நான் கத்தவே இல்லை !
நவம்பர் 13, 2018 இல் 9:15 பிப (நகைச்சுவை)
கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில்
வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான
நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு
வந்திருந்தான்.
விமானம் மேலே கிளம்புவதையும், வானில்
வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும்
ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி
ஒருவர், “நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த
விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு
வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.
கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு
ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து
, “நாங்கள் வரவில்லை,” என்றான்.
எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி,
“நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும்
இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச்
செல்கிறேன்.
வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும்,
நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம்
போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை
நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?”
என்றார்.
“”சம்மதம்!” என்றான் கஞ்சன்.
தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்;
விமானம் பறக்கத் தொடங்கியது.
வானத்தில் விமானம்
குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது.
சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை.
வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார்
விமானி.
கஞ்சனின் கையைக் குலுக்கி,
“ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை
நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத்
தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்!
என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?”
என்று கேட்டார் விமானி.
“”நான் கூட, ஒரே ஒரு சமயம்,
என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ
முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.
“
எப்போது?” என்று கேட்டார் விமானி.
“என் மனைவி,
விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!”
என்றான் கஞ்சன்.
மயங்கி விழுந்தார் விமானி.
–
——————————
வாட்ஸ் அப் பகிர்வு
ஆசிரியருக்கு பிறந்ந நாளன்று பரிசு கொடுத்த மாணவர்கள்…!!
நவம்பர் 13, 2018 இல் 7:33 பிப (நகைச்சுவை)
ஆசிரியருக்கு ஏக சந்தோஷம். தம் பிறந்த நாளன்று
தன் வகுப்பில் படிக்கும் நாற்பது மாணவர்களும்
இரண்டு பெரிய பரிசு பாக்கெட்டுகளைக் கொண்டு
வந்து கொடுத்ததும் அசந்து விட்டார்!
–
முதல் பாக்கெட்டைப் பிரித்தார் – பெரிய அளவில்
ஒரு கேக்!
–
இரண்டாவதைப் பிரித்தார்..
.ஓர் அழகான கத்தி, நாற்பத்ததொரு பெப்பர் தட்டுகள்
!-
-சாமி
–
—————————————–
அந்த டாக்டர் உன்னைப்பறி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்கிறார்!
நவம்பர் 13, 2018 இல் 2:28 பிப (நகைச்சுவை)
அந்த டாக்டர் உன்னைப்பறி நல்லாவே தெரிஞ்சு
வெச்சிருக்கிறார்!
–
எப்படிங்க?
–
பாரு…மாத்திரையை சீரியலுக்குப் பின்,
சீரியலுக்கு முன்’னு எழுதிக் கொடுத்திருக்கிறாரே!
–
ஆர்.வனஜா
–
——————————————–
–
குற்றவாளி உங்களிடம் எப்படி நூதன வழிப்பறி
செஞ்சான்?
–
வழியிலே நான் வரும்போது, கத்தியைக்காட்டி
என்னோட ஏ.டி.எம்.கார்டை அவனோட
ஸ்வைப் மெஷின்ல ஸ்கிராப் பண்ணித்தான்
யுவர் ஆனர்…!!
–
ஜவஹர் பிரேம்குமார்
–
——————————
லஞ்சம் கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்…!
நவம்பர் 12, 2018 இல் 11:37 முப (நகைச்சுவை)
இன்னைக்கு தலைவரோட பேச்சு ரொம்ப புதுமையா
இருந்துச்சு!
–
எப்படி?
–
நாங்க ஆட்சிக்கு வந்தால் லஞ்சம்
கொடுத்தாவது லஞ்சத்தை ஒழிப்பேன்’னாரே!
–
அதிரைபுகாரி
–
———————————————-
–
பயப்படாதீங்க முதல் ஊசி போடும்போது வலிக்கும்,
இரண்டாவது ஊசி போடும்போது வலிக்காது!
–
சரி டாக்டர், அப்படின்னா இரண்டாவது
ஊசியே எனக்குப் போடுங்க!
–
பாலாஜி கணேஷ்
–
——————————————
–
ஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு!
–
அப்படியா டாக்டர்?
ஆமாம். ஆதனால்தான் பேஷண்ட் பிழைச்சிருக்கார்!
–
எஸ்.முகம்மது யூசுப்
–
—————————————————————————–
இலவச மிக்ஸி, கிரைண்டர் வேண்டாம்னு
நான்தான் உடைச்சேன்!
-அட நாசமாப் போறவனே!
நீ உடைச்சது
வசந்ந் & கோ -ல காசு கொடுத்து
வாங்கினது…!
——————————–
-குமுதம்