வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் நட்சத்திரம் 2023ல் June 2ஆம் தேதி, (வைகாசி 19) வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு
தொடங்கி அன்று நாளை காலை 5.55 மணிக்கு முடிவடைகிறது.

♥ வைகாசி விசாக நட்சத்திர விரத விரதம் கடைபிடித்தால் :-

♥ உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்

♥ துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் .

♥ திருமண பேறு கிட்டும்.

♥ குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். குலம் தழைத்து ஓங்கும்.

♥ வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும்.

♥ ஆபத்துக்கள் அகலும்.

♥ கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் வேலவன்.

♥ வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.

♥ பக்தர்களில் பலர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக முருகன் கோவில்களுக்கு வந்து வணங்குகிறார்கள்.

♥ காஞ்சி மஹாபெரியவர், நம்மாழ்வார், திருவாய்மொழிபிள்ளை, கௌதம புத்தர் ஆகியோர் அவதரித்த தினம். இந்நாளில்தான் கௌதம புத்தர் போதி மரத்து அடியில் ஞானம் பெற்றார். இந்நாளில்தான் கௌதம புத்தர் முக்தி அடைந்தார்.

♥ வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு கோவிலில் தனிபூஜை செய்பவர் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்.

நன்றி நன்றி நன்றி 🌞

சிரித்தாடி மகிழ்வாக வா வா கண்ணா!

பெண்: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா

குழு: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா

பெண்: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா

குழு: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா

பெண்: பொன் வண்ண குழலூதி
வா வா கண்ணா
நீ வண்ண மயில் சேலை சூடி
வா வா கண்ணா

குழு: பொன் வண்ண குழலூதி
வா வா கண்ணா
நீ வண்ண மயில் சேலை சூடி
வா வா கண்ணா

பெண்: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா
கண்ணா… கண்ணா…
கண்ணா… கண்ணா…

குழு: சிரித்தாடி மகிழ்வாக
வா வா கண்ணா
என் குருவாயூர் பெருமானே
வா வா மன்னா

பெண்: கைநிறைய வெண்ணை தரோம்
வா வா கண்ணா
நறுநெய்யும் பாலும் தரோம்
வா வா கண்ணா

குழு: கைநிறைய வெண்ணை தரோம்
வா வா கண்ணா
நறுநெய்யும் பாலும் தரோம்
வா வா கண்ணா

பெண்: ஓடாதே ஒளியாதே
வா வா கண்ணா
ஊதுகுழல் ஊதி ஊதி
வா வா கண்ணா

குழு: ஓடாதே ஒளியாதே
வா வா கண்ணா
ஊதுகுழல் ஊதி ஊதி
வா வா கண்ணா

பெண்: அழகாக நடனமாடி
வா வா கண்ணா
அதிசயமாய் சிறுவனாக
வா வா கண்ணா

குழு: அழகாக நடனமாடி
வா வா கண்ணா
அதிசயமாய் சிறுவனாக
வா வா கண்ணா

பெண்: ஒரு வெள்ளை மதியாக
வா வா கண்ணா
மலைமீது குளிராக
வா வா கண்ணா

குழு: ஒரு வெள்ளை மதியாக
வா வா கண்ணா
மலைமீது குளிராக
வா வா கண்ணா

பெண்: கைகொட்டி கொஞ்சிப் பேசி
வா வா கண்ணா
கொண்டைமேல் மலர்சூடி
வா வா கண்ணா

குழு: கைகொட்டி கொஞ்சிப் பேசி
வா வா கண்ணா
கொண்டைமேல் மலர்சூடி
வா வா கண்ணா

பெண்: கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா

 ” வாழ்க்கை வாழ்வது எப்படி” -ஜென் கதை

இளைஞன் ஒருவன் ” வாழ்க்கை வாழ்வது எப்படி” என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.

ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.

ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார்.

அவரிடம் ” வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் ” என்றான்.

ஓ….. அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார் . முன் அறையில் அமருங்கள் வருவார். ” என்றவர் ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார் அந்த இளைஞனுக்கு.

இயற்கை எழில் கொஞ்சும் மலையையும் , குளிர்ந்த காற்றையும் ,சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும், ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான் . தேனீர் ஆறிபோய்விட்டது.

சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார்.அவன் எழுந்து வணங்கினான்.

குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.

வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்” என்றான்.

குரு லேசாக புன்னகை செய்தார் .பின்னர், ” உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் கொட்டிவிடு ” என்றார்.

அவன் அப்படியே செய்தான். பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.

அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் குரு விடை கூறாமல் மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார்.

அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?” என்று கேட்ட துறவியிடம் நடந்ததை கூறினான்.

அதற்கு அந்த துறவி குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டாரே”!! என்றார்.

ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள்.

மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல் , இந்த அப்பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை . இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்.

வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையை புரிந்து கொண்டான் . அந்த நொடியில் வாழத்தொடங்கினான் மகிழ்ச்சியுடன்.

நன்றி முக நூல் சகோதரர் !

🙏🙏🙏

இனி நான் அஞ்சத் தேவையில்லை!

Post

—————

————-

அன்புடன்

இனி நான் அஞ்சத் தேவையில்லை…

நன்றி-

அன்பே கடவுள்

அன்புடன்

ஒப்பிலியப்பன் கோவில்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திரு விண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலின் தல வரலாறு நம் வாசகர்கள் அனைவருமே அறிந்த ஒன்றுதான். துளசி வனம் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட அத்திருத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தவம் புரிந்து வந்தார். அவரது வளர்ப்பு மகளாக ஒரு துளசிச்செடியின் அடியில் பூமாதேவி தோன்றினாள்.

அவளை மணக்க விரும்பிய திருமால், பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று, வயோதிகராக வேடம் தரித்து மார்க்கண்டேயரிடம் வந்து அவரது மகளைத் தனக்கு மணம் முடித்துத் தருமாறு கோரி னார்.

“என் மகள் வயதில் மிகவும் சிறியவள். பழைய சாதத்துக்கு எவ்வளவு உப்பு போட வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரியாதே!” என்று மார்க்கண்டேயர் கூற,

“இனி நான் உப்பில்லாத பண்டங்களையே அமுது செய்வேன்!” என்று சபதம் செய்தார் முதியவர்.

வீடு தேடி வந்தவரின் கோரிக்கையை நிராகரிக்கலாகாது என்ற எண்ணத்தில் தனது மகளை அவருக்கு மணம் முடித்துத் தருவதற்கு மார்க்கண்டேயர் சம்மதிக்கவே அடுத்த நொடி முதியவர் வேடத்தை கலைத்துத் திருமால் தனது இயற்கையான வடிவத்துடன் காட்சி தந்தார்.

உப்பில்லாத பண்டங்களையே உண்பதாகச் சபதம் ஏற்றதால், உப்பிலியப்பன் என்று அப்பெருமாள் பெயர் பெற்றார். பின் மார்க்கண்டேயர் ஏற்பாடுகளைச் செய்ய, ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் உப்பிலியப்பனுக்கும் பூமாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின் மார்க்கண்டேயருடைய கோரிக்கைக்கு இணங்கி, ஒப்பிலியப்பன் கோவில் என்ற அத்திருத்தலத்தில் என்றென்றும் பூமாதேவியுடன் தான் குடியிருப்பதாகத் திருமால் உறுதி பூண்டார்.

திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்துக்கு என்னென்ன பெருமை உண்டோ, அத்தனை பெருமைகளும் ஒப்பிலியப்பன் கோவிலுக்கும் இருப்பதால், விண்ணகர் என்று அவ்வூர் பெயர்பெற்றது. விண்ணகர் என்றால் விண்ணில் உள்ள நகரமான வைகுண்டம் என்று பொருள்.

ஒப்பிலியப்பன் கோவிலில் குடிகொண்ட பெருமாளிடம் மார்க்கண்டேயர், “உப்பிலியப்பா! இந்தத் திருத்தலம் வைகுண்டத்துக்குச் சமமானது என்று நீயே கூறி, இதற்குத் திருவிண்ணகர் என்ற திருப்பெயர் ஏற்படும்படிச் செய்து விட்டாய். அத்துடன் இன்னொரு இன்னருளையும் நீ செய்தருள வேண்டும்! நீ இந்த ஊருக்கு முதன் முதலில் வந்து என்னிடம் பெண் கேட்ட நாள் பங்குனி மாதத் திருவோண நன்னாள்.

