– * வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். “எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்’ என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
* கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
* புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன. வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார்.
கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார். – —————————–
– * வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். “எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்’ என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
* கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
* புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன. வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார்.
கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார். – —————————–வேதாந்த பிரபுபாதா
பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுவது தைந்நீராடல் ஆகும். சங்க காலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும்.
சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றன.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும்,மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது).
பொங்கல் என்றால் என்ன?
தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும்.
புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.
பொங்கல் கொண்டாடும் விதம்:
இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1. போகி: பொங்கலுக்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும் விழா.
விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
2. சூரியப் பொங்கல்: சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு, படையல் செய்வது வழக்கம்.
3. மாட்டுப் பொங்கல்: விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.
4. காணும் பொங்கல்: காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
– a| நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும்.
இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.
மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
நமக்கு பல நண்பர்கள் இருந்தாலும், ஆத்மார்த்தமான நண்பர் என, ஒரே ஒருவர் தான் இருப்பார்.
அதுபோல, பொங்கல் நாயகனான சூரியனுக்கும், ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார்; அவர் தான் சந்திரன்.
எல்லா சிவாலயங்களிலும் கருவறைக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் நுழையும்போது, ஒருபுறம் சூரியனும், மறுபுறம் சந்திரனும் இருப்பர். ஆனால், இவர்கள் இருவரும் ஒரே சன்னிதியில் இணைந்து, காட்சி தருவதை தரிசிக்க வேண்டுமானால், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
மகாபாரதத்தில் ஒரு காட்சி: பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் உறுதியாகி விட்டது. அக்காலத்தில் போருக்கு முன், நல்ல நாளில், ஒரு வீரரை களப்பலி கொடுப்பது வழக்கம்.
அதாவது, போர்க்களத்தில் அவர் வெட்டப்படுவார். இதற்காக, தலைசிறந்த ஜோதிடரை வைத்து, நல்ல நாள் பார்ப்பர். நல்ல நேரத்தில் களப்பலி கொடுக்கும் அரசர் தான், வெற்றி பெறுவார் என்பது நம்பிக்கை.
தங்கள் கவுரவத்தைப் பார்க்காமல், தங்கள் எதிரியும், பாண்டவர்களில் ஒருவனும், தலை சிறந்த ஜோதிடனுமான சகாதேவனை அணுகி, நல்ல நாள் பார்த்து தர வேண்டினர், கவுரவர்கள்.
தொழில் தர்மப்படி, எதிரியாக இருந்தாலும், தன்னிடம் ஒன்றைக் கேட்டால், அதை செய்து கொடுக்கும் நிலைமையில் இருந்த சகாதேவன், ‘வருகிற அமாவாசையன்று களப்பலி கொடுங்கள். உங்களுக்கு வெற்றி உறுதி…’ என, நாள் குறித்து கொடுத்து விட்டான்.
இதையறிந்த பாண்டவர்களின் மைத்துனர் கிருஷ்ணர், ‘என்ன வேலை செய்தாய், சகாதேவா… எதிரிக்கு நாள் குறித்து கொடுக்கலாமா… நீ குறித்து கொடுத்த நாளில், அவர்கள் களப்பலி கொடுத்தால், வெற்றி அவர்களையல்லவா சேரும்…’ என, கடிந்து கொண்டார்.
‘கிருஷ்ணா… அவர்கள் ஜோதிடத்தை நம்புகின்றனர். நான் உன்னை நம்புகிறேன்…’ என்று பதிலளித்தார், சகாதேவன்; மகிழ்ந்தார், கிருஷ்ணர்.
மிக தந்திரமாக, அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசியன்றே, ஆற்றுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தார்.
இதைக் கண்டு குழம்பிய, சூரிய – சந்திரர் இணைந்து வந்து, ‘நாளை தானே அமாவாசை. இன்றே ஏன் தர்ப்பணம் கொடுக்கிறீர்கள்…’ என, கேட்டனர்.
‘சூரிய – சந்திரர் இணையும் நாள் தானே அமாவாசை. இப்போது இணைந்து தானே வந்திருக்கிறீர்கள். அதனால், இன்று தான் அமாவாசை என்பதை மறுக்க முடியுமா…’ என கேட்க, அவர்கள் வாயடைத்து போயினர்.
இவ்வாறு, இருவரும் இணைந்து வந்த கோலத்தை, சிற்பி ஒருவர், சிலையாக வடித்துள்ளார். அதை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில், நாம் தரிசிக்க முடியும். இந்த தரிசனத்தால், பிதுர் சாபம் நீங்கும் என்பர்.
