சொல்லடிக்கு பதிலடி…!

 

இசை முட்டை

விளக்கு வெளிச்சத்தில் முட்டைகள் சீக்கிரமே
பொரிக்கப்படுகின்றன. இனிய இசையைக் கேட்கும்
கோழிகள் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை
இடுகின்றன.

அமெரிக்காவில் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள்
இசைக் கலைஞர்களை வரவழைத்து இசையைப் படர
விடுகிறார்கள்.

இசை கேட்டு மயங்கும் கோழிகள் அதிக எண்ணிக்கையில்
மட்டுமல்லாமல், பெரிய அளவிலும் முட்டைகளை
இடுகின்றன.

———————————

வித்யுத்
முத்தாரம்

பீரங்கிப் புறா

கொடுமையான யுத்தத்தின் அடையாளமாக ஒரு பீரங்கி.
அதன் வாய்ப்பகுதி யில் ஒரு புறா கூடுகட்டிக்
கொண்டிருக்கிறது இது ஓர் ஓவியம்.

இந்த ஓவியம் ரஷ்யாவில் உள்ளது. போரெல்லாம் முடிந்த
பின் உலகில் நிரந்தரமாக அமைதி குடிகொண்டிருக்கிறது
என்பதை விளக்கும் இந்த ஓவியம் அந்நாட்டின்
ஓவியங்களில் பெரும் புகழ் பெற்றது.

—————————–

வித்யுத்
முத்தாரம்

மின் விசிறி

காமராஜர் முதல்வராக இருந்தபோது,
அவரது அமைச்சரவையில் இருந்தவர்,
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்.

ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின்
வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார்.

அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார்
சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக்
கொண்டிருந்தார்.

உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை
வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம்
சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.

பிறகொரு சமயம் வீட்டிற்குப் போனபோது
மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர்,
‘‘எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால்
தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும்
வெங்கட்ராமன் மின்விசிறி ஏன் வாங்கித் தந்தார்?

முதல் அமைச்சரின் அம்மா என்பதால்தானே.
இது கூட லஞ்சம் மாதிரிதான்’’ என்று சொல்லி விட்டு
அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ்
கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச்
சொல்லிவிட்டார்.

———————————–
பா.ராஜேஷ்
நன்றி-முத்தாரம்

அவன் பார்த்தான், அவள் முகம் சிவந்தாள்

பரிமளா தேவி என்பவர் எழுதிய “மருதாணிப் பூக்கள்’
என்கிற கவிதைத் தொகுப்பு புத்தக விமர்சனத்துக்கு
வந்திருந்தது. அதிலிருந்த,

விரல்கள் தொட்டதால்
வெட்கத்தில் சிவந்தது
மருதாணி

என்கிற துளிப்பாவைப் படித்தபோது, பிரபல ஆங்கிலக்
கவிஞர் லார்ட் பைரனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி
ஒன்று நினைவுக்கு வந்தது.

பைரன் அப்போது பள்ளிச் சிறுவன். பள்ளிக்கூடத்தில்
கட்டுரை எழுத வேண்டும். ஏசுநாதர் ஒரு விருந்துக்குச்
செல்கிறார். அந்த விருந்தில் எல்லோருக்கும் வழங்குவதற்கு
“திராட்சை ரஸம்’ இருக்கவில்லை.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்.
அந்தத் தண்ணீரை ஏசுநாதர் பார்த்தவுடன், அந்தத் தண்ணீர்
திராட்சை ரஸமானது என்று விவிலியம் கூறுகிறது.

இதுதான் ஏசுநாதர் செய்த முதல் அற்புதம் என்று
கருதப்படுகிறது. அன்றைய கட்டுரைக்கான கருப்பொருள்
இதுதான்.

இது குறித்து எல்லா மாணவர்களும் பக்கம் பக்கமாக
வியாசம் எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால், சிறுவன்
பைரனோ மூன்று வரிகள் எழுதிவிட்டுக் கைகட்டி
அமர்ந்திருந்தான்.

