–
வெறும் 27 தீவுகளே உள்ள லட்சத்தீவுக்கு.
‘லட்சத்தீவு’ எனப்பெயர் வரக்காரணம்:
–
18ம் நூற்றாண்டிரல் கிழக்கிந்திய கம்பெனியார்,
கோணாரிலுள்ள சர்தார் அலிராஜா என்பவருக்கு
இத்தீவை , லட்ச ரூபாய்க்கு விற்றதால், இதற்கு
லட்சத்தீவு எனப்பெயர் வந்தது
–
————————–
கஸ்தூரி கதிர்வேல்
மங்கையர் மலர்
லட்சத்தீவு – பெயர்க்காரணம்
நவம்பர் 13, 2018 இல் 8:33 பிப (பொது அறிவு தகவல், Uncategorized)
மிகப்பெரிய கோபுரம்- பொ.அ.தகவல்
நவம்பர் 13, 2018 இல் 2:16 பிப (பொது அறிவு தகவல்)
ஸ்ரீரங்கநாதர் கோயில் கோபுரம் (ஸ்ரீரங்கம்)
15. மிகப்பெரிய தொலைநோக்கி
காவலூர் வைணுபாப்பு (700மீ)
16. மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா ( 2,636மீ) (8,648 அடி)
17. மிக நீளமான கடற்கரை
மெரினா கடற்கரை (14 கிமீ )
18. மிக நீளமான ஆறு காவிரி (760 கிமீ)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்
சென்னை (25937/கிமீ2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்
சிவகங்கை (286/கிமீ2)
21. மலைகளின் ராணி உதகமண்டலம்
22. கோயில் நகரம் மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்
(மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
–
–
25. மிகப்பெரிய சிலை
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை (133 அடி).
———————————-
தமிழக அரசு முத்திரை கோபுரம்- பொது அறிவு தகவல்கள்
நவம்பர் 13, 2018 இல் 2:12 பிப (பொது அறிவு தகவல்)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.2. தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி.
3. தமிழகத்தின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் கோயம்புத்தூர்.
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் பெரம்பலூர்.
6. மிக உயரமான தேசியக்கொடி மரம்
புனித ஜார்ஜ் கோட்டையில் (150 அடி).
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம்
பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)
8. மிகப் பெரிய தேர் திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணை மேட்டூர் அணை
10. மிகப் பழமையான அணை கல்லணை
–
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்)
தங்கம் (மதுரை2563 இருக்கைகள்)
–
12. மிகப்பெரிய கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
—
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம்
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
நவம்பர் 13, 2018 இல் 9:32 முப (பொது அறிவு தகவல்)
‘
கிழக்கிந்திய கம்பெனியை இங்கே நடத்தி வந்த ஆங்கிலேயர்,
சென்னையில் கோட்டை அமைத்து, அதைச் சுற்றி வாழ
ஆரம்பித்தனர்.
குளுமையான பிரதேசத்தில் இருந்து, இங்கு வந்து
குடியேறியவர்களை, சென்னை வெப்பம் வாட்டி வதக்கியது.
‘குளிர்ந்த நீர் குடிக்கவும், மாலை நேர விருந்துகளில் மது
கிண்ணங்களில் மிதக்க விடவும், அவர்களுக்கு ஐஸ் கட்டிகள்
தேவைப்பட்டன!
‘லண்டனுக்கு துாது விட்டனர்; கப்பல்களில் பெரிய பெரிய
ஐஸ் பார்களை அனுப்பி வைக்க, லண்டன் நிர்வாகம் ஒப்புக்
கொண்டது!
கப்பலில் வரும் ஐஸ் பார்களை எங்கே சேமித்து வைப்பது?
‘மெரினா கடற்கரையில், கடலைப் பார்த்து, 1840ல் கட்டடம்
கட்டினர். ஜன்னல்களோ, வேறு கதவுகளோ இல்லாமல்,
ஒரே மெயின் கேட்டுடன், வட்ட வடிவமாக, உயரமாக கட்டடம்
கட்டினர்.
ஐஸ் சேமித்து வைக்க இந்த இடம் பயன்படுத்தப்பட்டதால்
இதன் பெயர், ‘ஐஸ் ஹவுஸ்’ ஆனது.
‘கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகளை உரிய முறையில்,
மரத்துாள் பயன்படுத்தி, ஐஸ் உருகாமல் பாதுகாத்தனர்.
