …’ என்று உரக்க அவனைத் திட்டினார்.

அந்த நாத்திகனுக்கு உடனே கோபம் வந்து விட்டது. யாரைப்
பார்த்து இந்த வார்த்தைகளை கூறினீர்கள். எனக்கு ஒரு
மாத்திரத்தில் உங்களை நான் தாக்கி விடவும் கூடும் என்றான்.

அப்போது அந்த சாமியார் கேட்டார் முட்டாள் மூடன் மடையன்
என்பதும் வெறும் வார்த்தைகள் தானே? அது உங்களுக்கு
இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தியதைப் பார்த்தீர்களா?
இதுதான் வார்த்தைகளின் வலிமை என்றார்.

அந்த நாத்திகன் வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டான்.

படித்ததில் பிடித்தது

மல்யுத்தம் – ஜென் கதை

நன்றி

பறவை உயிருடன் உள்ளதா…(ஜென் கதை)

நன்றி

வாங்க டீ சாப்பிடலாம் – ஜென் கதை

ப.பி

நரியும் திராட்சையும் – நீதிக்கதை

தெனாலிராமன் செய்த வித்தை!

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு
அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.
பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண
இயலவில்லை.

எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக்
கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும்
அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி
வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன்
வித்தைகளைக் காட்டிப் பரிசு பெறும் எண்ணத்துடன் இருப்பதைப்
புரிந்து கொண்டான்.

அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல சேர்ந்து
கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில்
வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி
அனைவரையும் மகிழ்வித்தான்.அரசரும் அவன் செய்து காட்டிய
வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறு முன்பாகவே இராமன் அரசே!
இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான்
செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப்
பாருங்கள்.பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் என்றவாறு
முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது
மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ‘உன்
வித்தைகளையும் காட்டு’ என்று அனுமதி வழங்கினார் மன்னர்.

செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். உனக்கு என்னென்ன
வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை
வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்.என்று சவால் விட்டான்.
அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்.
அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை.ஒரே ஒரு வித்தை
மட்டும் செய்கிறேன்.அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன்.
நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து
காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம்
பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும். என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக ப்பூ, நீ கண்ணை மூடிக்
கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்து கொண்டே
செய்ய வேண்டும் அவ்வளவு தானே? நீ செய்து காட்டு என்றான்.

உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை
நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய
கொட்டிக் கொண்டான். அனைவரும்

கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச்
சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டி
விட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து இந்த வித்தையை நீர் உம்
கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள் என்றான்.

வித்தைக்காரனால் எப்படி முடியும்? நான் தோற்றுப் போனேன். என்னை
மன்னித்து விடுங்களென்று தலை குனிந்து நின்றான்.மன்னர் மகிழ்ந்து
இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.

பிறகு தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன்.
நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் என்றார்.

இராமன் அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு
மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் க
ர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு
வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன்
கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன்.

நான் வித்தைக்காரன் என்று பொய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள்.
ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள். என்று கேட்டுக்
கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே
வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்..
பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான

விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.

தெரியாததில் ஈடுபடக்கூடாது! -நீதிக்கதை

நன்றி- தேன்கூடு

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைப்படாதீர்கள்..!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம்
தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’
என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன.

அதைக் கொண்டு
மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது.
மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?
உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’
என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை
துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி………!!!

😊

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைப்படாதீர்கள்…எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உங்களுக்காக காத்திருக்கும்.

நன்றி-தமிழ் கோரா

« Older entries