அதைப் பார்த்த ஆசிரியருக்குக் கோபம் வந்தது.
“”என்ன நீ பேசாமல் இருக்கிறாய்?” என்று கேட்டு, அவன்
எழுதி வைத்திருந்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்த
ஆசிரியர் ஆச்சரியத்தில் சமைந்தார்.

அந்தச் சம்பவத்தை மூன்று வரிகளில் கவிதையாக்கி
இருந்தார் சிறுவன் பைரன்.
இதுதான் பைரன் எழுதிய முதல் கவிதை.

அவன் பார்த்தான்
அவள்
முகம் சிவந்தாள்

————————————–
தமிழ்மணி- இந்த வாரம் கலாரசிகன்
கட்டுரையிலிருந்து-

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட போலிச் செய்திகள்
உலா வருகின்றன. அச்செய்திகளின் நம்பகத்தன்மையை
அறிந்துகொள்வது மக்களுக்குச் சிரமமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக
மீம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்தது போய், போலிச்
செய்திகளும், உண்மை மாதிரியே பகிரப்படுகின்றன.

இந்த போலிச் செய்திகளை, காட்டிக் கொடுக்கிறது
‘யூடர்ன்’ (youturn) இணையதளம்.

“மீம்ஸ் மூலமாகவும், கட்டுரைகள் வழியாகவும் பல்வேறு
போலிச் செய்திகளை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.
உண்மைச் செய்தியைக் கண்டறிய, ஆய்வுநோக்கில்
நேரடியாகக் கள நிலவரத்தை அறிந்தும்,
அரசுத் தரப்பில் விளக்கம் பெற்றும் உண்மைச் செய்திகளை
நிறுவுகிறோம்” என்கிறார், இத்தளத்தின்
இணையாசிரியரும் இணை நிறுவனருமான
ஐயன் கார்த்திகேயன்.

—————————————–
பட்டம், தினமலர்

தாகூர் எண்ணக் களஞ்சியம்

tagore.jpg

பத்து பெண்களின் கதை

IMG_2059.jpg

கார்ட்டூன் கபே…!

IMG_20181108_212729-1.jpg

மூன்றாவது கண்! சுகி. சிவம்

im7
விழிப்புணர்வு என்ற வார்த்தையைப் படித்துவிட்டு அதெல்லாம்
மகான்கள், ஞானிகள் சமாச்சாரம் என்று தூரத்தில் போய் விட
வேண்டாம்…

ஏழெட்டு கேள்விகள் கேட்கிறேன்… பாத்ரூமுக்குள் குளிக்க
ஆரம்பித்த பிறகு, “ஆஹா துண்டு எடுக்கவில்லை… சோப்பு
கொண்டு வரவில்லை’ என்று கவலைப்பட்ட துண்டா?

கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு, “அடடா… குழாயில்
தண்ணீர் வரவில்லையே’ என்று கண்டறியும் விநோத மனிதரா
நீங்கள்?

அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிக்கட் இத்யாதிகளைத்
தேடுகிறேன் பேர்வழி என்று கலவரம் அடைந்து கலாட்டா
செய்கிறவரா?

கைபேசி எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் பிறரிடம்
மிஸ்டு கால் கொடு என்று கெஞ்சிய பிறகு, அடடா silent-இல்
அல்லவா போட்டோம் என்று தலையில் அடித்துக் கொள்ளும்
பழக்கம் உண்டா?

இருவரிடம் அல்லது மூவரிடம் சந்திப்பதாக (ஒரே நாள் ஒரே
நேரத்தில்) வாக்குக் கொடுத்து விட்டு, “அடடா… முட்டாள்
தனம் செய்துவிட்டோமே’ என்று வருத்தப்பட்ட துண்டா?

