வைகாசி விசாகம் நட்சத்திரம் 2023ல் June 2ஆம் தேதி, (வைகாசி 19) வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு
தொடங்கி அன்று நாளை காலை 5.55 மணிக்கு முடிவடைகிறது.
♥ வைகாசி விசாக நட்சத்திர விரத விரதம் கடைபிடித்தால் :-
♥ உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்
♥ துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் .
♥ திருமண பேறு கிட்டும்.
♥ குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். குலம் தழைத்து ஓங்கும்.
♥ வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும்.
♥ ஆபத்துக்கள் அகலும்.
♥ கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் வேலவன்.
♥ வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.
♥ பக்தர்களில் பலர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக முருகன் கோவில்களுக்கு வந்து வணங்குகிறார்கள்.
♥ காஞ்சி மஹாபெரியவர், நம்மாழ்வார், திருவாய்மொழிபிள்ளை, கௌதம புத்தர் ஆகியோர் அவதரித்த தினம். இந்நாளில்தான் கௌதம புத்தர் போதி மரத்து அடியில் ஞானம் பெற்றார். இந்நாளில்தான் கௌதம புத்தர் முக்தி அடைந்தார்.
♥ வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு கோவிலில் தனிபூஜை செய்பவர் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்.
நன்றி நன்றி நன்றி 🌞