க.அருச்சுணன் எழுதிய, ‘பெரியோர் வாழ்வில்
சுவையானவை’ நுாலிலிருந்து:
அமெரிக்காவில், மெட்காப் நகர் மகளிர் மன்றத்தில்,
விவேகானந்தர் பேச்சை கேட்டு வியந்த இளம் பெண்
ஒருவர், அவரை தனிமையில் சந்தித்து பேச ஆவல்
கொண்டார்.
பல இடங்களில் விவேகானந்தரை சந்திக்க வாய்ப்பு
கிடைத்தாலும், தனியாக அவரிடம் பேச முடியவில்லை.
எங்கும் அவரைச் சுற்றி ஏராளமான கூட்டம்.
அமெரிக்காவிலிருந்து, பாரீஸ் புறப்படும் சமயம்…
அமெரிக்க விமான தளத்தில், விவேகானந்தரை,
அப்பெண் சந்தித்து, ‘தங்களிடம் தனியாக பேச வேண்டும்…’
என்றார்.
கூட்டத்திலிருந்து தனியாக வந்த, விவேகானந்தர்,
‘சொல்லு தாயே…’ என்றார்.
அந்த பெண்ணுக்கு வயது, 20 இருக்கும். விவேகானந்தருக்கு,
30 வயது. அந்த பெண், நவநாகரிக மங்கை; விவேகானந்தரோ,
முற்றும் துறந்த முனிவர்.
‘அமெரிக்க இளைஞர்கள் பலர், என் அழகில் மயங்கி,
என்னை சுற்றி வருகின்றனர். நானோ, உங்கள் அறிவில்
மயங்கி, உங்களை சுற்றி வருகிறேன்…’ என்றார்.
‘நான் என்ன செய்ய வேண்டும் தாயே…’ என்றார்,
விவேகானந்தர்.
‘என்னுடைய அழகும், உங்களுடைய அறிவும் சேர்ந்தால்,
எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து
கொண்டால், என் அழகோடும், உங்கள் அறிவோடும்
குழந்தை பிறக்கும்.
அதற்காக தான், உங்களை தனியாக பேச அழைத்தேன்…’
என்றார், அப்பெண்.
‘தாயே… எனக்கு, 30 வயது. உங்களுக்கோ, 20 வயது
இருக்கலாம்… நாம் திருமணம் செய்து, நமக்கு குழந்தை
பிறந்து, வளர்ந்து, 20 வயதை தொடுகிற போதுதான்,
அந்த குழந்தை அறிவுமிக்கதா, இல்லையா என்பது
தெரியும்.
‘அதற்கு பதிலாக, என்னையே நீங்கள், மகனாக ஏற்றுக்
கொள்ளலாமே… இன்று முதல் நான், உங்கள் மகன்…’
என்றார், விவேகானந்தர்.
எல்லா பெண்களையும், தாயாக காணுகிற விவேகானந்தர்
குணம், அப்போது தான், அப்பெண்ணுக்கு, புரிந்தது.
–
—————————
மறுமொழியொன்றை இடுங்கள்