“நாம் இவ்வளவு கோபப் பட்டிருக்க வேண்டாம்… இந்த
விஷயத்தைக் கேட்டிருக்க வேண்டாம்… அந்த வார்த்தையைச்
சொல்லியிருக்க வேண்டாம்’ என்று Flash Back சீன்களை
ஓட்டி அதை Erase (அழிக்க) அல்லது Delete (நீக்க) பண்ண
தத்தளிப்பது உண்டா?

“அதைச் சாப்பிட்டிருக்க வேண்டாம்… இதை இந்த அளவு
சாப்பிட்டிருக்கக் கூடாது” என்று பலமுறை சொல்லிக் கொள்கிற
அல்லது நினைக்கிற பழக்கம் உண்டா?

தொடர்ந்து தாமதமாகப் போய் பள்ளி, கல்லூரி, அலுவகங்களில்
அவமானப்படுவது உண்டா? மன்னிப்பு கேட்டு இளிக்கும்
வழக்கம் உள்ளவரா?

பேசக் கூடாத மனிதரிடம் பேசக் கூடாத விஷயத்தைப் பேசி
பிரச்சனைக்கு அடிக்கடி ஆளாவது வழக்கமா?

உங்கள் செயல்களை மற்றவர் விமர்சித்தாலும் பிடிக்காது…
தானாகவும் தன்னை விமர்சிக்கும் வழக்கமுமற்றவரா?

என்னுடைய மதம், மொழி, இனம், நாடு, வழிபாடு, ஜாதி, குலம்,
கோத்திரம் மிகமிக உயர்ந்தது என்கிற கர்வம் உடையவரா?

இதில் எந்த கேள்விக்கு “ஆம்’ என்ற பதில் வந்தாலும் நீங்கள்
விழிப்படைய வேண்டியவர். இன்னும் விழிப்படையாதவர்.
இத்தனை கேள்வி எழுப்பும் இவன் ரொம்ப யோக்யனா?

இவன் மட்டும் இந்த மாதிரி இருப்பதில்லையா? இப்படிக் கேட்க
இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று பொருமுகிற நபரா?

மன்னிக்கவும் நீங்கள் ரொம்பவே தூக்கத்தில் இருப்பவர்…
விழிக்க இரண்டு மூன்று ஜன்மங்கள் கூட எடுக்க வேண்டி
இருக்கலாம்… கோபம் வருகிறதா? சரி வம்பை நிறுத்திவிட்டு
விஷயத்துக்கு வருகிறேன்.

————————

விழிப்பு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது.
கிறித்தவத்தில் இயேசுவின் பணி கூட மதமாகப் புரிந்து
கொள்ளப்பட்டதே ஒழிய, அதன் சூட்சுமம் பலருக்கும் தெரிய
வில்லை. இயேசு குறித்து என் பார்வையைச் சொல்கிறேன்.

பிறகு முடிவு செய்யுங்கள்… இயேசுவின் வசனங்களில் புகழ்
பெற்ற வசனம் உண்டு.

“இறந்தவனை இறந்தவர்களிடமே விட்டுவிடுங்கள்.
இறந்தவரை இறந்தவர்களே பார்த்துக் கொள்வார்கள்’
என்றொரு பொன்மொழி.

இதன் ஆழமான பொருள் மதத்தன்மையில் ஊறியவர்களுக்கு
ஒருபோதும் விளங்காது. மதவெறி கடந்து
விழிப்படைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை
தரிசனமாகும். விளக்குகிறேன்.

ஆழமான ஏரியில் ஒருவர் வலையை வீசி மீன் பிடித்துக்
கொண்டிருந்தார். அவர் நிறைய மீன்கள் பிடித்த
மகிழ்ச்சியில் மீன் போலவே துள்ளினார்.

அப்போது அவரது தோள்களை வலிவும் பொலிவும் மிக்க
கைகள் அழுத்தின. அந்த அழுத்தத்தில் அளவு கடந்த அன்பும்
கருணையும் அர்த்தமாயின. திடுக்கிட்டுத் திரும்பிய மீனவர்
தம் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் கைகளுக்குச்
சொந்தக்காரரைக் கண்டார்.

