மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம், அதற்காக யோகா, தியானம் என பல வழிகளை தேடி செல்கிறோம்.
அதற்கு எளிய வழியாக நம் வீட்டில் இருக்கும் பிரியாணி இலை தீர்வாகிறது.
இதை கண்டுபிடித்தவர் ரஷ்ய ஆய்வாளர் கென்னடி. இவரின் கூற்றுப்படி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கூறியுள்ளார்.
முதல் கட்டமாக மனதை அமைதி அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து மனதை அமைதியுடனும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.
மேலும் பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால் வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.
நன்றி: தமிழ் கோரா
மறுமொழியொன்றை இடுங்கள்