எட்டாவது அதிசயம் – கவிதை

முட்டாள் தினத்தை இதுவரை
சொந்தம் கொண்டாடி யாரும்
சுய விருப்பம் காட்டியதில்லை…

ஆனாலும், உலகில்
செழித்த வரலாறு
படைத்து ஜெயக்கொடி நாட்டி வருகிறது!

பூரண புத்திசாலி எனும்
பெரும் பெருமை
மானுடப் படைப்பில் இல்லை
அதிபுத்திசாலிக்கும் இங்கே
அங்குல அளவேணும்
அடிமுட்டாள்தனம் உண்டு!

முட்டாளென்று உணரும்போதே
மனிதன்
புத்திசாலி ஆகிறான்…

பிறரை முட்டாளாக்க
முயலும்போது
அடி முட்டாளாகிறான்…

ஆண்டில் ஒருநாள் முட்டாள் ஆவது
ஆனந்த பரவசம்…
ஆண்டு முழுவதும் அவதாரம் எடுப்பது
ஆறறிவின் அதல பாதாளம்!

அனைத்தும் ஒன்றென்ற
அத்வைதப் பார்வையில்
அறிவாளிக்கும், அடி முட்டாளுக்கும்
அர்த்தமே இல்லை என்பது
ஆன்மிக ஞானத்தின் ஆச்சரியம்!

அன்றாட வாழ்வில்
அறிவுக்கும், அன்புக்கும்
அந்நிய துாரம்…

அறிவியல் விதியில்
முட்டாள் தனத்துக்கும்
முழுமையான அன்புக்கும்
இடைவெளியே இல்லா நெருக்கம்!

ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும்
இன்ப சுரபியாய் இயங்குவது
உலகின்
எட்டாவது அதிசயம் அல்லவா?

ஆகவே நண்பர்களே…
ஏப்ரல் முதல் நாளன்று ஏமாந்தால்
அது அவமானம் இல்லை
ஆகாய உயரத்து
அக்மார்க் அன்பின் முத்திரை!

-நெல்லை குரலோன்,
பொட்டல்புதுார், தென்காசி
நன்றி: வாரமலர்

கற்கால மனிதன் – கவிதை

நன்றி: வாரமலர்

படித்ததில் பிடித்த வரிகள்

(மழையில் குளித்த வெயில் – மின்னூல்)

புன்னகைகளை புதைக்காதீர்கள்!- கவிதை

பயன்படாத கோபத்தையும்
பாழாய்ப் போன பொறாமையையும்
பாக்கெட்டுக்குள் வைத்து
அவ்வப்போது பாம்பாய்
படமெடுத்துக் கொள்கிறேன்!

பக்கத்து வீட்டு சட்டிப்பூ
பூத்துக் குலுங்கினால்
பூரித்திருக்கும் என் முகம்
கொஞ்சம் பொசுங்கிக் கொள்கிறது!

செல்லமாய் சேர்ந்து செல்லும்
சொந்த பந்தங்களைக் கண்டால்
சிரித்திருக்கும் என் முகம்
சிறுக சிணுங்கிக் கொள்கிறது!

பதக்கப் பரிசு பிடித்து
படியேறுபவனைக் கண்டால்
பழம் சுவைத்த என் பற்கள்
பல கற்களை கடித்துக் கொள்கிறது!

புகழ் மாலை சூடி
புறப்பட்டவனைக் கண்டால்
வாழ்த்த வந்த என் வார்த்தைகள்
வசை மொழிகளை வாரி குவிக்கிறது!

தொடர் வெற்றி துாக்கி
தோள் தட்டுபவனைக் கண்டால்
இதமாய் இருந்த என் இதயம்
எரிமலையாய் கொதித்துக் கொள்கிறது!

வேண்டாத பொருட்களை
விலை கொடுத்து வாங்க
வீதி வீதியாய் அலையும் நாம்
இலவசமாய் கிடைக்கும்
இயற்கை சிரிப்பை இதயங்களோடு
ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது?

வாருங்கள் பொன் நகைகளை
புதைத்து வைப்போம்
புண்ணான நெஞ்சங்களில்
பொன்னான பூஞ்சிரிப்புகளை
எந்நாளும் ஏற்றி வைத்து
திருநாளாய் தினமும் சிரித்திருப்போம்!

— க. நிலவழகன், எர்ணாகுளம், கொச்சி
நன்றி: வாரமலர்

தொடர் வெற்றி – கவிதை

நாளை விடியும் – கவ

ஞானம் – கவிதை

-தாரா-புளூம்ஸ்%20JAN-2023.pdf

இராட்சச மானுடம் – கவிதை

நன்றி: கணையாழி

வேர்களைத் தேடி – கவிதை

நன்றி: கணையாழி

போர்டு சுத்தமா இருக்கணும்! – கவிதை

நன்றி: கணையாழி

« Older entries