ஊடுருவும் பார்வை. கவர்ந்திழுக்கும் காந்தம் போன்ற
திருமுகம். அவரது ஆளுமை வட்டத்தில் இருந்து மீளுவது
அத்தனை சுலபமல்ல.

“இப்படிச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்தே காலம்
கழிக்கிறாயே? என்னுடன் வா. வாழ்க்கையைப் பிடிக்க, இதை
விட உயர்ந்தவற்றை வலை வீசி பிடிக்கும் கலையைச் சொல்லித்
தருகிறேன்” என்றார் அந்தப் புனிதர்…

அவர் பெயர் இயேசுபிரான். மறுதலிக்க முடியாதவராய்,
வலையையும் மீன்களையும் வீசி விட்டு அவர் பின்னே நடக்கத்
தொடங்கினார் அந்த மீனவர்.

அவரது கருணை மழை, ஞான அலை, மீனவரை அவர் பின்னே
போக விட்டது. இருவரும் சிறிது தொலைவு நடந்த சமயம்…
உறவினர்கள் ஓடி வந்தார்கள்.

“உன் தகப்பன் இறந்து விட்டான்… வா… உடனே வா” என்று
மீனவரின் உறவினர்கள் கூவி அழைத்தனர். கைகளைக்
கூப்பி யேசுவை நோக்கியவர்,

“போதகரே என் தந்தை இறந்து விட்டாராம்… அவரை அடக்கம்
செய்துவிட்டு உங்கள் பின்னே வந்து விடுகிறேன்… நீங்கள்
கொஞ்சம் காத்திருக்க இயலுமா?” என்று கண்ணீர் மல்கக்
கேட்டார் அவர்.

இயேசு சிரித்தபடி சொன்னார். “இறந்தவரை இறந்தவர்களே
அடக்கம் செய்யட்டும். நீ போக வேண்டாம். நீ என்னுடன் வா.
நீ உயிருடன் இருக்கிறாய். இந்தக் கிராமத்தில் அநேக
மனிதர்கள் இறந்தவர்கள். அவர்கள் இறந்தவரை அடக்கம்
செய்து விடுவார்கள்” என்றபடி இயேசு புறப்பட்டார்.

இறந்தவர்கள் இறந்தவரை அடக்கம் செய்வார்கள் என்ற
வசனம் புரிகிறதா? உயிரோடு இருக்கும் போதே சிலர்
செத்தவர்களைப் போல ஆகி விடுவதை யேசு குறிப்பிடுகிறார்.

அவர்கள் விழிப்படையாதவர்கள். இருந்தும் இல்லாதவர்கள்.
உயிருண்டு… ஆனால் உயிர்ப்பில்லை. அவர்கள் இறந்தவர்கள்…
அவர்கள் நிஜமாகவே மரித்துப்போனவர்களை அடக்கம்
செய்வார்கள் என்கிறார் யேசு. என்னை உலுக்கிய வரிகளில்

வலிமையான வரி இது!

———————

விழிப்புணர்வு என்பது மதங்கடந்தது என்பதை உணர்த்த
இஸ்லாத்தில் இருந்தும் ஓர் உதாரணம் தருகிறேன்.

ஹசரத் அலி என்கிற பெருமகனார், இஸ்லாத்தை – மார்க்கத்தை
நிலை நாட்ட ஒருவருடன் போருக்கு அழைக்கப்பட்டார். போரிட
வந்தவருக்குக் கொள்கை விளக்கங்களை உணர முடியாததால்,

“என்னைப் போரில் நபிகள் வென்றால் மார்க்கத்தில்
இணைகிறேன். வெற்றி முடிவானது” என்று சவால் விட்டார்.
நபிகள் ஹசரத்தைப் போரிட பணித்தார்.

மற்ற விவரங்களை நாகூர் ரூமி அவர்கள் புத்தகத்திலிருந்து
படித்ததைத் தருகிறேன்.