பொங்கல் கொண்டாடும் தை மாதத்தில், கும்பகோணம் சென்று,
சபரிமலை: மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் அடங்கிய பவனி, பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மாலை, 6:30க்கு, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சி தருகிறது.
கேரள மாநிலம், சபரி மலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகளால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது.பந்தளம் அரண்மனையில் தான், அய்யப்பன் வளர்ந்தார். சபரிமலை சென்ற பின், அய்யப்பனைக் காண, பந்தளம் மன்னர் ஆபரணங்களுடன் சென்றார்.அதை நினைவு படுத்தும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாக வரலாறு கூறுகிறது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள், சாஸ்தா கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மதியம், 12:30க்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் துவங்கின. ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது.மதியம், 1:00 மணிக்கு சரண கோஷங்கள் முழங்க, திருவாபரண பவனி புறப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் போலீசார், தேவசம்போர்டு ஊழியர்கள் மட்டுமே பவனியில் வருகின்றனர்.
இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார். திருவாபரணம் நாளை மாலை, 6:25க்கு சன்னிதானம் வந்து சேரும்.தீபாராதனை முடிந்ததும், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும்.
ஸ்ரீ ராமனின் பெரிய பக்தனான அனுமனை ஏழரை சனி பிடித்த போது என்ன செய்தார்.
நாம் ஏன் ஏழரை சனி காலத்தில் அனுமனை வணங்க வேண்டும். சனி பகவானையே ஸ்ரீ ராமர் பணியை செய்ய வைத்த ஆஞ்சநேயரின் பெருமையை இங்கு விரிவாக பார்ப்போம்.
ராமனின் பணியில் அனுமன்
திரேதாயுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் தான் ஸ்ரீ ராமன். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு வாயு பகவானுக்கும், கந்தர்வ பெண்ணுக்கும் மகனாக சிவ பெருமான் அவதரித்த புதல்வன் தான் அனுமன் என பெயர் பெற்றார்.
ராவணனை அழித்து சீதா தேவியை மீட்க, இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த பணியை அனுமன், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட வானர படைகள் ஈடுபட்டிருந்தனர்.
வானர வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு முடிந்த அளவு மரக்கட்டைகளையும், பாறைகளையும் எடுத்து வந்து பாலம் அமைக்கும் இடத்தில் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ ராம, லட்சுமணரோ பாலம் அமைக்கும் நோக்கில் வருவோருக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். அனுமன் எல்லா பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் மீது ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என எழுதி பாலம் அமைக்க கடலில் எறிந்து கொண்டிருந்தார். –
சனியின் விண்ணப்பம் :
அப்போது அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம். அதனால் ஸ்ரீ ராம, லட்சுமணன் முன் தோன்றிய சனீஸ்வரன், ‘பிரபு, உங்கள் அடியேன் ஆஞ்சநேயருக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரைப் பிடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வேண்டினார்.
அதற்கு ஸ்ரீ ராமன்,“எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதே போல உன் கடமையை நீ செய்யலாம். முடிந்தால் அனுமனைப் பிடித்துக் கொள்” என்றார்.
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி
அனுமன் முன் தோன்றிய சனி, “அனுமனே, நான் சனீஸ்வரன் வந்திருக்கிறேன். உனக்கு ஏழரை சனி காலம் வந்து விட்டதால் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறேன். உன்னைப் பிடிக்க உன் உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு” என்றார்.
அதற்கு அனுமனோ, “இராவணனின் சிறையில் இருக்கும் சீதா தேவியை மீட்டு ஸ்ரீ ராமனிடம் சேர்க்க சேது பந்தனப் பணியை மேற்கொண்டு வருகிறேன். சீதா தேவியை ராமனிடம் சேர்த்ததும் நானே உன்னைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதும் நீங்கள் வியாபித்துக் கொண்டு என்னை ஆட்டிப் படைக்கலாம்” என்றார்.
தலையில் உட்கார்ந்த சனி
சனி பகவானோ, “நான் சரியான காலத்தில் ஒருவரைப் பிடித்து, சரியான காலத்தில் விலகுபவன். காலதேவன் நிர்ணயித்த விதியை நானும் மீற முடியாது. நீயும் மீற முடியாது. அதனால் உன் உடலில் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம் என்பதை கூறு” என்றார்.
