தும்மலைத் தடுக்காதீர்கள்

ஜலதோஷ நேரம் தவிர, தும்மல் என்பது எதிர்பாராமல்
வரக்கூடியதுதான். அவ்வாறு பொது இடத்தில் தும்மல்
வருமானால், நாகரிகம் கருதி சிலர் அதனை அடக்க
முயற்சிப்பார்கள்; அல்லது வாயை மூடிக் கொள்வார்கள்.

ஆனால் அப்படி வாயையும், மூக்கையும் பொத்திக்
கொள்வதால், அதையும் மீறி வெளியேறும் தும்மல்,
விழிகளைப் பாதிக்கும் என்கிறார்கள்.

எப்போதுமே கண்களைத் திறந்து கொண்டு தும்ம
முடியாது என்ற உண்மையை உணர்ந்தால் இந்தத்
தகவலின் முக்கியத்துவம் புரியும்.

ஆகவே தும்மும்போது முழுவதுமாக வாயையும்,
மூக்கையும் அடைத்துக் கொள்ளாதீர்கள்.

———————————

வித்யுத்
முத்தாரம்

வாத மடக்கி இலை

IMG_1779.jpg

அன்னாசி மருத்துவம்

IMG_1939.jpg1.jpgIMG_1939.jpg

டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் விடுபட…

IMG_20181026_224107485_2.jpg

IMG_20181026_224228586_2.jpg

IMG_20181026_224340641_2.jpg

டெங்குவில் இருந்து விடுபட

ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால்
டெங்குவில் இருந்து விடுபடலாம் !

1. வெற்றிலை 10 இலைகள்.

2. புதினா கீரை கைப்பிடி அளவு.

3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.

5. வாழைத்தண்டு 100 கிராம்.

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய
நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி,
பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில்
விரட்டி விடலாம் !

.—————————————
சேலம் டாக்டர். அழகு
வாட்ஸ் அப் பகிர்வு

பீட்சா வேண்டாமே…!!

peetsa.JPG

பிரபலமாகிறது கோதுமைப்புல்!

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘கோதுமை சார்ந்த உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். அதேபோல கோதுமையை விளைவிக்கக்கூடிய வித்தாக இருக்கிற கோதுமைப்புல்லும் சமீபத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. அது பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.

கோதுமைப் புல்லினை ஜூஸாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ பலன்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவில் இருக்கிறது’’ என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன். கோதுமைப்புல் பற்றி தொடர்ந்து விளக்குகிறார்…

இயற்கையாக விளையும் செடி, கொடி மற்றும் தாவரங்களில் உடல் நலத்தைப் பேணுவதற்கேற்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வரிசையில், கோதுமைப் புல்லும் தன்னிடம் இயற்கை குணம் உடைய எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளது.

இதனால்தான் உலக நாடுகள் முழுவதிலும் தற்போது கோதுமைப்புல் உடல்நலத்துக்கு ஏற்றது என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

கோதுமைப் புல்லில் உள்ள சத்துக்கள்…

ஒரு டம்ளர் கோதுமைப்புல் சாற்றில் நீர்ச்சத்து – 65%, புரதம் – 20%, கொழுப்பு – 3%, மாவுச்சத்து – 12%, நார்ச்சத்து – 1%, கால்சியம் – 40 மி.கி, இரும்பு – 6 மி.கி., வைட்டமின் B1 – 1.4 யூனிட், B2 – 0.54 யூனிட், நியாசின் – 2.90 யூனிட் மற்றும் வைட்டமின் A, B, C, E & K ஆகியவை உள்ளன.

அறுகம்புல் ஜூஸ் போல…

பொதுவாக நாம் அறுகம்புல் ஜூஸ் பயன்படுத்தி வருகிறோம். அது நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்றவற்றுக்கு மருந்தாக இருக்கிறது. அதேபோல கோதுமைப்புல்லும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

அதற்கும் காரணம் இருக்கிறது. உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய திறன் கோதுமைப்புல்லுக்கு உண்டு, கோதுமைப் புல் சாறில் 70% பச்சையம் உள்ளது. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

ரத்தத்தில் வெள்ளை, சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்ரீதியிலான தொந்தரவுகளையும் குறைப்பது மட்டுமல்லாமல் குணமடையவும் உதவுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. சிறுகுடல், பெருங்குடலை சுத்தம் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. தோல் சம்பந்தபட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

தினமும் 30 மில்லி… 

தினமும் 30 மிலி கோதுமைப்புல் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை மற்றும் நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவரும் அருந்தலாம்.