தன் எதிரியைக் கீழே தள்ளி அவன் நெஞ்சின் மீது அலி
உட்கார்ந்து விட்டார்கள். வெற்றி முடிவானது. அந்த நேரத்தில்
அந்த எதிரி ஒரு காரியம் செய்தான். தோற்றுப் போகப்
போகிறோம் என்று தெரிந்து விட்ட தருணத்தில் யாரும்
செய்ய நினைக்காத, செய்யத் துணியாத காரியம் அது.

திடீரென்று அலீயவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான்.
அவ்வளவுதான்! அலீக்குக் கோபம் பொங்கியது. அவனைக்
கொல்ல வாளை உருவினார்கள்.

ஆனால் என்ன நினைத்தார்களோ, உடனே எழுந்து
விட்டார்கள். “உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்.
நீ போய்விடு” என்றார்கள்.

எதிரிக்கு ஒரே ஆச்சரியம். நாமாக இருந்திருந்தால்
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்திருப்போம்.
ஆனால் அவனோ அலீயின் செயலுக்கு விளக்கம் கேட்டான்.

முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்தியும்
ஏன் என்னை விடுகிறீர்கள்? என்று கேட்டான்.

அலீ சொன்னார்கள்: நீ என் முகத்தில் காறி உமிழ்ந்த போது
எனக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. உடனே நான்
உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட நினைத்தேன்.

ஆனால் அப்படி நான் செய்திருந்தால், அது என் கோபத்தின்
காரணமாக உன்னைக் கொலை செய்ததாகும்.
இது இறைவனுக்காக நடத்தப்படும் யுத்தம். இதில் என்னுடைய
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இந்தப் போரின்
புனிதத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

ஃபார்ஸி மொழியில் இயற்றப்பட்ட தனது மஸ்னவி என்ற
காவியத்தில் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள்
இந்த நிகழ்ச்சியை விவரித்து சிலாகிக்கிறார்கள்” என்கிறார்
நாகூர் ரூமி.

இறைவனுக்காக என்று தொடங்கிய சண்டை தன் மீது எச்சில்
துப்பியதற்கான கொலையில் முடிவது சரியல்ல என்ற விழிப்பே
அலீ அவர்களின் சிறப்பு.

——————————
விழிப்புணர்வு என்பது மதங்கடந்தது என்பதை உணர்த்த
இஸ்லாத்தில் இருந்தும் ஓர் உதாரணம் தருகிறேன்.

ஹசரத் அலி என்கிற பெருமகனார், இஸ்லாத்தை – மார்க்கத்தை
நிலை நாட்ட ஒருவருடன் போருக்கு அழைக்கப்பட்டார். போரிட
வந்தவருக்குக் கொள்கை விளக்கங்களை உணர முடியாததால்,

“என்னைப் போரில் நபிகள் வென்றால் மார்க்கத்தில்
இணைகிறேன். வெற்றி முடிவானது” என்று சவால் விட்டார்.
நபிகள் ஹசரத்தைப் போரிட பணித்தார்.

மற்ற விவரங்களை நாகூர் ரூமி அவர்கள் புத்தகத்திலிருந்து
படித்ததைத் தருகிறேன்.

தன் எதிரியைக் கீழே தள்ளி அவன் நெஞ்சின் மீது அலி
உட்கார்ந்து விட்டார்கள். வெற்றி முடிவானது. அந்த நேரத்தில்
அந்த எதிரி ஒரு காரியம் செய்தான். தோற்றுப் போகப்
போகிறோம் என்று தெரிந்து விட்ட தருணத்தில் யாரும்
செய்ய நினைக்காத, செய்யத் துணியாத காரியம் அது.

திடீரென்று அலீயவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான்.
அவ்வளவுதான்! அலீக்குக் கோபம் பொங்கியது. அவனைக்
கொல்ல வாளை உருவினார்கள்.

ஆனால் என்ன நினைத்தார்களோ, உடனே எழுந்து
விட்டார்கள். “உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்.
நீ போய்விடு” என்றார்கள்.