தனது கையால் ஸ்ரீ ராம ஜெயம் என பாறைகளுக்கு எழுதிக் கொண்டிருக்க, தோளில் சுமந்து காலால் நடந்து கடலில் போடுவதால் இங்கெல்லாம் பிடிக்க வேண்டாம், வேண்டுமென்றால், உடலுக்கு தலையே பிரதானம் என்பதால் என் தலை மீது அமர்ந்து கொண்டு உங்கள் கடமையை செய்யுங்கள் என்றார் அனுமன்.
அதுவரை சாதாரண பாறையை சுமந்து வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின், முன்பை விட மிகப்பெரிய பாறைகள் மீது ஜெய் ஸ்ரீ ராமன் என எழுதி தன் தலை மீது சுமந்து கடலில் வீசினார்.
இதுவரை அனுமன் சுமக்கும் பெரிய பாறைகளின் பாரம் அனுமன் சுமந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அனுமனின் தலையில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாக இருந்தது.
இதனால் பாரத்தை தாங்க முடியாத சனீஸ்வரன் சிறிது நேரத்தில் அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார்.
வரம் தந்த சனி பகவான்
ஏழரை ஆண்டுகள் பிடிப்பதாக கூறி அதற்குள் என்னை விட்டு விட்டீர்களே என அனுமன் கேட்க, பரமேஸ்வரனின் அம்சமான உங்களை கடந்த யுகத்தில் பிடித்து வெற்றி பெற்றேன். இந்த முறை தோல்வி அடைந்து விட்டேன் என்றார்.
இல்லை இந்த முறையும் வென்றுள்ளீர்கள். அதாவது ஏழரை ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை விநாடி என்னைப் பிடித்துக் கொண்டீர்கள் என அனுமன் கூறினார்.
ஸ்ரீ ராம ஜெயம் என எழுதிய பாறையை என் மீது வைத்து சுமந்ததால் நானும் ராம சேவையில் ஈடுபட பாக்கியம் கிடைத்தது. அதனால் உனக்கு ஏதேனும் ஒரு வரம் தர விரும்புகிறேன் என்றார் சனி.
அனுமனோ, “ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி காலமாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து நீங்கள் தான் காத்து அருள வேண்டும்” என்ற வரத்தை கேட்டார்.
அன்று முதல் ஏழரை சனி பிடித்தவர்கள் மிக சிறந்த பரிகாரமாக ஸ்ரீ ராமனையும், அனுமனையும் வழிபாடு செய்வது நன்மையை
குரு அவனிடம் ஒரு கண்ணாடியைக் கொடுத்து ‘இதை பிடித்தபடி நின்று கொண்டு இரு, கண்ணாடிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
சீடன் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் அவனுக்கு தூக்கம் வந்தது. தூக்கத்தை விரட்ட விறைப்பாக நின்று தலையை சிலுப்பி தூக்கத்தை தவிர்த்தான்.
சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கம் வந்தது. தன்னை மறந்து ஒரு விநாடி கண்ணயர்ந்தான். கண்ணாடி கீழே விழுந்து துண்டுகளாக சிதறியது.
பதறிப்போய் சீடம் விக்கித்து நின்றான். குரு சொன்னார்: ‘பயப்படாதே, சீடா, ஒரு விநாடி தான் கண் அயர்ந்தாய். உன் பொறுப்பில் விட்ட கண்ணாடி துண்டுகளாகி விட்டது!
ஆனால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் என்னவாகும்? இறைவன் தூங்குவானா என்ற சந்தேகம் தீர்ந்ததா?! சீடனுக்கு சந்தேக் தீர்ந்தது! என்று அன்புடன் விளக்கினார் குரு – —————————- லட்சுமி ஸ்ரீனிவாசன் லேடீஸ்பெஷல்-மாத இதழ்
புத்தரும் அவர் சீரடர்களும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த சமயத்தில் திடீரென ஓர் ஆசாமி புத்தர் முன் வந்து அவர் முகத்தில் எச்சில் துப்பினான்.
புத்தர் தன் முகத்தை துடைத்துவிட்டு அவனை பார்த்து, “அடுத்து என்ன?” என்று சாந்தமாக கேட்டார்.
அந்த ஆசாமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை . “இதற்குமுன் நாம் பிறரை அவமானப்படுத்திய போது கோபம் கொண்டனர், அல்லது சிரித்து சமாளித்தனர். ஆனால் இந்த புத்தரோ அடுத்தது என்ன என்று கேட்கிறாரே” என்று மனதில் நினைத்து கொண்டு அவரையே பார்த்தான்.
