மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி

 

201811130343172658_Actress-Rakhi-Sawant-was-allowed-to-be-hospitalized-when-she_SECVPF.gif

z.gif

தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த்.
என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம்
ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய
தனுஸ்ரீதத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர்
குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில்
நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண ராக்கிசாவந்த்
சென்று இருந்தார்.

ஸ்டேடியத்தின் முன்பகுதியில் உட்கார்ந்து போட்டியை ரசித்தார்.
மல்யுத்தத்தில் எல்லோரையும் வென்ற ரொபல் என்ற வீராங்கனை
பார்வையாளர்களை நோக்கி என்னுடன் மோத தைரியம் உள்ள
பெண் யாராவது இருக்கிறீர்களா? என்று சவால் விடுத்தார்.

உடனே ராக்கி சாவந்த் மல்யுத்த வளையத்துக்குள் குதித்து
மோதுவதற்கு நான் தயார் ஆனால் என்னைபோல் உன்னால் நடனம்
ஆட முடியுமா? என்று எதிர் சவால் விடுத்தார்.
அதை ரொபல் ஏற்றதும் இருவரும் மோதினார்கள்.

சில நொடிகளிலேயே ராக்கி சாவந்தை ரொபல் தனது தலைக்கு
மேலே தூக்கி வேகமாக தரையில் அடித்தார். இதில் ராக்கி
சாவந்துக்கு காயம் ஏற்பட்டு மயக்கமானார். நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்தவர்கள் பதறியபடி ஓடிப்போய் முதல் உதவி சிகிச்சை
அளித்தனர்.

கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். ராக்கி சாவந்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக
கூறப்படுகிறது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு
சவால் விட்டபடி ரொபல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி விட்டு
ஸ்டேடியத்தில் இருந்து வெளியேறினார். இது பரபரப்பை
ஏற்படுத்தியது.

——————————-
தினத்தந்தி

எங்கள் பெயரில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்: தமிழ் ராக்கர்ஸ் விளக்கம்

 

சென்னை:
எங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை
யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்
விளக்கம் அளித்துள்ளது

புதிய திரைப்படங்களை உடனுக்குடன் இணையதளத்தில்
வெளியிட்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக
விளங்கி வரும் இணையதளம் தமிழ் ரராக்கர்ஸ். பல
வருடங்களாக எவ்வளவோ முயற்சித்தும் இந்த தளத்துக்கு
பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை
முடக்கவோ அரசு மற்றும் திரைத்துறையினரால் முடியவில்லை.

சமீபத்தில் தீபாவளி தினத்தன்று விஜய் நடித்து வெளிவந்த
‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று
தமிழ் ராக்கர்ஸ் பெயரில், சமூக வலைதளமான் ட்விட்டரில்
ஒரு சவால் விடப்பட்டது.

அதேபோலவே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ்
இணையதளத்தில் வெளியிடட்டது.
இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே ரஜினிகாந்த் நடித்து
விரைவில் வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ்
அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில்
மீண்டும் ட்விட்டரில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் எங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில்
பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் விளக்கம் அளித்துள்ளது

இதுதொடர்பாக அந்த தளத்தியல் வெளியாகி உள்ள
அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலோ நாங்கள்
இல்லை. எங்களுக்கு அங்கு கணக்குகளே கிடையாது.
சமூக வலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி
யாராவது பதிவிட்டால், அது போலியே.

அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும்
நம்பாதீர்கள்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————————-
தினமணி

திகில், நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வருகிறது ‘காட்டேரி’

**
வைபவ், சோனம் பாஜ்வா இணைந்து நடித்துள்ள
படம் ‘காட்டேரி’. இது திகிலும் நகைச்சுவையும்
கலந்த படமாக உருவாகி வருகிறதாம்.

டீகே இயக்கியுள்ளார். கருணாகரன்,
மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம் உள்ளிட்டோர்
முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா ஆகிய இருவரும்
மற்ற இரு கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று
வருகிறது. பட வெளியீட்டுத் தேதி விரைவில்
அறிவிக்கப்படவுள்ளது.

————————————-
தமிழ்முரசு-sg

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan,
பிறப்பு: ஏப்ரல் 26, 1970)

பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும்
ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில்
அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில
திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள்
ஓய்வு பெற்றிருந்தார்.

பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில்,
பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத்
தொடங்கினார்[1]. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005),
எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற
படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது;

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும்
இரு விருதுகளும் கிட்டின.

2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட
விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப்
பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.

———————-
நன்றி-விக்கிபீடியா

8 ஆண்டுகள் கழித்தும் நிறைவேறாமல் போன சரண்யாவின் ஆசை

தமிழில் நம்பர் ஒன் குணச்சித்திர நடிகையாக வலம்வரும்
சரண்யா பொன்வண்ணன் தனது சொந்த மொழியான
மலையாளத்தில் எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில்
நடித்துள்ளார்.

படத்தின் பெயர் ‘ஒரு குப்ரசித பையன்’.
டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்
படத்தில் அவரது அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.

இதில் செம்பம்மாள் என்கிற தமிழ் பெண்ணாகவே இவர்
நடித்துள்ளதால் படத்தில் இவர் பேசுவது முழுவதும்
தமிழ் வசனங்கள் தானாம்.

எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு படத்திலாவது மலையாளத்தில்
பேசலாம் என ஆவலாக இருந்தவருக்கு இது கொஞ்சம்
ஏமாற்றம் தான் என்றாலும், தமிழில் அவருக்கு வழங்கப்படுவது
போல இந்தப்படத்திலும் அழுத்தமான கேரக்டரை
கொடுத்துள்ளார்களாம்.

இந்தப்படம் (நவ-9) ரிலீஸாகிறது.

நன்றி
தினமலர்

பொங்கலுக்குத் தயார்: விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு

அஜித் – சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள
படம் – விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக்,
யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா
போன்றோரும் நடித்துள்ளார்கள்.

இப்படத்துக்கு இசை – இமான்; ஒளிப்பதிவு – வெற்றி.
பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத்
தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும்
படத்தை இயக்கியுள்ளார் சிவா.

அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை
இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை
மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன்
இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்
அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி
விஸ்வாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக
இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து
வருகிறார் அஜித்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
பெற்றுள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் சமயத்தில்
வெளியாவதற்குப் படம் தயாராகி வருகிறது.

——————————
தினமணி

சர்காரை தொடர்ந்து ரஜினியின் 2.0 படமும் வருகிறது: தமிழ் ராக்கர்ஸ் டிவீட்

2
ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 படத்தை
இணையதளத்தில் வெளியிடுவோம் என்று
தமிழ் ராக்கர்ஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தை
லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில்
ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்
அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை
அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகி
வருகிறது.

இது வரும் நவம்பர் 29 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் இணையதளத்தில்
வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் டிவிட்டர்
பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம்
ஹெச்டி பிரிண்டில் வெளியாகும் என்று படம்
வெளிவருவதற்கு முன்னதாகவே டிவிட்டர் பக்கத்தில்
தெரிவித்தது.

இதை தடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திரையரங்க
உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இருப்பினும், சர்கார் படத்தை வெளியான முதல் தினமே
தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது.

———————————-
தினமணி

கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி

96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக
சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட
உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’
உருவாகி இருக்கிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த
காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன்
இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி
80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார்.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும்
இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக
நடந்து வரும் நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை
முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக
இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

——————————–
மாலைமலர்

திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி

பாகுபலி 2, பாகமதி படங்களுக்கு பிறகு சினிமாவில்
இருந்து விலகியிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின்
திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வரும் நிலையில்,
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய
தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து
நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி
உள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு
சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின்
படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில்
தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்
நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும்
வெளியாகவில்லை.

அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006-ஆம் ஆண்டு
ரெண்டு திரைப்படம் வெளியானது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய
உள்ளனர். விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு
ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ
விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று
படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக
நிறைவுற்ற பிறகு ‘சைலன்ஸ்’ பட வேலைகள்
ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து
படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கு திருமணம் நடக்க
இருப்பதாக வந்த வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
வைத்துள்ளார்.

