மயிலே மயிலே உன் தோகை எங்கே

நான் சிரித்தால் தீபாவளி

படம்- நாயகன்
இசை-இளையராசா
பாடலாசிரியர்- புலமைப்பித்தன்
பாடியவர்கள்-கே.ஜமுனா ராணி, ம்.எஸ்.ராஜேஸ்வரி

———————————–

நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே
காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா

நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது

யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
மீட்டும் கையில் நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை
காலம் நேரம் போகும் வா

நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
=
==========================================

மகாகவியின் வரிகள் மகாலிங்கத்தின் குரலில்…..

தாத்தாவின் கோபம் – சிறுவர் பாடல்

IMG_2049.jpg

’சர்கார்’ படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம்

’சர்கார்’ படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் பாடல் சொற்களுடன் கூடிய நீண்ட விளக்கமளித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. அப்பாடல் வரிகளுக்கு சமூகவலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

மேலும் அது தமிழே அல்ல, தமிழை கெடுத்து விட்டனர் என்று அந்தப் பாடலின் வித்தியாசமான மொழிக்கு விமர்சனங்களும் எழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு முதலில் எதிர்ப்புகள் வந்தாலும், பாடலும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை சுமார் 2.6 கோடி பார்வைகளை யு-டியூப் இணையத்தில் பெற்றிருக்கிறது.

அந்த எதிர்ப்புக்கு முதலில், ‘சிம்டாங்காரன்’ என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அதை எழுதிய பாடலாசிரியர் விவேக். தற்போது படம் வெளியாகவுள்ள சூழலில், அப்பாடலில் இருக்கும் வார்த்தைகளுக்கு முழுமையான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிம்டாங்காரன் பாடலின் மொழி – சென்னைத் தமிழ். பல்வேறு மொழிகளின் பாதிப்பு வெளிப்படுவதால், எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல சொற்கள் இருந்தாலும் (எ.கா- டர் இந்தி, உட்டா லக்கடி உருது)

எதார்த்தமான, உணர்வு பூர்வமான, இனிமையான ஒலிக் கோர்வைகளை உடைய மொழி. எளிய மக்களின் வாழ்விற்கு அருகில் இருக்கும், அவர்கள் வாழ்வியலை பிரதிபலிக்கும், கொண்டாடும் இம்மொழியில் இப்பாடலை எழுதியதில் பெருமை அடைகிறேன்.

அர்த்தம் எளிதில் புரியாததால், அதைப் புரிந்து கொள்ளத் துடிக்கும் பரவசமே பெரும்பாலும் இம்மொழியின், இவ்வகை பாடல்களின் (எ.கா – அட்டக்கு பட்டக்கு டிமிக்கடிக்குற) தனிச் சிறப்பு என்பது என் தாழ்மையான கருத்து. அதன் வெளிப்பாடே புரிந்தும் புரியாமலும் இருக்கும் இப்பாடலின் வரிகள். உங்களின் ரசனையையும் பின்னூட்டத்தையும், மதிக்கும் காரணத்தினால் இப்பாடலின் பொருளை வெளியிட கடமைப்பட்டுள்ளேன்.

பிழை இருப்பின் – மன்னிக்கவும்

நிறை இருப்பின் – அன்பைப் பகிரவும்

நன்றி

#Simtaangaran – Chennai Tamil

* பக்குரு – ஒரு வகை மீன் வலை

* பல்டி பக்குர – எமாத்தி பணத்த சுருட்டுரவன (வலை மீனை சுருட்டுவது போல)

* டர்ல – பயத்துல

* டர்ல உடணும் – பயத்துல வச்சுருக்கணும்

* பல்து – பல்தா கை – பெரிய ஆள், பலம் வாய்ந்தவன்

* வர்ல்டு – உலகம்

* பிஸ்து – பிஸ்தா

* பிசுறு கெள்ப்பி – தூள் கெளப்பு

* நெக்குலு – நக்கல்

* பிக்குலு – ஊர்காய்

* நெக்குலு பிக்குலு – கெத்தான காரசாரமான ஆள்

* தொக்கல் – அந்தரம்

* தொட்டன்னா தொக்கல் – அவன தொட்டன்னா அந்தரத்துல விட்டுடுவான்

* மக்கரு – பழுது

* தர்ல – தரையில

* அந்தரு – தகராறு

* சிம்டாங்காரன் – கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்

கண் சிமிட்டாம சிலர் பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் நம் # சிம்டாங்காரன்

* நின்டன் பாரன் – நிலையான ஒரு எடத்த எனக்குனு உருவாக்கிட்டேன் பார்

* முஸ்டு – உன்ன முடிச்சுட்டு

* அப்டிக்கா – அந்தப் பக்கம்

* பக்குல போடன், விர்ந்து வக்க போறன் – Buckle up n get ready for my treat

* கொக்கலங்கா – வட சென்னை விளையாட்டு

* குபீலு – பொங்கும் சிரிப்பு

* நம்ம புஷ்டுருக்க கோட்ட இல்ல, அல்லா ஜோரும் பேட்டயில – என் சர்கால கோட்டைகள் இல்ல, என் சந்தோஷமெல்லாம் என் மக்களிடத்தில்

* வர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் – Nov 6, 2018

இவ்வாறு பாடலாசிரியர் விவேக் தெரிவித்திருக்கிறார்.