புத்தரை அவமானப்படுத்தியதை தாங்காமல் அவரின் சீடர்கள், “குருவே! இவன் தண்டிக்கப்பட வேண்டியவன், எப்படி சாந்தமாக ஒன்றுமில்லாதது போல் பதிலளிக்கிறீர்?” என்று பொங்கினர்.
அதற்கு புத்தர், “சீடர்களே…இவர் யாரென்று எனக்கு தெரியாது. இவர் ஒருவேளை ‘நான் மதமற்ற பகுத்தறிவாளன், மோசக்காரன், மக்கள் மனதை மாற்றும் ஏமாற்றுக்காரன்,’ என்று என்னை பற்றி கருத்து வைத்திருக்கலாம். அவர் அந்த கருத்தை வார்த்தையால் வெளிப்படுத்த தெரியாமல் தான் முகத்தில் எச்சில் துப்பி தன் உணர்வை உடல்மொழியாக வெளிப்படுத்தினார்.
அவ்வாறு செய்து அவர் கருத்தை சொன்னதால், மேலும் என்ன என்று நானும் கேட்டேன்” என்று கூலாக பதில் சொன்னார்.
இதைக் கேட்டு திகைத்து போன அந்த ஆசாமி பதில் ஏதும் கூறாமல் தன் வீட்டிற்கு திரும்பி போனான். இரவெல்லாம் அவனுக்கு தூக்கமே வரவில்லை. இந்த நாள் வரையில் தான் அவமானப்படுத்திய மனிதர்கள் காட்டிய உணர்வுகளை வைத்து, அவன் செய்த காரியங்களுக்கு இந்தந்த உணர்வு வெளிப்பாடுகள் என்று வரைமுறை வைத்திருந்தான்.
அனைத்தையும் ஒரே விநாடியில் அந்த புத்தர் உடைத்து விட்டாரே என்று கலங்கிப் போனான். அவனால் அதை மறக்க முடியவில்லை. நிம்மதி குன்றிப் போய் மறுநாள் மீண்டும் அந்த மரத்தடிக்கு போனான்.
அங்கிருந்த புத்தரை பார்த்து தடால் என அவர் காலில் விழுந்தான். அப்போதும் அவனை நிறுத்தி அந்த புத்தர், “அடுத்து என்ன?” என்று கேட்டார். புரியாமல் அவன் விழித்து, “ஐயா! என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டான்.
புத்தரும், “அதுதான் முதலிலேயே கேட்டு விட்டீரே?” என்றார். சீடர்களுக்கும் புரியவில்லை.
புத்தர் சொன்னார், “அன்றைக்கு நீங்கள் முகத்தில் துப்பியதற்கு மன்னிப்பு வேண்டி இன்று அந்த உணர்ச்சியை வார்த்தையில் இல்லாமல் உடல் மொழியாக என் காலில் விழுந்து வெளிப்படுத்தினீர்கள். அடுத்து என்ன என்று கேட்டபோது, வாய் விட்டு மன்னிப்பு கேட்டீர்கள். ஆனால் மன்னிப்பு தருவது நானில்லை.
மனிதன் ஒரு நதி போல, என்றும் நகர்ந்துக் கொண்டே இருக்கிறான். ஒரே நிலையில் இருப்பதில்லை. நேற்று நான் இருந்த நிலையும் இப்போது நான் இருக்கும் நிலையும் ஒன்றில்லை.
நீங்களும் நேற்று ஓர் ஆளாகவும் இன்று ஓர் ஆளாகவும் இருக்கிறீர்கள். அதனால் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.”
ஒருவர் உங்களை அவமதித்தார். அப்போது நீங்கள் பதிலடி கொடுக்க முடியவில்லை. உங்களிடம் இப்போது ஒரு அற்புதமான பதிலடி உள்ளது. அது என்ன?
அப்போது மட்டுமில்லை எப்போதுமே யார் அவமதித்தாலும் பொறுமையும் சாந்தமுமே சிறந்த பதிலடியாக நாம் கொடுக்க வேண்டும். மற்றவை காலம் தன் வேலையை செய்யும். – ——————————– படித்ததில் பிடித்தது
பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச் செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன் படுத்துகிறார்.
“கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே”. — பட்டினத்தார் பாடல்
அது என்ன குரங்கு கதை?
ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும் சுருக்கமாகத் தருகிறேன்:-
ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில் கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக் கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர்.
சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள். மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள் போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர்.
ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச் சென்றான்.
அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன. ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது. மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது.
ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப் பிடித்தது. குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது. இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய”தற்குச் சமம்.
இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம்.
குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-
“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. —- — பட்டினத்தார் பாடல்
(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய) ————————————-