உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, லேசாக சுட வைத்த நீர் 
விட்டு கெட்டியாக பிசைந்து, இத்துடன் துருவிய கேரட்,
பீட்ரூட், காலிஃப்ளவர், பச்சை மிளகாய்,வெங்காயம்
சேர்த்து வதக்கி அடை செய்தால் சத்தான சுவையுடன்

கூடிய அடை ரெடி.


இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக
இருந்தால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து
மிக்சியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து
அதற்கு பின், இட்லிகள் வார்த்தால் இட்லி பூ மாதிரி

இருக்கும்.


கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமா?
பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக

வைத்தால் எளிதில் வெந்து விடும்.


கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற
வைத்து பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால்

மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.


தானியம் பயறு வகைகளை எட்டு மணி நேரம்
ஊற வைத்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள்
திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார்.

தானியங்களை முளை கட்டுவது ஒரு எளிய வழி.


உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல,
எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி
கடலை மாவில் தோய்த்து எண்ணெயில்

பொரித்தெடுத்து வெஜிடபிள் போண்டா செய்யலாம்.


மழைக்காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடும்.
அந்த சமயத்தில் நாலைந்து அரிசியை உப்பு
ஜாடியில் போட்டு வையுங்கள்.

உப்பில் தண்ணீர் படியாமல் இருக்கும்.


உளுந்தை கொஞ்சம் குறைவாகப் போட்டு
கெட்டியாக அரைத்து இட்லி வார்க்கும் போது
ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி
இட்லி வார்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.

இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாமலும்
இருக்கும்.பயணம் செல்லும் போது இது போன்ற

முறையில் இட்லி செய்யலாம்.


தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற
சாதங்களை தயாரிக்கும் போது பொட்டுக்
கடலையை வறுத்து கொட்டினால் மிகவும்

சுவையாக இருக்கும்.


இடியாப்பம் செய்து நிறைய மீந்து விட்டதா?
அதை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற
வைத்து நிழலில் உலர்த்தி வற்றலாக்கி விடுங்கள்.

நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக்
கொள்ளவும்.தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.

நல்லெண்ணெயில் வறுப்பது அதிக சுவையை கூட்டும்.


பிரட்டின் மேல் பகுதியை அதாவது பழுப்பு நிற பகுதியை
தனியாக எடுத்து மிக்ஸியில் அரைத்து அத்துடன் பாதி
அளவு அரிசி மற்றும் கடலை மாவு சம அளவு கலந்து,
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,

உப்பு சேர்த்து அப்பம் ஊற்றினால் சுவையாக இருக்கும்.


லைஃப்ஸ்டைல்- தினமணி

சமையல் குறிப்புகள்

இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய்ப்
பொடியுடன் சிறிதளவு தனியா அல்லது
வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து சேர்த்தால்
உடலுக்க நலம் பயக்கும்.

பா.குணா

—————————————–

ஜாமில் சிறிது தண்ணீர் விட்டுத் தளர்ச்சியாகக்
கரைத்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கிய வாழைப்பழத்துண்டுகள், முந்திரி,
திராட்சை,பாதாம் போட்டு ஸ்வீட் பச்சடியாகச்
செய்யலாம்

ஜி.நித்யா

————————————
மங்கையர் மலர்

சமையலில் செய்யக்கூடாதவை..! செய்ய வேண்டியவை..!

சமையலில் செய்யக்கூடாதவை..! 
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்
கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக
காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக
கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக
காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது
கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

—————————————–

செய்ய வேண்டியவை..!
************************
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க
வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச
வேண்டும்.

* போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம்
ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை
சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை
போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு
மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில்
போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின
பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும்
வரை கொதிக்க விட வேண்டும்.

——————————-
http://rajeshcs73.blogspot.com/2016/01/blog-post_4.html

காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்?

Cauliflower-and-Broccoli-with-Fresh-Herb-Butter-4

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:

முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர், ஈரத்தை துடைத்துவிட்டு, காட்டன் துணியில் சுற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை நீக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பின்னர் பயன்படுத்த வேண்டும்.

வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய் போன்றவைகளை மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி தண்ணீரில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்துவிட்டு பின்பு மீண்டும் கழுவி, துடைத்து பயன்படுத்தலாம்.

காலிஃபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுத்து. அவைகளை வினிகர் அல்லது உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பின்னர் மீண்டும் கழுவி பயன்படுத்தவேண்டும்.

மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

கொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.
– என். சண்முகம்

தினமணி

முருங்கை கீரை இட்லி பொடி!

தேவையான பொருட்கள்:

நிழலில் உலர்த்திய முருங்கைக் கீரை – 2 கப்
உளுந்து – 1 கப்
பூண்டு – 10 பல்
காய்ந்த மிளகாய் – 20
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி.

செய்முறை:

வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,
உளுந்து, பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு, சிவக்க
வறுக்கவும்.

இந்த கலவையுடன், முருங்கை கீரையை நன்றாக
கலக்கவும்.

இந்த கலவை ஆறிய பின், தேவையான உப்பு போட்டு
பொடியாக அரைக்கவும். முருங்கை கீரை இட்லி பொடி தயார்.
இந்த பொடியில், நல்லெண்ணெய் ஊற்றி, இட்லி, தோசைக்கு
தொட்டுக் கொள்ள கொடுக்கலாம்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
இரும்புச்சத்து கிடைக்கும். உளுந்து கலந்துள்ளதால்,
இடுப்பு வலியை தீர்க்கும் மருந்து ஆகும்.

———————————–
– மு.அமுதா, மதுரை.
சிறுவர் மலர்

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல!

wow

வலைதளத்திலிருந்து…

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொறிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம்.

ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால்… சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத

போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

‘பல்லிருக்கவன் பகோடா திங்கான்’ என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

நன்றி – paamaranpakkangal,தினமணி

 

ராகி சேமியா பிரியாணி!

தேவையான பொருட்கள்:

ராகி சேமியா — 1 கப்
பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பட்டை – 1
ஏலக்காய், கிராம்பு – 2
கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மஞ்சள் துாள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் துாள் – 1/2 மேஜைக்கரண்டி
எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை,
புதினா – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில், எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய்,
கிராம்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி,
அதில், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி,
மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள்,
தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட்,
உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்கவும்;

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு
கப் நீர் ஊற்றவும்.

நீர் கொதித்தவுடன், ராகி சேமியாவைப் போட்டு கிளறி,
அடுப்பை, ‘சிம்’மில் வைத்து, கொத்தமல்லி தழை
துாவினால், ராகி சேமியா பிரியாணி தயார்.

சாப்பிட சுவையாக இருக்கும்; ராகி சாப்பிடாத
குழந்தைகளும், இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவர்;
இரும்புச் சத்து அதிகம் உள்ள ராகியை, பிரியாணியாக
செய்து சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.

——————————-
– ஆர்.நுார்ஜஹான், கடலுார்.
சிறுவர் மலர்

ஆவாரம் பூ சட்னி

10462788_270105256511039_5812403900579968368_n.jpg

DCFC0011.JPG

ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து.
பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை
அளிக்கக்கூடியவை.

தேவையானவை:

ஆவாரம்பூ : ஒரு கைப்பிடி

தேங்காய்த்துருவல் : ஒரு கப்

காய்ந்த மிளகாய் : 2

புளி, உப்பு : சிறிது

பூண்டு : 2 பல்

தாளிக்க:

எண்ணெய் : ஒரு டீஸ்பூன்

கடுகு : கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு : கால் டீஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி,
அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு,
ஆவாரம்பூ, புளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு,
கருகிவிடாமல் வதக்கவும்.

ஆறிய பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து,
சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
ஃப்ரெஷ் ஆவாரம்பூ கிடைக்கவில்லை என்றால்,
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற உலரவைத்த
பூவையும் பயன்படுத்தலாம்.

பலன்கள்:
ஆவாரம்பூ உடல் சூடு தணிக்கும். நாவறட்சி நீக்கும்;
கண் எரிச்சல் தீர்க்கும். மூலநோய் குணமாக உதவும்.
சருமப் பொலிவுக்கு உதவும். உடலை பலப்படுத்தும்.
சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

—————————————-
நன்றி
https://senthilvayal.com/2018/10/23/

மைசூரு கடுகு சாதம்

IMG_1849.JPG

IMG_1849.JPG 1.JPG

பாஸந்தி – பிரசாதம் இது பிரமாதம்

« Older entries