—————————————-
மாலைமலர்

வள்ளி’ படத்தில் இலவசத்தை எதிர்த்துப் பேசிய ரஜினியும், ‘சர்கார்’ சர்ச்சையும்

 


‘சர்கார்’ படத்தில் அரசுக்கு எதிராகப் பேசியதாக அதிமுகவினர்
போராட்டம் நடத்தும் நேரத்தில் இதேபோன்று இலவசங்களை
விமர்சித்து 25 ஆண்டுகளுக்கு முன் ரஜினி பேசியுள்ளார்.

ஜெயலலிதா 91-96 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது
நடிகர் ரஜினியின் படங்களில் அவர் பேசிய வசனம் அரசுக்கு
எதிராகப் பேசப்பட்டதாகக் கருதப்பட்டது.

அவர் படத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு எதிராக பேசிய
வசனங்களும், என்னைச் சீண்டாதீர்கள் நான் பாட்டுக்கு
என் வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறியதும்,
அண்ணாமலையில் அரசியல்வாதிகள் குறித்துப் பேசிய
வசனமும் அரசுக்கு எதிரான விமர்சனமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால் அவை அனைத்தும் வசனங்கள், விமர்சனம் என்கிற
அளவிலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில்
இலவசங்கள் அவ்வளவாக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு
அறிவிக்காத நேரம்.

ரஜினி சொந்தமாக தயாரித்து, கதை, திரைக்கதை , வசனம்
எழுதி நண்பர் நடராஜை வைத்து இயக்கிய ‘வள்ளி’ திரைப்படம்
1993-ல் வெளியானது. அப்போது ரஜினிக்கும் ஆளும் தரப்புக்கும்
லேசாக உரசல் இருந்த நேரம். அந்தப்படத்தில் ரஜினி கவுரவ
வேடத்தில் வருவார்.

கிட்டத்தட்ட யோகியைப் போன்ற தோற்றம். அதுவரை
இளமையான கேரக்டரில் நடித்த ரஜினி இந்தப் படத்தில்
செம்பட்டை முடியுடன் பல நாள் தாடியுடன் தோன்றுவார்.

அப்போது ஒரு இடத்தில் இலவசமாக வேட்டி சேலை கொடுத்துக்
கொண்டிருப்பார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று
வாங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வரும் ரஜினி
“ஏய்யா, ஏம்மா நாம என்ன பிச்சைக்காரங்களா? சேலை, வேட்டி
வாங்கறதுக்கு? வேலை கேளுங்கய்யா,
வேலைவெட்டி கிடைத்தால் சேலை வேட்டி நாமே வாங்கலாம்.
அவங்களை மாத்த முடியாது. செத்தாலும் மாற்ற முடியாது,
நாம மாறலாம்” என்று கூறுவார்.

அதைப்பார்த்த பொதுமக்கள் சேலை, வேட்டிகளை தூக்கிப்
போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த நேரத்தில்
இது அனைவராலும் ரசித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அதில்
வேலை கேளுங்கள் என்று சொல்வார்.

ஆனால் நேரடியாக அரசை விமர்சிக்காமல் நாசுக்காக வசனம்
இருக்கும். அதன் பின்னர் அவர் படத்தில் பேசிய பல வசனங்கள்
மக்களால் ரசிக்கப்பட்டது. சில நாசுக்கான அரசியல் வசனங்களும்
அதில் இருந்தன.

தற்போது ‘சர்கார்’ சர்ச்சை சுமுகமாக முடித்து
வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலருக்கும் இதனால் மன
உளைச்சல். பதற்றம், நஷ்டம். திரைப்படங்களில் வசனத்தை,
அரசியல் கருத்துகளை நாசுக்காகப் பயன்படுத்தியவர்
கலைவாணர், எம்ஜிஆர் போன்றோர்.

25 ஆண்டுகளுக்கு முன் 1993-ல் இலவசத்துக்கு எதிராக வள்ளியில்
பேசிய ரஜினியின் வசனம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது
‘சர்கார்’ படத்தில் இலவசத்துக்கு எதிராக காட்சி
அமைக்கப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சினிமாவை எப்படி நாசுக்காகப் பயன்படுத்த வேண்டும்
என்பதற்கு ‘வள்ளி’ பட வசனம் ஒரு உதாரணம்.
இன்றும் அந்த வசனம் ரசிக்கப்படுகிறது.

——————————————-
தி இந்து

 

« Older entries