ரத்தசோகை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள் இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் குணமடையும் வரை அருந்தலாம்.

சாதாரணமாக வாரத்திற்கு ஒரு நாள் கோதுமைப்புல் ஜூஸ் அருந்துவது உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. கோதுமைப்புல் தொடர்ந்து குடித்து வந்தால் நாள்பட்ட நோய்கள் குணமடையும். முக்கியமாக, உடல் பருமன் குறையும். நீரிழிவு நோயின் பாதிப்பு கட்டுக்குள் வரும்.
அறுகம்புல்லைச் சாறாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதைப்போல இச்சாறையும் பெரியவர்கள் காலை உணவுக்கு முன்னர் பருகலாம்.

கோதுமைப் புல் சாறு செரிப்பதற்கு அதிகபட்சம் 1 மணிநேரம் ஆகும், அதனால் கோதுமைப் புல் சாறு அருந்தியவுடன் ஒரு மணி நேரம் கழி்த்துதான் வேறு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் குறைந்த அளவு கோதுமைப்புல் எடுத்துக் கொள்ளலாம்.

அதிக பச்சையம்…

இளகிய தன்மை கொண்ட கோதுமைப்புல்லில் குளோரோபிஃல்(Chlorophyll) என்ற பச்சையம் அதிகளவில் இருக்கும். இந்தப் பச்சையம் நாம் சாப்பிடுகிற உணவுவகைகள் எளிதாக செரிமானம் நடைபெற உதவிசெய்கிறது.

மேலும், இந்த பச்சை நிறமி, நாம் சாப்பிடுகிற உணவுப்பொருட்களில் காணப்படுகிற நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவும் ஆன்டி-ஆக்சிடென்ட்டாகவும் செயல்படுகிறது.

இந்த நிறமி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம் ரத்தத்துக்கு அதிகளவில் ஆக்சிஜன் செல்ல வழி ஏற்படுத்துகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யவும் இப்பச்சையம் துணைசெய்கிறது.

வைட்டமின் பி

முளைகட்டி வளர்க்கப்படும் தாவரம் எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக பலவிதமான வைட்டமின்கள் காணப்படும். குறிப்பாக, வைட்டமின் பி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, கால்சியம், சிறிதளவு புரதம் ஆகியவையும் சேர்ந்து இருக்கும்.

அதன் அடிப்படையில், முளைகட்டி வளர்க்கப்படும் கோதுமைப் புல்லிலும் மேலே சொல்லப்பட்ட சத்துக்கள் போதுமான அளவு இருக்கிறது.

19 வகை அமினோ அமிலங்கள்

ரொட்டி கோதுமை என்ற வேறு பெயராலும் குறிப்பிடப்படுகிற இந்தப் புல்லில் 19 வகையான அமினோ அமிலங்களும், 92 வகையான தாதுக்களும் உள்ளன. இப்புல்லில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது.

இது அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கோதுமைப் புல் விளைவிப்பது எப்படி?

கோதுமையை நிலத்தில் தூவி வளர்த்தால் 7 முதல் 14 நாட்களில் நாற்று மாதிரி வளரும். முக்கால் அடியில் இருந்து ஒரு அடி வரை உள்ள கோதுமைப்புல் மிகவும் இளகியதாகக் காணப்படும்.

முதலில் 6 சதுர அடி நிலம் அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் மணலை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தி அதை ஏழு கட்டங்களாக பிரிக்க வேண்டும்.

பின்பு கோதுமையை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தொட்டியில் முதல் கட்டத்தில் போட வேண்டும். அதுபோல் 7 கட்டத்திலும் 7 நாட்களுக்கு போட வேண்டும்.