‘தினமும் காலை, 8:00 மணிக்கு இல்லக் காவலாளி,
துப்பாக்கி மூலம் குண்டு வெடிப்பார். அதன்பின்,
கிழக்கிந்தியக் கம்பெனியிடம் அனுமதி பெற்றவர்கள்,
ஐஸ் கட்டிகளை வாங்கிச் செல்லலாம்!
காலை, 8:00 மணி முதல், இரவு, 7:00 வரை விற்பனை
நடக்கும்!
‘நாளா வட்டத்தில், ஐஸ் கட்டிகள் கப்பல் மூலம்
தொடர்ச்சியாகக் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனால், சென்னையிலேயே ஐஸ் தயாரிக்க முடிவு
செய்தனர்.
லண்டன் நிர்வாக அனுமதி கிடைத்ததும், வேறோர்
இடத்தில், ‘மெட்ராஸ் ஐஸ் கம்பெனி’ உருவானது!
‘காலியாகிப் போன, ‘ஐஸ் ஹவுசை’ அப்போது, சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயர்,
காஸில் கர்னான் என்பவர், கிழக்கிந்திய
கம்பெனியிடமிருந்து விலைக்கு வாங்கி, அங்கேயே
குடியேறினார்.
‘சில காலம் சென்ற பின், ஐஸ் ஹவுசை, உயர்நீதிமன்ற
நீதிபதியாக இருந்த, பிலிகிரி ஐயங்காருக்கு விற்று
விட்டார்.
பின்னர், சுவாமி விவேகானந்தர், பிலிகிரியின்
விருந்தினராக ஒன்பது நாட்கள், ஐஸ் ஹவுசில் தங்கினார்.
‘சிறிது காலம், இது, லேடி வெலிங்டன் கல்லுாரி மாணவியர்
விடுதியாக இருந்தது. தற்போது, விவேகானந்தர் நினைவுப்
பொருட்கள், புகைப்படங்களை வைத்து, அவரது நினைவு
இல்லமாக திகழ்கிறது!
‘கடந்த, 1964ல், ‘ஐஸ் ஹவுஸ்’ என்ற பெயரை,
‘விவேகானந்தர் இல்லம்’ என, மாற்றிய பின்னரும்,
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை இன்றும்,
‘ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம்’ என்றும், இந்தக் கட்டடத்தை,
‘ஐஸ் ஹவுஸ்’ என்றுமே அழைத்து வருகின்றனர்…’
–
———————————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
தமிழகம் 25
நவம்பர் 12, 2018 இல் 6:54 முப (பொது அறிவு தகவல்)
1. தமிழக அரசு முத்திரை கோபுரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி.
3. தமிழகத்தின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் கோயம்புத்தூர்.
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் பெரம்பலூர்.
6. மிக உயரமான தேசியக்கொடி மரம்
புனித ஜார்ஜ் கோட்டையில் (150 அடி).
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம்
பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)
8. மிகப் பெரிய தேர் திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணை மேட்டூர் அணை
10. மிகப் பழமையான அணை கல்லணை
–
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்)
தங்கம் (மதுரை2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம்
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம்
ஸ்ரீரங்கநாதர் கோயில் கோபுரம் (ஸ்ரீரங்கம்)
15. மிகப்பெரிய தொலைநோக்கி
காவலூர் வைணுபாப்பு (700மீ)
16. மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா ( 2,636மீ) (8,648 அடி)
17. மிக நீளமான கடற்கரை
மெரினா கடற்கரை (14 கிமீ )
18. மிக நீளமான ஆறு காவிரி (760 கிமீ)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்
சென்னை (25937/கிமீ2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்
சிவகங்கை (286/கிமீ2)
21. மலைகளின் ராணி உதகமண்டலம்
22. கோயில் நகரம் மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்
(மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை (133 அடி).
———————————-
பா.ராஜேஷ், முத்தாரம்
உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம் எது?
நவம்பர் 12, 2018 இல் 6:24 முப (பொது அறிவு தகவல்)
நீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக
இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே,
இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள
செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும்
‘கலிபோர்னியா பிக்’ (பெரிய) மரங்களே அவை.
இவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை.
சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா
பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட
பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம்
கொண்டிருக்கிறது.
அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக
உள்ளன. எடை 2,145 டன்! இதுபோன்ற ஒரு மரத்திலிருந்து
500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க முடியும்!
