டிசம்பர் 14 சக்தியைச் சேமிக்கும் நாள் energy conservation day
இந்த நாளை நாம் மிக முக்கியமான நாளாகக்கொண்டு நம்மால் முடியும் வரை
சக்தியைச் சேமிக்க வேண்டும் இந்த பூமியிலேயே நமக்குத் தேவையான சக்திகள்
அனைத்தும் உள்ளன. நீர்மின்சக்தி ,,அணுமின்சக்தி என அனைத்தையும்
உருவாக்கியது மனித ஆற்றல் என்ற சக்திதான்.
இல்லத்தரசிகள் கேஸ் அடுப்பை தேவைக்கு அதிகமாக உபயோகிக்காமல்
சேமிக்கலாம் .சிலர் தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு டிவி கீழ் அமர்ந்து
விடுவார்கள், அது கொதித்து பாதி ஆனவுடன் பின் வந்து அணைப்பார்கள். சிலர்
தோசை வார்க்கும்
தவாவை பெரிய அளவில் வைத்து அதில் சிறிய தோசை வார்ப்பார்கள் ,சின்ன தவா
வைத்தாலே தேவையான சூடு பரவும் ,
பர்னரின் அளவு இருந்தால் நன்றாக இந்தச் சக்தியைச் சேமிக்கலாம்,
சில ஆண்கள் ஷேவிங் செய்து கொள்ள குழாயைத் திறந்து விட்டபடி
தொடருவார்கள் ,அத்துடன் செல்லிலும் பேசுவார்கள்
தண்ணீர் போனபடி இருக்கும் ,,,,,,,இதே போல் பலதடவைகள் குழாய் திறந்து
விட்டபடி வந்து பக்கெட் ரொம்பி வழிந்துக்கொண்டிருக்கும் போது ஞாபகம்
வந்து மூடுவார்கள்.
சிலர் மேலே தண்ணீர் ஏற மோட்டார் போட்டு விட்டு
பின் அந்த டேங்க் ரொம்பி வழிந்து கீழே கொட்ட, பின் முழித்துக்கொள்வார்கள்.
சில தெருவில் பகலிலும் விளக்கு எரியும் ,அதை அணைக்க மறந்து இருக்கலாம்
இதே போல் மனிதர்கள் இல்லாத அறையிலும் சுழல் காற்றாடி
சுழன்றுக்கொண்டிருக்கும் ,கணினியோ கேட்கவே வேண்டாம் அதை சிலர் அணைப்பதே
இல்லை.
மைக்ரோஅவனில் தேவையான
அளவுடன் கண்ணாடி பாத்திரம் வைக்க நிறைய சக்தி சேமிக்கலாம் ,
வீட்டு வாசலில் மரங்கள் இருந்தால் நல்ல காற்று வருவதால் மினசாரச் சக்தி
சேமிக்கலாம்.
தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டியிருக்கும் விதம் மிக வியப்பைத்
தருகிறது. தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும்
மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம் ,,,,,
உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி
போட்டாற்போல் இருக்கிறது இது நல்ல வெயில்
காலத்திலும் தான் ,,,,,,,,,,எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி
இந்தச் சக்தியைச் சேமிக்கும் போது நம்மிடம் இருக்கும் சக்தியையும்
சேமிக்கலாமே படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை
இழக்கிறோம் ,காமத்தில் சக்தி
அதிகமாக போகிறது ,அதிக மௌனமாக இருந்தால் அதில் சக்தி சேமிக்கப்பட்டு பல
நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது.
ஜே.வி செர்னே சொல்கிறார்
“ஆற்றல் சக்தியை நாம் பயன்படுத்தி வெற்றிபெற வார்த்தைகள்
வாகனங்களாக உள்ளன . “செய்து முடிப்பேன்” என்ற வாகனத்தில்
ஏறிக்கொண்டால் அடக்கமுடியாத ஆர்வத்துடன் கூர்ந்து செயல்
வடிவில் ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நோக்கிச் செல்லலாம்
வானத்தைத் தொட்டுவிடலாம் ”
சக்தியைச்சேமிப்போம் ,,,,,,,,,
அன்புடன் விசாலம்
–~–~———~–~—-~————~——-~–~—-~
நன்றி;
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Piravakam@googlegroups.com