ஏழாவது நாள் முதல் கட்டத்தில் விதைத்த கோதுமை முளைத்துவிடும். இதுபோல் வளர்ச்சி அடைந்த புல்லை எடுத்து, நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஒரு நபருக்கு 30 மிலி வீதம் அருந்தலாம்.

இவற்றை நினைவில் கொள்ளுங்கள்

முற்றிய கோதுமைப் புல்லை உபயோகிப்பதால் பயன்கள் எதுவும் கிட்டாது. செரிமானம் நடைபெறுவதும் தடைபடும். செரிமானமும் ஆகாது. உடல் நலத்துக்கு ஏற்ற சத்துக்களைக் கொண்டு உள்ளது என்பதற்காக, இதை வரைமுறையின்றி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

கோதுமைப்புல்லில் உள்ள பூஞ்சைகள் மற்றும் கிருமிகள் நம்மை பாதிக்கக்கூடியன. எனவே, மாடித்தோட்டம் போன்ற சுகாதாரமான இடங்களிலேயே வளர்க்க  வேண்டும்.

– விஜயகுமார்

உடலின் கழிவுகளை அகற்ற :

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. உப்பு
2. புளி
3. வெள்ளை சர்க்கரை
4. வெங்காயம்
5. ஆங்கில மருந்து
6. கெமிக்கல் உணவு
7. உருளைக்கிழங்கு
8. அசைவ கொழுப்பு
9. பால் பதார்த்தங்கள்
10. பச்சை, வர மிளகாய்
11. ரீபைண்டு ஆயில்
12. மைதா, முட்டை

மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு.

எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்

உப்பை வெளியேற்றும் விதி

தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.

புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி

தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி

தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.

வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி

தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி

காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.

கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல் கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி

தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.

உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி

தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.

நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.

அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும்.

பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி

தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.

உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும்.

மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி

தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொருமையாக சப்பி குடிக்கவும்

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்…
https://www.facebook.com/SHFARC/

வாட்ஸ் அப் பகிர்வு

 

வாயு தொல்லையை நீக்கும் அபான வாயு முத்திரை

வாயு தொல்லையை நீக்கும் அபான வாயு முத்திரை
இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல்,
பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை,
இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

வாயு தொல்லையை நீக்கும் அபான வாயு முத்திரை

மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே,
முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும்.
உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில்
தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக்
காரணம்.

சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள்
உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின்
பெயர் அபான வாயு.

இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான்
அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால்,
வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.

செய்முறை :

கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின்
நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில்
நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும்
ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பலன்கள்

வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித்
தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.

பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர,
காலையில் மலம் கழிக்கும் பிரச்சனை இருக்காது.
மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு
பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம்.
மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள்,
ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர,
மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.

முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல்,
பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை,
இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க,
5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர்
வெளியேறுதல் போன்ற பிரச்சனையிருப்பவர்கள்,
தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய
அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற
கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.

மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல்,
மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற
பிரச்சனைகள் சரியாகும்.

———————————–
நன்றி- மாலைமலர்

சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை

சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை

உதான் முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச
மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள்
நீங்குகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை

இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது.
அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது.
அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி,
சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன.

இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே
உள்ள நடுப்பகுதியில் உள்ளது.
இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

செய்முறை:

நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல்,
ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும்
ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக
நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

பயன்கள்

* இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான
சக்தி கிடைக்கிறது.

* உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக
இருக்கும்.

* தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம்
கிடைக்கும்.

* உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும்.

* இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து
வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது.

* இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

* தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம்
கிடைக்கிறது.

* தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு
குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும்
நிவாரணம் கிடைக்கிறது.

* இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும்,
பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து
நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்
படுகிறது.

* சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது.

* சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள்
நீங்குகிறது.

* கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.
எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம்.
எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு
அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.

———————————-
நன்றி- மாலைமலர்

« Older entries