நீதிக்கதை- சேவலும் இரத்தினக் கல்லும்
ஒக்ரோபர் 31, 2018 இல் 12:18 பிப (ஒரு பக்க கதை)
அது ஒரு அழகிய பனிக்காலம்.
சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து
அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன்
கிளம்பியது.
அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.
அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா
என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது.
அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத
இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.
அந்த கல்லை சேவல்
திருப்பித் திருப்பிப் போட்டது.
அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன்
“இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின
வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு
இதன் மதிப்பு தெரியும்.
நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால்
அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்”
இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.
நீதி:
ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச்
சிறந்ததாகும்.
–
—————————
வாட்ஸ் அப் பகிர்வு