பாடலாசிரியர் விவேக்கின் விளக்கத்தை  பல விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, முதலில் கண்டனம் தெரிவித்தவர்களையும் இந்த விளக்கத்தை படிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

நன்றி- தி இந்து

திறக்காத காட்டுக்குள்ளே

படம் : என் சுவாச காற்றே
பாடல் : திறக்காத
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சித்ரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

திறக்காத காட்டுக்குள்ளே
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத்
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும்
ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்
போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப்
போனது எங்கள் நாணம்

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ இல்லை உன்னைச்
சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது
அதோ அதோ அதோ அங்கே
ஐயையோ வானவில் இல்லை
வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது – புதிய
கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் யோசி

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்
போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப்
போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது
இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆகாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ
அவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்
போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப்
போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது
எங்கள் நாணம்

———-

அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ

திரைப்படம்:மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்:புலமைபித்தன் 
பாடகர்கள்:வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ (2)

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ (2)

ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன (2)
நாதம் இசைத்துவரும் பாத மணிச்சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன

எதுகை அது உனது இருக்கை
அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ
மறுகை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே (2)
வைகை என்னை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை
பெருகுவது நீந்தி கரை காணவே

நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே

திரைப்படம்:மதுரை வீரன்
இசை:ஜி. ராமநாதன்
இயற்றியவர்:கண்ணதாசன்
பாடகர்கள்:டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே …..
கீதம் பாடும் மொழியிலே …… (நாடகம் )

தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே …..
உங்கள் அன்பால் நேரிலே …… (நாடகம் )

கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே
எனையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
உன்னழகை பார்த்திருக்கும் ….
சுவாமி ….. கண்ணே …..
உன்னழகை பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே

அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே
கலை மாதை கண்டதாலே நிலை மாறி கெஞ்சுதே
வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா

ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே ….
பேரன்பால் நேரிலே …. (ஈருடல் )

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

பாடியவர்: P.சுசீலா
படம்: சிப்பிக்குள் முத்து
இசை: இளையராஜா

—————————————

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதிராஜனுக்கு இதமான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதிராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு ஆ..
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி

ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான
லாலி (வரம் தந்த)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே
கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே

கரு யானை முகனுக்கு மலையன்னை நானே
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே
பார்போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே
(வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே
ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே
ராமராஜனுக்கு வால்மீகி நானே
ராமராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே
ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ

————————————————-

ஒரு தாலாட்டுப் பாடலில் பிரம்மாண்டமான பாரம்பரிய

வரலாறுகளைச் சித்தரிக்கும் இந்தப் பாடல்  தாலாட்டுப்

பாடல்களில் சிறந்த ஒன்று என்று தயங்காமல் கூறலாம்!

—————

அன்றைய பெண் பாடகிகள். . .

அன்றைய பெண் பாடகிகள். . .

பெண் பாடகிகளுள் ஆர்.பாலசரஸ்வதி தேவி,  எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி, டி.எஸ். பகவதி, சரோஜினி போன்றோர் பல இனிமையான நெஞ்சம் மறக்கவியலா பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள்.  அவர்களின் பல பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள் இங்கே:

ஆர்.பாலசரஸ்வதி தேவி :

–  நீல வண்ண கண்ணா வாடா ( மங்கையர் திலகம் )

–  மலரோடு மதுர மேவும்
மனம் காணும் மோகன ராகம் ( ஜெயசிம்மன் )

–  துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே ( மர்ம வீரன் )

–  அன்பே பாவமா
அதிலேதும் பேதமா ( தேவதாஸ் )

–  விதிசெய்த சதியோ அத்தான் ( சுமங்கலி )

–  கண்ணாமூச்சி ஆட்டம் என்னடா ராஜா ( யார் பையன் )

எம். எல். வசந்தகுமாரி:

–  அய்யா சாமி ஆவோஜி சாமி  – ஓர் இரவு
–  கொஞ்சும் புறாவே – தாய் உள்ளம்

–  கூவாமல் கூவும் கோகிலம் – வைர மாலை
–  மஞ்சள் வெயில் மாலையிலே – காவேரி

–  கனியோ பாகோ கற்கண்டோ  – கற்புக்கரசி

–  கற்க கசடற கற்றபின் – ராஜ பக்தி

லீலா :

–  எங்குமே ஆனந்தம்          (பலே ராமன்)

–  காத்திருப்பான் கமலக்கண்ணன்           (உத்தமபுத்திரன்)

–  ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே (வஞ்சிக்கோட்டை வாலிபன்)

–  கன்னங்கறுத்த கிளி              (சிவகங்கை சீமை)
–  மாயமே நானறியேன், எனையாளும் மேரிமாதா (மிஸ்ஸியம்மா)

–  கானகமே எங்கள்       (யானை வளர்த்த வானம்பாடி)

–  ஏட்டில் படித்ததோடு    (குமாரராஜா)

ஏ பி கோமளா :

–  குயிலோசையை வெல்லும்
–  மாதா பிதா குரு தெய்வம்

–  நிலவோடு வான் முகில்

ஜமுனா ராணி :

–  என் ஆசையும் என் நேசமும்
ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா

–  செந்தமிழ் தேன் மொழியாள்

–  அக்காளுக்கு வளைகாப்பு
அத்தான் முகத்திலே புன்சிரிப்பு

–  காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு

–  சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா

–  பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை

–  அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

–  ஆதி மனிதன் காதலுக்குப் பின்
அடுத்த காதல் இது தான்

–  எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காணவா என்னில்
உன்னைக் காணவா வா வா

–  புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

–  மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு

–  யாரடி நீ மோகினி

–  மாமா,மாமா மாமா

–  குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே
இதுபோல இன்னும் எத்தனையெத்தனையோ தேனொழுகும் பாடல்களை தந்துள்ளனர் அன்றைய பெண் பாடகிகள்.

« Older entries