அதன்பின் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ வந்து பூமாதேவியை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாதத் திருவோண நன்னாள். எனவே வைகுண்டத்தில் எப்படி நீ ஒளிமிக்க சுடராக அடியார்களுக்குத் தரிசனம் தருகிறாயோ, அதுபோலவே வைகுண்டத்துக்கு நிகரான இவ்வூரிலும் திருவோண நட்சத்திரத்தன்று சோதி வடிவில் நீ காட்சி அளிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அதற்குப் பெருமாளும் இசையவே, அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று ஒப்பிலியப்பன் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்படும்.

பரம்பரையாகத் தீபம் பிடிக்கும் தொண்டைச் செய்து வரும் அடியார்கள், அகண்ட தீபத்தைக் கையில் ஏந்தியபடி கோவிலை வலம் வருவார்கள்.

சாட்சாத் உப்பிலியப்பனே அந்தத் தீப சோதியின் வடிவில்வந்து அடியார்களுக்கு அருள் புரிவதாக ஐதிஹ்யம்.

இதைக் கருத்தில் கொண்டுதான் ‘பரஞ்சுடர் உடம்பாய்’ என்று நம்மாழ்வாரும், ‘சுடர்போல் என் மனத்திருந்த தேவா’ என்று திருமங்கை ஆழ்வாரும் சோதி வடிவமாகவே ஒப்பிலியப்பனைப் பாடியுள்ளார்கள்.

-கே.எஸ்.ராமகிருஷ்ணன்

;

குறை ஒன்றும் இல்லை -பாடல் வரிகள்

இது ஒரு அழகிய மற்றும் மிக மிக அமைதியான ஒரு பாடல்…. இந்த பாடலை நாம் பாடும் போதும் கேட்கும் போதும் நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் மறையும்…..

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் 1

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

சரணம் 3

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4

கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் – 5

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்….

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் …

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…

பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

கண்ணன் கதைகள் – பாததூளி

ஒரு முறை துவாரகையில் கண்ணனுக்குத் தலைவலி என்று ருக்மிணியும், ஸத்யபாமாவும் செய்வதறியாது வருத்தமுற்றிருந்தனர். அப்போது நாரதர் அங்கே வந்தார்.

அனைவரும் வாட்டமடைந்து இருப்பதைக் கண்ட அவர், என்ன விஷயம் கண்ணா? என்று கேட்டார். கண்ணனும், ” எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது” என்று சொன்னான்.

நாரதர், “இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல் கண்ணா, எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்” என்று சொன்னார்.

கண்ணனும், “நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம், இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னான்.

ருக்மிணியும் ஸத்யபாமாவும்,”எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா? மகாபாவம் வந்து சேருமே” என்று பதறினார்கள். நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், “அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது” என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கண்ணனுக்குத் தலை வலி அதிகரித்தது.

கண்ணன், ” வலி பொறுக்க முடியவில்லை நாரதா!! நீ உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா, சீக்கிரம்” என்று சொன்னார்.

நாரதர், ருக்மிணி, ஸத்யபாமா ஆகியோர் மனதில் நம்மை விட பக்தர்கள் யார் இருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. இருப்பினும், நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார்.

அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர்.

இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , “நாரதரே! சீக்கிரம் சென்று கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்” என்று சொன்னார்கள்.

நாரதர் அவர்களிடம், இது பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க, கோபிகைகள், “கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள் எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை” என்று கூறினார்கள்.

நாரதரும் துவாரகை சென்று கண்ணனிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கண்ணன், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ , தலைவலியும் சரியாகிவிட்டது. நாரதர், ருக்மிணி, ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது.

கண்ணன் ஒரு விஷமச் சிரிப்புடன், “தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது” என்று சொன்னான். கண்ணனின் தலைச்சுமை மட்டுமா? மற்றவர்களின் தலைக்கனமும் அல்லவோ இறங்கியது?!!!

இவ்வாறு, உண்மையான, தன்னலமற்ற பக்தியின் பெருமையை மற்றவர்க்கு உணர்த்த விரும்பிய கண்ணனின் தலைவலி நாடகமும் இனிதே முடிந்தது.

ப.பி

« Older entries