“பெங்கால் ரசகுல்லா’ என்று புவிசார் குறியீடு பெற்றதன்
ஓராண்டு நிறைவையொட்டி, வரும் 14-ஆம் தேதியை
ரசகுல்லா தினமாகக் கொண்டாட மேற்கு வங்க அரசு
முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
கொல்கத்தாவில் நியூ டவுன் பகுதியில் அமைக்கப்படும்
இனிப்பு அரங்கில், விதவிதமான ரசகுல்லா வகைகள்
14-ஆம் தேதி காட்சிக்கு வைக்கப்படும்.
ரசகுல்லா இனிப்புக்கு புவிசார் குறியீடு பெற்று ஓராண்டு
ஆகியதை கொண்டாடும் வகையில் இனிப்பு
தயாரிப்பாளர்களுடன் இணைந்து இந்த அரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி, ரசகுல்லா இனிப்புக்கு
மேற்கு வங்க அரசு புவிசார் குறியீடு பெற்றது.
ஒடிஸாவும் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரியிருந்தது
நினைவுகூரத்தக்கது.
–
———————————–
தினமலர்
மறுமொழியொன்றை இடுங்கள்