ச.குமார் எழுதிய, ‘சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்’
என்ற நுாலிலிருந்து:
விவேகானந்தரின் இயற்பெயர், நரேந்திரநாத்.
சிறு வயதில் நரேந்திரநாத், பெரியவர்களை பார்த்து,
அவரது நண்பர்களுடன் சேர்ந்து தியானம் செய்ய
அமர்வார்.
சிறிது நேரத்திலேயே அவருக்கு, தியானம் கை கூடிவிடும்.
இதை புரிந்து கொள்ளாத அவரது நண்பர்கள்,
‘நரேந்திரநாத் உட்கார்ந்து கொண்டே துாங்குகிறார்…’
என்று, கேலி செய்வர்.
ஒருநாள், இப்படி அவரும், நண்பர்களும் தியானம் செய்யும்
போது, அந்த அறையினுள் நாகப் பாம்பு ஊர்ந்து வந்தது.
இதை பார்த்த சக நண்பர்கள் பயந்து, ‘ஓடு ஓடு… நரேந்திரா
பாம்புடா…’ என்று, அலறி, ஓடினர்.
ஆனால், நரேந்திரநாத் மட்டும், தியானத்திலிருந்து
எழவில்லை.
பாம்பு தன் நண்பனை கடித்து விடுமே என்று பயந்து
உற்று நோக்கினர்.
சிறிது நேரத்தில், வந்த வழியே போய் விட்டது, பாம்பு.
–
——————————–
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்