பல கோடி ஆண்டுகளுக்கு முன், பிரமாண்ட செக்கோயா
மரங்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்பட்டன.
இப்போது கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே
காணப்படுகிறது.
இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிரமாவது ஆண்டுக்கும்
முன்பு தோன்றியவை!
–
————————————
க.விண்மணி, 9ம் வகுப்பு,
முத்தாரம் 04 Aug 2014
படம்- இணையம்
உலகின் பெரிய பூ
நவம்பர் 12, 2018 இல் 6:17 முப (பொது அறிவு தகவல்)
-உலகிலேயே மிகப் பெரிய மலர் எங்குள்ளது?
ஆர்.ராணிஸ்ரீ, 8ம் வகுப்பு, உக்கடையம்மாள் பள்ளி,
தஞ்சாவூர்.
இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில்
Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது.
இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால்,
ஒரே ஒரு பூ மட்டும் உண்டு.
அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்!
இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும்.
முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை
இருக்கும்.
5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியும்.
இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு.
இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன.
மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ
இதன் வேர்கள் நிலை கொள்கின்றன. மற்ற தாவரங்களின்
ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன. இத்தாவரம் இறந்த
பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும்.
யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும்போது,
காலில் ஒட்டிக்கொள்ளும் விதைகள் இடம்பெயர்கின்றன.
ஒட்டியுள்ள வேண்டாபொருளை நீக்குவதற்காக, யானைகள்
அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள்
வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத்
தொடங்குகின்றன.
அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!
–
———————————————–முத்தாரம்
நவம்பர் 10 – உலக அறிவியல் தினம்
நவம்பர் 11, 2018 இல் 7:06 முப (பொது அறிவு தகவல்)
-ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அறிவியல்
தினமாக கொண்டாடப்படுகிறது.
இது அறிவியல் தினம் என்றும் சுருக்கமாக
அழைக்கப்படுகிறது.
இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் நமது
சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தலாம்.
மேலும் அறிவியல் தொடர்பான பல்வேறு
விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழவில்
அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும்
ஒரு பரவலான விவாதத்தை உருவாக்கலாம்.
இந்த ஆண்டில் அறிவியல் தினம் கொண்டாடுவதன்
முக்கிய நோக்கமாக அறிவியல் சமூகத்திற்கு
ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை நினைவு கூறும்
விதமாக அறிவியல் மையங்கள் மற்றும் அறிவியல்
அருங்காட்சியகங்களை நாடு முழுவதும்
உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளது.
–
————————–
தினமணி
பறவைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளுமா? அப்படியானால் எப்படி?
நவம்பர் 10, 2018 இல் 6:46 பிப (பொது அறிவு தகவல்)
நம்மைப் போல சிந்தனாசக்தி, கற்பனை ஆகியவை கொண்ட
புத்திசாலி மூளை பறவைகளுக்கு இல்லை. இதனால் அவற்றின்
பாஷையில் வார்த்தை ஜாலங்கள், சொற் பிரயோகங்கள் எதுவும்
கிடையாது. ஏதோ கத்தும், கூவும்… அவ்வளவுதான்.
சந்தோஷம், சோகம், ஆபத்து, பசி ஆகிய உணர்வுகளை
வெளிப்படுத்த சில சங்கேத சைகைகளை வைத்திருக்கின்றன.
இவற்றை வைத்துக்கொண்டுதான் தங்களது வாழ்க்கைப்பாட்டைப்
பார்த்துக் கொள்கின்றன.
இந்த சங்கேத சைகை சப்தங்களை மற்ற உயிரினங்கள் எதுவும்
எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
ஆனால், பயத்தினால் அவை எழுப்பும் குரலை மட்டும் மற்ற
பறவையினங்கள் எளிதில் புரிந்து கொள்கின்றன என்கிறார்கள்,
ஆராய்ச்சியாளர்கள்.
–
———————————-By -ரொசிட்டா
சிறுவர் மணி
மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?
நவம்பர் 10, 2018 இல் 1:17 பிப (பொது அறிவு தகவல்)
1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?
2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?
3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?
4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?
5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?
6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?
7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?
ஏன்? ஏன்? ஏன்?
காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.
நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.
எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.
ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.
எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.
உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.
என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.
நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்
காற்றை கண்டு பயப்படாதீர்கள்
குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்
சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்
சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்
இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்
இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளமுடன்.
வாட்ஸ் அப் பகிர்வு