எதிரிக்கு ஒரே ஆச்சரியம். நாமாக இருந்திருந்தால்
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்திருப்போம்.
ஆனால் அவனோ அலீயின் செயலுக்கு விளக்கம் கேட்டான்.

முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்தியும்
ஏன் என்னை விடுகிறீர்கள்? என்று கேட்டான்.

அலீ சொன்னார்கள்: நீ என் முகத்தில் காறி உமிழ்ந்த போது
எனக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. உடனே நான்
உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட நினைத்தேன்.

ஆனால் அப்படி நான் செய்திருந்தால், அது என் கோபத்தின்
காரணமாக உன்னைக் கொலை செய்ததாகும்.
இது இறைவனுக்காக நடத்தப்படும் யுத்தம். இதில் என்னுடைய
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இந்தப் போரின்
புனிதத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

ஃபார்ஸி மொழியில் இயற்றப்பட்ட தனது மஸ்னவி என்ற
காவியத்தில் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள்
இந்த நிகழ்ச்சியை விவரித்து சிலாகிக்கிறார்கள்” என்கிறார்
நாகூர் ரூமி.

இறைவனுக்காக என்று தொடங்கிய சண்டை தன் மீது எச்சில்
துப்பியதற்கான கொலையில் முடிவது சரியல்ல என்ற விழிப்பே
அலீ அவர்களின் சிறப்பு.

—————————–

கோபத்தில் நாம் எதுசெய்தாலும் அது விழிப்புணர்வற்ற
செயல் என்று அறிய வேண்டும். இன்னும் பல புனிதமான
பெயர்களில் மனிதர்கள் வன்முறை இன்று
நிகழ்த்துகிறார்கள்.

ஆனால் உண்மையான காரணம் அறிவு தூங்கி வழிய,
மனக்குழப்பம் தலைவிரித்தாடி அந்தப் பிழைகளை
அரங்கேற்றம் செய்கிறார்கள்.

இந்த நுட்பமான பார்வையை உங்கள் மூன்றாவது
கண்தான் வழங்கமுடியும். விழிப்புணர்வற்ற நிலையை
விளக்கும் ஜென் கதை ஒன்று சொல்கிறேன்.
கொஞ்சம் நம்ம ஊர் சரக்காக்கித் தருகிறேன்.

பல அடுக்குகளைக் கொண்ட மாடியின் உச்சியில் நின்று
கொண்டிருந்தார் ஒரு நபர். தரை தளத்தில் தெரிந்த நீச்சல்
குளத்தை இரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்தில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது.
“ஏ… ராமசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்துட்டான்”
என்று அலறினார் ஒருவர். அவ்வளவுதான்… மேல்
மாடியிலிருந்து நீச்சல் குளம் நோக்கிக் குதித்தார் அந்த நபர்.

ஆனால் நீச்சல் குளம் நோக்கித் தலை கீழாக வரும் பாதி
வழியில் தான் அவருக்கு உரைத்தது… “நான் ராமசாமி
இல்லையே… கிருஷ்ணசாமி அல்லவா என் பெயர்’ என்று
குழம்பினார்.

கொஞ்ச தூரத்தில் வரும்போது நமக்கு மகன் இல்லை
காரணம் திருமணமே ஆகவில்லை… அப்படியிருக்க
ஏன் குதித்தோம் என்று கவலைப்பட்டார்.

இது உண்மையல்ல… ஒரு வேடிக்கைக் கதை…

ஆனால் பல மனிதர்கள் குழப்பத்திலும் மயக்கத்திலும்
செயல்படுகிறார்கள். என்பதை எடுத்துரைக்கும்…
இல்லை… இடித்துரைக்கும் கதை.

நாம் குழப்பத்தில் செயல்படுகிறோம் என்பதை உணரும்
அந்தக் கணத்தில்தான் விழிப்பே தொடங்குகிறது…
புரிந்தால் சரி!

—————————————
நீ… நான்… நிஜம்! -தொடர் கட்டுரையிலிருந்து

(தொடரும்)


« Older entries